எஸ்.சி., - எஸ்.டி., விவகாரத்தில் அரசின் கோரிக்கை... நிராகரிப்பு! உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
நிராகரிப்பு!
எஸ்.சி., - எஸ்.டி., விவகாரத்தில் அரசின் கோரிக்கை...
உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி : எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் தொடர்பாக, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனுவை விரிவாக பரிசீலிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்


எஸ்.சி., எனப்படும் தலித், எஸ்.டி., எனப்படும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளை தடுக்க, எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமீபத்தில், ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டால், விசாரணை இன்றி உடனடியாக யாரையும் கைது செய்யக்கூடாது; அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி தீவிர விசாரணை நடத்திய பின், அவர் ஒப்புதலுக்கு பின்பே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

பதற்றம்:


இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளையும், தன் உத்தரவில்,

உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முன்தினம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல நகரங்களில் ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது; கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.

ம.பி., மஹாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், போராட்டக்காரர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம்அடைந்தனர். இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

மறுசீராய்வு:


இதற்கிடையே, எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.கோயல், யு.யு.லலித் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தங்கள் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் நீர்த்துப் போகும் வகையில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அப்பாவிகளை தவறாக தண்டிக்கக்கூடாது என்ற எண்ணத்தில், அவர்ளை பாதுகாக்கும் வகையில் தான் உத்தரவை பிறப்பித்தோம்.

முடியாது:


எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை பயன்படுத்தி, யாரையும் அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது. பிரதான வழக்கில் மனுதாரர்களாக

Advertisement

உள்ளோரின் வழக்குகளோடு, மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள மனுவையும் விரிவாக விசாரிப்போம். 10 நாட்களுக்கு பின், இந்த வழக்கு விசாரிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக, மஹாராஷ்டிரா அரசு உள்ளிட்ட பிரதான மனுதாரர்கள், இரு நாட்களில், தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

'மத்திய அரசு பொறுப்பல்ல!'

எஸ்.சி., - எஸ்.டி., சட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்; இந்த உத்தரவுக்கு, மத்திய அரசு பொறுப்பல்ல. பிற்பட்ட சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தால் வன்முறை ஏற்படாமல் அமைதி நிலவ, மக்கள் உதவ வேண்டும். நாடு முழுவதும் நல்லிணக்கம் ஏற்பட, மக்களின் ஒத்துழைப்பை கோருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
04-ஏப்-201809:14:14 IST Report Abuse

