காவிரி போராட்டம் தீவிரம்; கவர்னர் டில்லி பயணம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி போராட்டம் தீவிரம்
கவர்னர் டில்லி பயணம்

சென்னை : மத்திய அரசுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று டில்லி புறப்பட்டு சென்றது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Delhi,Governor,ஆளுநர்,கவர்னர்,டில்லி


மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க

வலியுறுத்தியும், தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க., சார்பில், இன்று மாவட்ட தலைநகரங்களில், உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. வியாபாரிகள், கடையடைப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சிகள், வரும், 5ல், 'பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இதையடுத்து, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர், நிரஞ்சன் மார்டி மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம், சட்டம் ஒழுங்கு குறித்து, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார். நேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி கவர்னர், கிரண்பேடி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement

இந்நிலையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று இரவு, 7:20 மணி விமானத்தில், டில்லி சென்றார். அவர், காவிரி பிரச்னையில், தமிழகத்தில் வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (5+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
03-ஏப்-201802:10:25 IST Report Abuse

ramasamy naickenவிமானத்தில் ஒரு ஓரத்தில் பழநியையும், பன்னீரையும் உட்கார வைத்து கூட்டிக்கொண்டு போங்கள் சாமி.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
03-ஏப்-201801:53:50 IST Report Abuse

அன்புசட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என்று சொல்லி, பழனி அரசை கவிழ்ப்பது பிஜேபி கட்சிக்கு நல்லது.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஏப்-201801:32:46 IST Report Abuse

தமிழ்வேல் OPS மீண்டும் தர்ம யுத்தம் செய்யணுமா ...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஏப்-201801:30:03 IST Report Abuse

தமிழ்வேல் அங்கேயே தங்கிடுறது நல்லது..

Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
03-ஏப்-201801:17:16 IST Report Abuse

வெகுளிகவர்னர் ஐயா, காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை கொடுத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துங்கள்..... அப்படியே தமிழக வாட்டாள்கள் கர்நாடக சீமான்கள் போன்ற மக்களை பிரிக்கும் கலகக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான பிரிவுகளில் பிடித்து போடும்படி கோரிக்கை வையுங்கள்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement