நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் மயங்கி கீழே விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெண் காவலர் ராஜேஸ்வரியை சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மருத்துவரின் காரில் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.