காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசியதாக தகவல்

2021-08-16@ 16:00:20

சென்னை: காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து, மனநல ஆலோசகரை உடன் வைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். போலீசாரைச் கண்டதும் நடிகை மீரா மிதுன் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.