Rajarajanஎனக்கு தெரிந்து, ஒரு குறிப்பிட்ட ஜாதி ஒதுக்கீட்டில் பயன் பெற்ற மருத்துவர் குடும்பம். தந்தை மருத்துவர், தாய் அரசு கல்லூரியில் விரிவுரையாளர், தாத்தா தாசில்தார், பேரன் மத்திய அரசு ஊழியர். கோடீஸ்வரர்கள் இவர்கள் . பங்களா, பல வீடுகள், கோடிக்கணக்கில் பணம். இவர் மனைவி பணி ஓய்வு பெற்றால், கோடியில் பணம் மற்றும் ஓய்வயூதியம். ஆனால், இவர் எப்போதும் பிராமணர்களை வசைபாடிக் கொண்டே இருப்பார். இவரை போன்ற, பிராமணரை எதிர்ப்பவர்களை தீர்க்கமாக ஆராய்ந்தபோது தான் ஒரு உண்மை புரிந்தது. இவ்வாறு தொடர்ந்து பிராமணரை எதிர்த்துக்கொண்டே இருந்தால் தான், இவர்கள் தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக பெறும் இடவொதுக்கீடு, சலுகைகள் போன்றவற்றை மற்றவர்கள் நினைத்து பார்க்க மாட்டார்கள். மற்றவர்கள் நினைவுக்கு இவை வராது. யாரும் இவர்களை திருப்பி கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற ஒரு மனோரீதியான முன்னெச்சரிக்கை சிகிச்சை இது என்பது புரிந்தது. இதை தான் அரசியல்வாதிகள் மற்றும் தொடர்ந்து இடவொதுக்கீடு சலுகைகள் பெறும் பலர் தற்போது செய்து கொண்டிருக்கின்றனர். சந்தேகமிருப்பின், அவர்களின் பேச்சு மற்றும் செயல்களை தொடந்து கண்காணித்துப் பாருங்கள், உண்மை விளங்கும். கோடீஸ்வரர்களாக இருப்பினும், பல தலைமுறைகள் இடவொதுக்கீடு சலுகை பெற்றுவந்தாலும், தாங்கள் பரம்பரை பரம்பரையாக இடவொதிக்கீடு சலுகை பெறுவதை பற்றி பேசவே மாட்டார்கள். பிராமணர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். ஏனெனில், அவர்களுக்கு இடவொதுக்கீடு இல்லாத காரணத்தால், அவர்கள் சுதந்திர பறவைகள். அரசு வேலையில் அடிமையாக இருந்து, தினம் தினம் குறிப்பிட்ட ஜாதியினரின் மிரட்டலுக்கு பயந்து சாகவேண்டிய அவசியம் இல்லை. யார் ஜாதி பெயரில் சலுகை பெற்று வேலைக்கு வருகின்றனரோ, அவர்களே ஜாதி மிரட்டலுக்கு ஆளாகி, பொறுமி பொறுமி சாக வேண்டியது தான். கூரை மேலே சோற்றை போட்டால் ஆயிரம் காக்காய். வெவ்வேறு துறை சம்பந்தமாக படித்தால், வெவ்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. ஆகவே, பிராமணர்கள் இடவொதுக்கீடு சலுகை இல்லாமல் இருப்பது ஒருவகையில் வரப்பிரசாதம். அவர்கள் திறமை மற்றும் போட்டியின் மூலம் தான் முன்னேறுகின்றனர் என்ற ஒரு நேர்மறை எண்ணம் மற்றும் முத்திரை அவர்கள் மீது குத்தப்பட்டுள்ளது. இதுவே ஒரு நற்சான்றிதழ் தான். ஆக, ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்.

Rate this:
Raj - Chennai ,இந்தியா
04-ஏப்-201809:10:58 IST Report Abuse

Rajகனிமெழி போன்ற மேதாவிகள் அரசியல் ஆதாயம் தேடாமல் இருக்க வேண்டும்.

Rate this:
k.shanmugasundaram - trichy,இந்தியா
04-ஏப்-201809:02:56 IST Report Abuse

k.shanmugasundaramஅம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-ஏப்-201808:36:51 IST Report Abuse

Srinivasan Kannaiyaஏதாவது ஒரு நிலையில் கட்டுப்படுத்த வேண்டும்...அதுதானே முறையும் கூடா. எதுவுமே அளவுக்கு அதிகமா போனால் விஷம்தான்...

Rate this:
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
04-ஏப்-201808:27:45 IST Report Abuse

Subramanian Sundararamanஓர் உயர் நீதி மன்ற நீதி பதியே தன் சக நீதி பதிகளை சாதி வன்கொடுமை சட்டத்தை சொல்லியே பயமுறுத்தியதையும், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையுமே தானாகவே முன்னெடுத்த வழக்கு மூலம் தண்டனை கூறி தீர்ப்பளித்ததையும் நாடே அறியும். இவர்கள் கதியே இப்படி என்றால் ஒரு சாதாரண மேனேஜரின் கதி ? ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்கிற தத்துவப்படி விஜரணைக்குப்பின் action என்பதில் என்ன தவறு ? விஜாரணை என்றாலே அநீதி என்று எப்படி சொல்லலாம். அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்காமல் இதன் தரப்பு நியாயத்தை சொல்லவேண்டும். மத்திய அரசு vote பேங்க் பாலிடிக்ஸு க்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை review செய்ய சொல்வது சரியல்ல.

