எம்.பி.,க்கள் அமளியால் ரூ.190 கோடி இழப்பு; 10 ஆண்டில் மோசமான பட்ஜெட் கூட்டத்தொடர் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எம்.பி.,க்கள் அமளியால் ரூ.190 கோடி இழப்பு
10 ஆண்டில் மோசமான பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுடில்லி : கடந்த, 10 ஆண்டுகளில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத் தொடராக, தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் அமைந்துள்ளது. இந்த கூட்டத் தொடரின் போது, லோக்சபாவில், 25 சதவீத பணிகளே நடந்தன; அலுவல் பாதிப்பால், 190 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Budget,பட்ஜெட்,அமளி,ரூ.190 கோடி,இழப்பு

இந்தாண்டில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம், ஜன., 29ல் துவங்கி, பிப்., 9 வரை நடந்தது. இரண்டாம் கட்ட, பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 6 வரை நடக்கிறது. இந்த கூட்டத் தொடர், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக மோசமான பாதிப்புகளை சந்தித்ததாக அமைந்து உள்ளது.

லோக்சபாவில், பட்ஜெட் கூட்டத் தொடரில், 22 அமர்வுகள் நிகழ்ந்தன. இந்த சமயத்தில், 25 சதவீத அலுவல்கள் மட்டுமே நடந்தன; ராஜ்யசபாவில், 35 சதவீத அலுவல்கள் நடந்துள்ளன.


மறைமுக செலவுகள்:


பட்ஜெட் கூட்டத் தொடர் அலுவல்கள் முடங்கியதால், அரசுக்கு, இதுவரை, 190 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மதிப்பீட்டில், மறைமுக செலவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. கூட்டத் தொடர் முடங்கிய நாட்களில், உறுப்பினர்களின் சம்பளம், படிகள், அவர்களுக்கு செய்ய வேண்டிய பிற வசதிகள் என செலவு ஏற்பட்டது. மேலும், இரு சபைகளையும் நடத்துவதற்கான செலவுகள், சபைகள் நடப்பதால் கிடைக்க வேண்டிய பயன்கள், இழப்பு ஆகியவற்றின் அடிப்படையில், 190 கோடி ரூபாய் இழப்பு என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத் தொடர் முடங்கியதற்கான காரணங்களில் ஒன்று, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நடந்த, 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி. இதை கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அந்த வங்கியில் மோசடி செய்த, நகை வியாபாரி, நிரவ் மோடியின் சொத்துகளை முடக்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியாமல் போனது; அதேசமயம், இந்த மசோதா, லோக்சபாவில் மிகுந்த சிரமத்துடன் நிறைவேற்றப்பட்டது.

பாதிப்பு:


மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த,

Advertisement

நம்பிக்கை இல்லா தீர்மானங்கள், பார்லி.,யில் நிகழ்ந்த தொடர் அமளிகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. வங்கி மோசடி தவிர, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான கோரிக்கை ஆகியவற்றால், பட்ஜெட் கூட்டத் தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அலுவல்களை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய, எம்.பி.,க்கள், இரு சபைகளையும் தொடர்ந்து முடக்கி வந்த போதிலும், அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி செல்கிறது. லோக்சபாவில், எம்.பி.,க்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான செலவு, பிற செலவினங்கள் என, ஒரு ஆண்டுக்கு, ஆகும் செலவு, 656 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது; ராஜ்யசபாவில், இந்த செலவுகள், 384 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement