கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.....

2021-05-03@ 23:14:00

சென்னை: தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே தேனீர் கடைகள் செயல்படும். ரயில், மெட்ரோ, தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் காய்கறி, பழ சரக்கு, மளிகைக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் இரவுப் பணி மேற்கொள்ள அனுமதி,  பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் 06-04-2021 தேதியிலிருந்து 20-06-2021 வரை அமலில் இருக்கும்.