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
04-ஏப்-201808:19:10 IST Report Abuse

பலராமன்SC ST பிரிவை சேர்ந்த ஒருவரை அவதூறாகவோ, தரக்குறைவாகவோ பேசினால் அதற்கு தண்டனை.... ஆனால் மற்ற சமுதாயத்தினரை சமூக நீதி என்ற பெயரில் திட்டுவதற்கு என்ன தண்டனை? அந்த சமுதாயத்தினர் எந்த சட்டமும் கேட்டதாக தெரிய வில்லை? ஆனா இப்ப அவங்களும் "பறையனாரே, பள்ளரே" என்ற பிளெக்ஸ் போர்டு வைக்க ஆரம்பித்து விட்டனர்.... எங்க ஊருல ஓர் டி கடை உண்டு, நடத்துபவர் ஒரு தேவர்... தேவர் கடை என்றே பெயர்....இன்றும் கூட நிறைய பேருக்கு அவர் பெயர் தெரியாது..... எல்லோரும் அவரை என்ன தேவரே சௌக்கியமா என்று கேட்பார்கள்......அவர் வாய் நிறைய சந்தோசத்துடன் நல்ல இருக்கேன் தம்பி....நீங்க நல்ல இருக்கீங்களா? என்று கேட்பார்......அதை அவர் தவறாக நினைக்க மாட்டார்.... பெருமையாக நினைப்பர்.......தாழ்வு மனப்பான்மை உள்ளவர் தான் இப்படியெல்லாம் சட்டம் கேட்பார்.......

Rate this:
rajavikramaraj - papanasam,இந்தியா
04-ஏப்-201807:53:23 IST Report Abuse

rajavikramarajErase community

Rate this:
rajavikramaraj - papanasam,இந்தியா
04-ஏப்-201807:52:31 IST Report Abuse

rajavikramarajNeed stop giving priority based on community because that only the reason for all problems. It gives the lot of fools placed on all postings .give the priority for talent.

Rate this:
04-ஏப்-201807:01:21 IST Report Abuse

ThanuSrinivasanஎஸ். ஸி/எஸ். ட்டி (வன் கொடுமை தடுப்பு சட்டம்) என்பதே வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய சட்டமே. வட நாட்டில்தான் இவர்களுக்கு மிகவும் வன் கொடுமை இழைக்கபடுகிறது. சில சட்டங்கள் சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஆணை இடலாம். பல இடங்களில் இச்சட்டம் தவறாக ப்ரயோகிக்க படுகிறது என்பதே உண்மை. .

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-ஏப்-201806:56:28 IST Report Abuse

ஆரூர் ரங்விசித்திரம் என்னவென்றால் அல்லும் பகலும் இங்கு திராவிடர்களின் பாதிப்புகளுக்கு பிராமணர்களே காரணம் என எழுதிக்கொண்டிருக்கும் டுமீளர்கள் இவ்விஷயத்தில் மட்டும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக மறைமுக தீண்டாமை கலந்த தாக்குதல்களைத் தொடுத்திருப்பது தான் கேவலமாக இல்லையா? ஹரிஜனங்கள் தான் உண்மையில் ஜீன் கலப்பற்ற திராவிடர்கள் ..நமது நாட்டில் என்று ஹரிஜனங்களை சமமாக மதிக்கத் தொடங்குகிறோமோ(முக்கியமாக பிராமணர்கள் ) அன்றுதான் சுபிட்சம் தொடங்கும் சமுதாயத்தில் நான்கிலொரு பங்குள்ள எங்கள் திருக்குலத்தாரை ஒதுக்கிவிட்டு முன்னேற்றம் அடைவது என்பது பகல் கனவு .போலி பிற்பட்டோரே திருந்துங்கள் ஐம்பதாண்டுகளாவது ஆட்சியதிகாரம் போலி பிற்பட்டோர் கைக்குப் போகாமலிருந்தாலே மாற்றம் வரவாய்ப்புண்டு ஜெய் ஹிந்த்

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement