மத்திய அரசை எதிர்த்த, அ.தி.மு.க.,வின் உண்ணாவிரதம்... வெற்றி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,உண்ணாவிரதம்,காவிரி

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., நேற்று நடத்திய உண்ணாவிரதம், அறவழியில் நடந்த வெற்றிகரமான போராட்டமாக அமைந்தது. தமிழகம் முழுவதும், அமைச்சர்கள் தலைமையில், ஆளும் கட்சியினர், எட்டு மணி நேரம், உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், முன்னறிவிப்பின்றி பங்கேற்ற, முதல்வர் பழனிசாமி, 'தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் போனதற்கு, தி.மு.க.,வே காரணம்' என, கடுமையாக சாடினார்.

A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,உண்ணாவிரதம்,காவிரி


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், நேற்று மாவட்ட தலைநகரங்களில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதத்திற்கு, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமை வகித்தனர். சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு, அமைச்சர் ஜெயகுமார் தலைமை வகித்தார். ஆனால், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர், பன்னீர்செல்வமும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், இப்போராட்டத்தில் பங்கேற்றனர். கட்சியினருடன் சேர்ந்து, எட்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தனர்.

துரோகம்:


மாலை, 5:00 மணி அளவில், உண்ணாவிரத பந்தலில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நம் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, உண்ணாவிரதம் நடத்தி உள்ளோம். காலை, 8:00 மணிக்கு, உண்ணாவிரதத்தை துவக்கினோம். அப்போதிலிருந்து, அமர்ந்த இடத்திலிருந்து, நகராமல் இருந்தோம்.

காவிரி பிரச்னை, டெல்டா விவசாயிகளோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வோடும் பின்னி பிணைந்துள்ளது.

மைசூரு அரசுடன், 1924ல், போடப்பட்ட ஒப்பந்தத்தை, 1974ல், புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது, ஆட்சியில் இருந்த, தி.மு.க., அதை செய்திருந்தால், இத்தனை ஆண்டு காலம், நாம் போராட வேண்டியிருக்காது. சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து, ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், விவசாயிகளுக்கு, தி.மு.க., துரோகம் செய்தது.

'ஆறு வாரத்திற்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, பிப்., 16ல், மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு, அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, மத்திய அரசை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்கிறோம்.

நம் கட்சி, எம்.பி.,க்கள் தொடர்ந்து, 19 நாட்களாக, பார்லிமென்டை முடக்கி உள்ளனர். எந்த அளவுக்கு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். ஏப்., 2ல், மத்திய அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். காவிரி நீர் பிரச்னைக்காக, ஜெ., எந்த அளவுக்கு போராட்டம் நடத்தினாரோ, அதே அளவுக்கு, இந்த அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி, 'உங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர், நிச்சயம் கிடைக்கும்' என, உறுதி அளித்துள்ளார். நாம் கபட நாடகமாடுவதாக, ஸ்டாலின் கூறுகிறார். 1974ல், தி.மு.க., தான் கபட நாடக கதாநாயகனாக இருந்தது. அவர்கள், மத்திய ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி, காவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்; அதை, அவர்கள் செய்யவில்லை. சந்தர்ப்பத்தை தவற விட்டு, தமிழகத்திற்கு துரோகம் செய்தனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

கபட நாடகம்:


துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியதாவது: காவிரி நடுவர் மன்றம், 2007ல், இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது, தி.மு.க., ஆட்சி நடந்தது; மத்திய கூட்டணி அரசிலும் இடம் பெற்றிருந்தது. அப்போது, ஜெயலலிதா, 'காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை,

Advertisement

அரசிதழில் வெளியிடச் செய்யுங்கள்' என, முதல்வராக இருந்த, கருணாநிதியிடம் கூறினார்; அவர் செவி சாய்க்கவில்லை. இதற்காக, ஜெ., உண்ணாவிரதம் இருந்தார்.

