டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3498 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 3,86,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,87,62,976 ஆக உயர்ந்தது.
* புதிதாக 3498 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,08,330 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,97,540 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31,70,228 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.99% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 16.90% ஆக அதிகரித்துள்ளது.
* இதன் மூலம், நாட்டின் இதுவரை 15,22,45,179 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.