Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்டிரைக் நியாயமே... - காரணங்களை அடுக்கும் பிஜி முத்தையா

05 ஏப், 2018 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Why-Strike-in-Tamil-Cinema-:-PG-Muthaiah-list-out-the-points

மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் சினிமா முடங்கி உள்ளது. ஒருமாதம் கடந்த பின்னரும் ஸ்டிரைக் நீடிக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இப்படியொரு ஸ்டிரைக் நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான். திரையுலக ஸ்டிரைக்கிற்கு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும், நடிகர்களும், டெக்னீஷியன்களும் துணை நிற்கிறார்கள்.

இந்த ஸ்டிரைக் நியாயம் தான் என்றும், சினிமா தொழில் இப்படி தவிக்க என்ன காரணம் என ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பிஜி முத்தையா சில காரணங்களை முன் வைக்கிறார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது...

தற்போது தமிழ்திரையுலகம் மிகுந்த நெருக்கடியில் உள்ளதை நாம் அனைவருமே அறிவோம். முழு முதல் காரணம் பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் அந்தப் பணத்தை திரும்ப பெற வாய்ப்பே இல்லாத பரிதாபகரமான சூழலில் தமிழ் சினிமா தயாரிப்பு தொழில் இயந்திரத்தில் சிக்கிய கரும்பாய் தவிப்பதற்கு முக்கிய காரணங்கள்...

1. சிறிய முதலீட்டுப் படங்களுக்கு மினிமம் கியாரண்ட்டி உத்திரவாதம் இல்லை.

2. சிறு படங்களை வாங்க எவரும் முன்வருவதில்லை. தயாரிப்பாளரே விநியோகஸ்தராக செயல்பட வேண்டிய கட்டாயம்.

3. தயாரிப்பின் மூன்று நிலை மற்றும் வணிகம் என அனைத்து நிலையிலும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் பொழுதுபோக்கு வரி.

4. திரையரங்கிற்கும் வாடகை பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்.

5. கூடுதலாக க்யூப், யூஎப்ஓ கட்டணம் கட்டியாக வேண்டும்.

6. இவ்வளவுக்கும் தயாராக இருந்தாலும் சிறு படங்களுக்கு தியேட்டர் தர மறுக்கும் அவலம்.

7. தியேட்டர் தந்தாலும் சஸ்டெயினிங் டைம் எனப்படும் வெற்றிக்கு உகந்த நேரம் வழங்காமல் ஒரேநாளில் ஒரே காட்சியில் கூட்டம் இல்லை எனக் கூறி திரைப்படத்தை நிறுத்திவிடுவது.

8. இவ்வளவு துன்பத்தையும் மீறி படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு உண்மை கணக்கு காட்டாமல் திருட்டு கணக்கு காட்டும் திரையரங்கங்கள்.

9. இது அனைத்திலும் கொடிய திருட்டு விசிடி சவால். இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை உண்மையில் மாபெரும் தியாகிகள் என்றே சொல்லலாம்.

இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் திருட்டு டிக்கெட் இல்லாத ஆன் லைன் டிக்கெடிங்கை வலியுறுத்துகிறது. இந்த நொடி வரை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். க்யூப் கட்டணத்தையும் குறைக்க மறுக்கிறார்கள். அதனால் தான் ஸ்டைரைக் தொடர்கிறது. இந்த ஸ்டரைக் காலத்தின் கட்டாயம். இல்லையேல் கார்பரேட் முதலாளிகள் மட்டும் தான் படம் எடுக்க முடியும். சிறு தயாரிப்பாளர்கள் என்கிற வர்கமே இல்லாமல் போய்விடும்.

எனவே தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்துப் போராடும் கோரிக்கைகள் நியாமானவை மற்றும் அவசியமானவை. தமிழ் சினிமா தயாரிப்பு துறையை காப்பாற்ற தற்போது எடுத்திருக்கும் நிலைபாட்டிற்கு துணை நின்று, நமது சங்கமும் நாமும் இந்தமுறை வென்று காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை இல்லை - சசிகுமார்விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்னை ... மான் வேட்டை வழக்கு : சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை மான் வேட்டை வழக்கு : சல்மான் கானுக்கு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
Tamil New Film Pariyerum perumal
Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in