சென்னை: காடுதிருத்தி நாடமைத்தவர் உழைப்பாளர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அக்காலம் முதல், நவீன உலகின் சௌகரியங்களுக்காகத் தம் சக்தியைப் பங்களித்துவரும் உழைப்பாளர்களே நம் அன்றாட வாழ்வை இயக்குகின்றனர். சுழலும் உலகின் அச்சாணியாய் இலங்குவோருக்கு உழைப்பாளர் நாள் வணக்கங்கள் என கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.