சென்னை: பெண் தீக்குளித்து மரணமடைந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.ஆய்வாளர் அலெக்சாண்டர், எஸ்.ஐ சரவணன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மனமுடைந்து தீக்குளித்த பெண்ணின் கணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.