மீண்டும், ஜெ., முதல்வரானதும், சட்டப் போராட்டம் நடத்தி, 2013ல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார். இதை, தமிழக மக்கள் மறந்து விடுவர் என நினைத்து, தி.மு.க.,வும் காங்கிரசும், கபட நாடகம் நடத்துகின்றன. காவிரி பிரச்னையில், அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றன. காவிரியில், ராஜ துரோகம் செய்தது, தி.மு.க., தான். அவர்களால் தான், இந்த அளவுக்கு பிரச்னை வந்தது.

தற்போது கூட, 'இப்பிரச்னையை, ஒன்றாக இருந்து அணுகுவோம்' என, சட்டசபையில் தெரிவித்தேன். தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் முந்திக்கொண்டு, அரசியல் லாபம் தேட, போராட்டம் என, மக்களை திசை திருப்புகிறார். நாம், நம் நிலையில் தெளிவாக உள்ளோம். எந்த சூழ்நிலையிலும், தமிழகத்தின் ஜீவாதார உரிமையை, ஜெ., விட்டு கொடுக்கவில்லை. அவரது வழியில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் வரை, எங்களின் அறவழிப் போராட்டம் தொடரும். இவ்வாறு பன்னீர் செல்வம் பேசினார்.

ரகசியம் காத்த முதல்வர்!

உண்ணாவிரதத்திற்கு, தலைமை ஏற்போர் பட்டியலை, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டது. அதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர் இல்லை. நேற்று இருவரும், சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இது குறித்த தகவலை, இருவரும் ரகசியமாக வைத்திருந்தனர். நேற்று காலை, 8:05 மணிக்கு, முதல்வர் பழனிசாமி வந்தார். காலை, 8:15 மணிக்கு, துணை முதல்வர் வந்தார். அதன் பிறகே, அமைச்சர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஓடி வந்தனர். முதல்வர் வரும் விபரம், போலீசாருக்கு தெரிவிக்கப்படாததால், வழிநெடுகிலும் பாதுகாப்பு போடப்படவில்லை.



சுண்டல் விற்பனை அமோகம்!

உண்ணாவிரதத்தில், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் தகவல் இல்லாததால், அ.தி.மு.க.,வினர், பெரிய அளவில் ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள், திடீரென வந்ததும், கட்சியினர் திரண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து, கூடுதலாக பந்தல் போடப்பட்டது. உண்ணாவிரதத்தில், மதியம் வரை யாரும் பேசவில்லை. அப்போது, திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை' என்ற, எம்.ஜி.ஆர்., பாடல் ஒலிபரப்பானதும், பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அந்தப் பாடலை நிறுத்திவிட்டு, வேறு பாடலை ஒலிபரப்பினர். உண்ணாவிரதம் நடந்த பகுதியில், மோர், ஜூஸ், சமோசா, சுண்டல், மாங்காய், வெள்ளரி விற்பனை, அமோகமாக நடந்தது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (7+ 123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
04-ஏப்-201805:22:00 IST Report Abuse

Palanisamy Sekarரகசியமாமே பெரிய ரகசியம்.. மோடி முதலாளி உத்தரவை கொடுத்த பின்னால் தான் நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டபின்னர் ஸ்பாட்டுக்கு வந்தார்கள் இந்த காமெடி முதல்வர்கள். இவர்கள் இருந்த உண்ணாவிரதம் அடுத்த நொடியில் காவிரியில் கர்நாடக நீர் கரைபுரண்டு ஓடோடி நிக்காமல் பாஞ்சு பாஞ்சு ஒரே ஒரு மணி நேரத்தில் மேட்டூருக்கு கூட போக நேரமில்லாமல் தஞ்சாவூருக்கு போயிடுச்சாமே. அதனால் இந்த கூவு கூவுறாங்க வெற்றியோ வெற்றின்னு. இது இவர்களுக்கு வேடிக்கை..ஆட்சியில் அமர்ந்திட ஒரு சாக்கு. முழுமனதோடு இவர்கள் இருந்திருப்பார்கள் என்றால் ஓரளவு அதன் பாதிப்பு இருந்திருக்கும். திமுக செய்தது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத குற்றம் தான். இந்த ஜெயக்குமார் அமைச்சர் தேவையில்லாம உளறுவாரே மத்திய அரசாங்கத்திடம் நாசூக்காக நடந்துகொண்டு காரியத்தை சாதிக்கணும்னு...அதனை எப்போதுமேதானே செய்கின்றார்கள்..ஏதாச்சும் சாதித்துள்ளார்களா? இல்லையே. நேற்று நடந்த கோமாளித்தனம் இதுவரை இல்லாத அளவுக்கு உண்ணாவிரதத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது. பிரியாணி ஒன்றுதான் அங்கே பரிமாறப்படவில்லை.. இதனை பார்த்தல் கர்நாடகாகாரன் இவர்களை மதிப்பானா? விவசாயிகளை மோடி சர்க்கார் மதிக்காத போக்கிற்க்கு இந்த அடிமை அரசாங்கமும் கூட ஒத்தூதி உள்ளது..உருப்படாத ஜென்மங்களுக்கு வெற்றி வெத்து கோஷங்கள்..

