கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் தர வேண்டும்?.. ஐகோர்ட் கிளை கேள்வி

2021-05-07@ 19:41:21

மதுரை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் தர வேண்டும் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள் மீது எத்தனை புகார்கள் வந்துள்ளன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.