இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தாலும், அதை கொண்டு உரிய இடங்களுக்கு செல்வதில் சிக்கல்

2021-04-27@ 15:23:39

டெல்லி: இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தாலும், அதை கொண்டு உரிய இடங்களுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருவதாக லாரி உரிமையாளர் நல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆக்சிஜனை சுமந்து செல்வதற்காக 5,000 டேங்கர் லாரிகள் மட்டுமே உள்ளது. 5,000 ஆக்சிஜன் டேங்கர்களில் கிரையோஜெனிக் எஞ்சின் கொண்ட டேங்கர் 1,700 மட்டுமே உள்ளதாக லாரி உரிமையாளர் நளகூட்டமைப்பு கூறியுள்ளது.