Rate this:
04-ஏப்-201804:36:44 IST Report Abuse

தீதும் நன்றும் பிறர் தர வாராவெற்றியாம் வெற்றி.. எதுல வெற்றி?? உண்ணாவிரதம் இருந்தது ஒரு வெற்றியா?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201804:20:13 IST Report Abuse

Kasimani Baskaranபந்தலுக்கு பின்புறம் வெட்டோ வெட்டென்று ஒரு கூட்டம் வெட்டிக்கொண்டு இருந்ததை எவனோ படம் எடுத்து அனுப்பி இருந்தான்... ஆனால் இவர்கள் இங்கு பெரிய அலப்பறையை கொடுத்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.... தமிழக அரசியல் வாதிகள் மொத்தமாக நாடகக்கம்பெனி ஆரம்பித்தால் அமோகமாக வளரலாம்...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
04-ஏப்-201802:02:42 IST Report Abuse

அன்புஉண்ணாவிரத போராட்டத்தில் பழனியும் பன்னீரும் தங்கள் பெயரை கூட போடுவதற்கு மத்திய அரசிற்கு அஞ்சி நடுங்கி உள்ளார்கள். பின்னர் போராட்டத்திற்கு வந்து, திமுக தான் காவேரி பிரச்சனைக்கு காரணம் என்று சகட்டு மேனிக்கு பேசி, தங்கள் விசுவாசத்தை மோடிக்கு காட்டினார்கள். மத்திய அரசு காவேரி வாரியம் அமைக்காததற்காக இந்த போராட்டமா? அல்லது திமுக எழுபதுகளில் செய்த தவறுக்காக இப்போது போராட்டமா? என்று சந்தேகம் கொள்ளும்படி, வீராவேசமாக பழனி பேசினார். எச் ராஜாவின் இல்லாத அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த வீர மகன் அவர். பழனி தைரியமாக உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்ததே பெரிய விஷயம். தான் மட்டும் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக, பழனி வசமாக பன்னீரையும் இழுத்துவந்துள்ளார். போராட்டத்தில் இருந்து வந்தவுடன், தமிழக முதல்வர் குருமூர்த்திக்கு போன் பண்ணி, அஜீரணம் ஆகவில்லை. செரிப்பதற்காகத்தான் உண்ணாவிரதம் என்று ஆறுதல் சொல்லி இருப்பார்கள்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
04-ஏப்-201801:07:44 IST Report Abuse

Kuppuswamykesavan1967-ஆம் வருடத்தில் இருந்து பாருங்க, யார் யார், காரணம்னு தெரியும், காவேரி நீர் கானலாகி போனதற்கு.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201800:50:48 IST Report Abuse

Mani . Vமத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த இவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?

Rate this:
Bala - madurai,இந்தியா
04-ஏப்-201800:38:56 IST Report Abuse

Balaமத்திய அரசை எதிர்த்த, அ.தி.மு.க.,வின் உண்ணாவிரதம்... வெற்றி உண்ணாவிரதம் நடந்த பகுதியில், மோர், ஜூஸ், சமோசா, சுண்டல், மாங்காய், வெள்ளரி விற்பனை, அமோகமாக நடந்தது. இரண்டும் வேறு வேறு செய்திகள்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement