சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மாலை 5 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி , கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.