Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவரை காணும் வரை எந்த கிருஷ்ணனையும் தரிசிக்க மாட்டேன் : யேசுதாஸ்

03 ஏப், 2018 - 13:55 IST
எழுத்தின் அளவு:
I-will-not-enter-other-Krishna-temple,-without-first-praying-Guruvayur-temple-says-Yesudas

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ். கிறிஸ்துவராக இருந்தபோதிலும் இந்து மதத்தில் நம்பிக்கை உடையவர். ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரின் ஹரிவராசனம் பாடல் தான் சபரிமலையில் ஒலிக்கிறது. சபரிமலையில் இவருக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு.

குருவாயூர் கிருஷ்ணனுக்காக யேசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் இந்த கோவிலில் இவருக்கு அனுமதி கிடையாது. வேற்று மதத்தினருக்கு இந்த கோவிலில் அனுமதி கிடையாது.

இந்நிலையில் திருச்சூரில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் யேசுதாஸ். அவர் பேசியதாவது...

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நான் நுழைய சிறப்பு அனுமதி கோரவில்லை. என்னை அனுமதிப்பது பற்றி கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். விலக்கப்பட்டவர்களை அனுமதிக்கும் வரை கண்டிப்பாக என்னை அனுமதிக்க போவது இல்லை. உண்மையாக கடவுளை நேசித்து தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் போது அதில் கடைசி ஆளாக நான் இருப்பேன்.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் என்னை அனுமதிக்கும் வரை வேறு எந்த கிருஷ்ணன் கோவிலையும் நான் தரிசிக்க போவது கிடையாது. நண்பருடன் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றபோது கூட அங்கு இருந்தவர் கிருஷ்ணராக தெரியவில்லை, ராமராகத்தான் பார்த்தேன்.

வேதங்களை அனைவரும் கற்கும்போது இந்த உலகத்தில் அமைதி பிறக்கும். வேதம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினுள் போய் சிக்க கூடாது என்பது என் கருத்து.

இவ்வாறு யேசுதாஸ் பேசினார்.

Advertisement
வெப் சீரியலில் நடிப்பது ஏன்? பாபி சிம்ஹாவெப் சீரியலில் நடிப்பது ஏன்? பாபி ... ரசூல் பூக்குட்டியிடம் ஆலோசனைப் பெற்ற ராஜிவ் மேனன் ரசூல் பூக்குட்டியிடம் ஆலோசனைப் ...


வாசகர் கருத்து (6)

Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா
03 ஏப், 2018 - 16:17 Report Abuse
Nsnatarajan Iyer வாஸ்தவமான பேச்சு. ஆனால் இந்துமத கோவிலுக்கு மற்ற மதத்தவர் போய் தரிசனம் செய்தால் சந்தானம் குங்குமம் விபூதி துளசி தீர்த்தம் போன்று கொடுப்பார்கள். அவற்றை இந்த வேற்று மத பக்தர்கள் ஸ்வீகரிப்பார்களா? இது எல்லோருக்கும் தர்ம சங்கடமாக இருக்கும் என்பதால் ஜேசுதாஸ் அவர்கள் இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிடுவது நல்லது என்று தோன்றுகிறது. நான் உள்ளே வருவேன் சாமியை கும்பிடுவேன். ஆனால் கற்பூரம் காட்டினால் கண்ணில் ஒத்திக்கொள்ளமாட்டேன் என்பது சரியான விஷயமாக தெரியவில்லை. அல்லது இந்து மதத்தில் பெரிய புரட்சி வந்து யாருக்குமே இந்த விபூதி குங்குமம் கற்பூரம் போன்றவை கிடையாது என்று தீர்மானம் வரட்டும்.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03 ஏப், 2018 - 16:17 Report Abuse
Kasimani Baskaran அவன் தன்னை நேசிப்பவர்களுக்கு ஓடோடி வந்து தரிசனம் கொடுப்பான்... தன்னை சரணடைந்த அர்ஜுனனை உள்ளங்கையில் வைத்தல்லவா தாங்கினான்...
Rate this:
Hariharan Iyer - Nagpur,இந்தியா
03 ஏப், 2018 - 16:13 Report Abuse
Hariharan Iyer அருமை. இவருக்கு எனது பாதரவிந்த நமஸ்கரங்கள். என்ன ஒரு பக்தி கிருஷ்ணன் மீது. கண்டிப்பாக இவருக்கு குருவாயூர் கோவிலுக்குள் அனுமதி சீக்கிரமாகவே கிடைக்கும். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் எத்தனையோ பேர் திருட்டுத்தனமாக குருவாயூர் கோவிலுக்குள் போய் தரிசனம் செய்கிறார்கள். இவருக்கும் கோவிலில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கிடைக்கும் நாள் வெகு துரத்தி இல்லை.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
03 ஏப், 2018 - 15:59 Report Abuse
BoochiMarunthu .இது தெரியாம இவளவு நாள் வாழ்ந்தாச்சு .
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2018 - 15:26 Report Abuse
ram super I support
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
Tamil New Film Pariyerum perumal
Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in