ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, இரவு ஊரடங்கை ரத்து செய்ய கோரிய வழக்கு.: மத்திய ,மாநில அரசுகள் பதில் தர ஆணை

2021-05-05@ 12:47:42

சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, இரவு ஊரடங்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் மத்திய ,மாநில அரசுகள் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கால் ஒரு பயனும் கிடையாது என மனுதாரர் கூறியுள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் சனிக்கிழமை அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.