சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து 35,176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு தனி காதல் இருந்து வருகிறது. ஒருவரின் சமூக அந்தஸ்தை காட்டும் உலோகமாக, அவசர நிதி தேவைகளுக்கு உதவும் நண்பனாக, தங்கம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலத்திலும் அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு சில நாட்கள் மட்டுமே விலைச் சரிவு காணப்படுகிறது. நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,395 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,759 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,072-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,397க்கும், ஒரு சவரன் ரூ.35,176 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் 8 கிராம் ரூ.38,088க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.67.50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.67.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.