அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா தொற்று

2021-04-30@ 02:00:36

திருச்சி: தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் வளர்மதி. திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு, கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று தெரியவந்தது. அதில் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.