அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: பகல் 12 மணி முதல் உணவகம், மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் அடைப்பு !
2021-05-06@ 12:34:48

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் தற்போது, அமலுக்கு வந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு தினமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் யாராவது வாகனங்களில் வந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் பகல் 12 மணி முதல் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு நோட்டீஸ்
கும்மிடிப்பூண்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று வருகை
நடிகையும், பாடகருமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி; தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்டரில் பதிவு
அதிர்ச்சியில் நகை பிரியர்கள்: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,560-க்கு விற்பனை !
25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கிய கோமகனின் மறைவு நெஞ்சை நொறுக்கியது: இயக்குனர் சேரன் இரங்கல்!!