ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஐதராபாத் வந்து சேர்ந்தது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து 1.50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரத்தியேக பெட்டகங்களில் வந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.
ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும், ரெட்டிஸ் நிறுவனம் முடித்துவிட்டது.
அவசரத் தேவைக்காக ஸ்புட்னிக்- 5 தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து, முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்தது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஐதராபாத் வந்து சேர்ந்தது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து 1.50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரத்தியேக பெட்டகங்களில் வந்துள்ளன.