நன்னிலம் அருகே மின் கம்பியில் சிக்கி மயில் காயம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
2021-05-04@ 12:55:12

திருவாரூர்: நன்னிலம் அருகே மின் கம்பியில் சிக்கி காயமடைந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிளை குப்பம் பகுதியில் வயல் வெளி வழியாக மின்சாரம் சென்று கொண்டிருந்த மின் கம்பியில் மயில் ஒன்று சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி மயிலை உயிரோடு காப்பாற்றினர். பின்னர், கால்நடைதுறை மருத்துவர் மூலம் மயிலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பை ஒப்படைக்கப் பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்து மயிலை காப்பாற்றிய நன்னிலம் தீயணைப்பு துறை வீரர்களை அப்பகுதி மக்கள் பாரா ட்டி நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கைகள் நிரம்பியது: ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை
மதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் ஆய்வு
பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்து இரண்டு மாதத்தில் ஒரு கோடி இளநீர் ஏற்றுமதி
பெதப்பம்பட்டி விற்பனைக் கூடத்தில் கொப்பரை உற்பத்தி செய்யும் இயந்திரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்: மக்கள் வருகை இல்லாமல் பொலிவிழந்த சிம்ஸ் பூங்கா
ஊட்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்க் அமைக்கும் பணி தீவிரம்