கர்நாடகா - ரஜினி, கமலுக்கு எதிர்ப்பு, பிரகாஷ்ராஜ் பேசுவாரா ? | எதிர்ப்புக்கு பணிந்தார் கார்த்திக் சுப்பராஜ் | மெர்க்குரி ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜுக்கு கடும் எதிர்ப்பு | காலா ரிலீஸ் தேதியை பயன்படுத்திக்கொண்ட வினீத் சீனிவாசன் | புருவ அழகியை சந்தித்த சித்தார்த் | ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்து கொடுத்த ஜெயராம் படம் | முடிவுக்கு வந்தது நைஜீரியா நடிகரின் சம்பள பிரச்சனை | 3 மணி நேரத்தை தாண்டும் 'கம்மர சம்பவம்' | புடவைதான் பெண்களுக்கு அழகு, எமி ஜாக்சன் சொல்கிறார் | மீண்டும் 'சிங்கம்' - ஆஆஆ... அலற வைக்கும் ஹரி ? |
தமிழ்த் திரையலகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்ற சங்கங்களுடன் நடைபெற்று வருகின்றன.
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் விஷால், செயலாளர்கள் துரைராஜ், கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் மட்டுமே பேச்சு வார்த்தைகளில் பங்கு பெறுகின்றனர். ஆனால், துணைத் தலைவர்களாக இருக்கும் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகிய இருவரும் இதுவரை நடைபெற்ற எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் பங்கு கொள்ளவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்திற்காக அவர்கள் இருவரும் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சில கூட்டங்களில் மட்டும் தலை காட்டினார்கள். அதன்பின் சங்கத்தில் எந்தவிமான ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ் பெங்களூருவிலேயேதான் பெரும்பாலும் இருக்கிறார். கௌதம் மேனன் மீது இதுவரை மூன்று பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.