2019 தேர்தலுக்கான பிரசார உத்திகளை வகுக்க வியூகம்: சாதனை பட்டியல் கேட்கிறது பிரதமர் அலுவலகம் Dinamalar
பதிவு செய்த நாள் :
வியூகம்!  
2019 தேர்தலுக்கான பிரசார உத்திகளை வகுக்க...
சாதனை பட்டியல் கேட்கிறது பிரதமர் அலுவலகம்

புதுடில்லி, :மத்திய அமைச்சர்கள் அனைவரும், தங்களின் இரு சாதனைகள் பற்றிய தகவல் களை அளிக்கும்படி, பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. இவற்றை வைத்து, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனை பட்டியலை தயாரிக்க, திட்டமிடப் பட்டுள்ளது. இதனடிப்படையில், 2019 லோக்சபா தேர்தலுக்கான பிரசாரஉத்திகளை வகுக்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

2019 ,தேர்தல், பிரசார உத்தி, வியூகம்,  சாதனை பட்டியல், பிரதமர் அலுவலகம்


கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, பெரும் பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.

உத்தரவு



மத்திய அமைச்சர்கள் அனைவரும், கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த, தங்களின் இரு சாதனைகள் பற்றிய தகவல்களை அளிக்கும் படி, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது; இவற்றை வைத்து, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனை பட்டியலை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில், அடுத்த லோக்சபா தேர்தலின்போது, மக்களை அணுகவும், பிரசார உத்திகளை வகுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்த விபரங்களை அளிக்கும்படி, அனைத்து அமைச்சகங் களையும், பிரதமர், மோடி கேட்டுக் கொண்டார். நிறைவேற்றப் படாத வாக்குறுதிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அவர் கேட்டு உள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டப்படி, எலக்ட்ரானிக்ஸ் துறையில் சிறப்பான சாதனை படைக்கப்பட்டு உள்ளது. 2014ல், இந்தியாவில், இரண்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை, 120 ஆக அதிகரித்துள்ளது.

ரூ.1.20 லட்சம் கோடி



இந்த துறையின் விற்றுமுதல், 2014ல், 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது; இந்தாண்டு மார்ச் முடி வில், இது, 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்ச்சி கரமான வரி விதிப்பு முறையால், இந்தியாவில், பொருட் களை தயாரிப்பதுமலிவாக உள்ளது.


எனவே, மொபைல் போன்களை இறக்குமதி செய்வதற்கு பதில், தயாரிப்பதில், பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில், மொபைல் போன் துறையில், உள்நாட்டு தேவையில், 96 சதவீதம், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்.

சாலை அமைப்பு தீவிரம்!



மத்திய அமைச்சகங்களில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை, கடந்த சில

Advertisement

ஆண்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகிறது. இத்துறையில், 2014ம் ஆண்டில், 4,000 கி.மீ., துார சாலைகள் நிர் மானிக்கப்பட்டன. 2018, பிப்ரவரி வரையிலான ஒரு ஆண்டில், 9,000 கி.மீ., துார சாலை நிர்மாணிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.


டில்லியை சுற்றி, 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. டில்லி - மீரட் இடையே, 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரு சாலைகளும், ஏப்ரலில், பிரதமர்,நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப் பட உள்ளன.

தொலை தொடர்பில் அசுர வளர்ச்சி



மத்திய தொலைதொடர்பு துறை இணை அமைச்சர், மனோஜ் சின்ஹா தலைமையில், பாரத் நெட் என்ற பெயரில், கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின் றன. கடந்த, 2014, ஜூனில், இணையதள பயன்பாட்டு அடர்த்தி, 75 சதவீதமாக இருந்தது. இது, 2017, செப்டம்பரில், 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொலைதொடர்பு துறையில், 2015ம் ஆண்டில், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் இருந்தன; இது, 2017ம் ஆண்டில், 40 லட்சமாக அதிகரித்து உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
31-மார்-201810:06:26 IST Report Abuse

krishnanசார் பெட்ரோல் வெலை 76 கு மேல.

Rate this:
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
31-மார்-201809:37:13 IST Report Abuse

Thulasingam Pillaiஜிஎஸ்டி, பணப்பரிமாற்றமும் அதனால் சாதாரண மக்களின் அவதியும் இறப்பும் , ஆனால் உங்களின் தொடர்புடையோர் கோடிகளில் புது கரன்சியை மாலை போட்டுக் கொண்டது, வங்கிகளை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கவிட்டு, தேசத்தை விட்டே தப்பிக்க விட்ட சாதனை, சரித்திரம் காணவொண்ணா பெட்றோல் விலை இதைவிட வேறென்ன சாதனையை வேண்டி நிற்கிறிர் மோடி அவர்களே

Rate this:
Shanu - Mumbai ,இந்தியா
31-மார்-201808:50:36 IST Report Abuse

ShanuBJP after came to power, it work only for next election by taking money from people and by creating religious problem. If there is religion conflict, you all will see poor India.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-மார்-201808:36:17 IST Report Abuse

Srinivasan Kannaiyaவெறும் கையால்தான் முழம் போடவேண்டும்.. என்ன சொல்லிக்கும் படியா சாதனை செய்தீர்கள்..?ஆதார்....நோட்டுமாற்றம் இது எதுவும் ஏழைகளின் பசியை போக்கவில்லை...

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
31-மார்-201808:30:31 IST Report Abuse

Nallappan Kannan Nallappanஇத்தனை வருசமா தமிழ்நாட்டுல இருந்து கிடைச்ச சீட்டுல தான் பி ஜே பி அரசு இந்தியாவுல நகருது இல்லன்னா அம்புட்டுதான் ஆமாங்கோ

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
31-மார்-201809:44:24 IST Report Abuse

Makkal Enn pakamபக்தல்ஸ் எப்போதும் மோடி பற்றி பேசினால் காதை இருக்க மூடிக்கொள்வார்கள் ...... இது தெரிந்ததுதான் ..... நோ டென்ஷன் டேக் இட் ஈஸி, உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும் ..........

Rate this:
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
31-மார்-201808:26:53 IST Report Abuse

Nallappan Kannan Nallappanஅமாம் மோடி மொட்டை அடிச்சு திருப்பதி உண்டியலுல போட்டாரு இவரு பார்த்தாரு, புண்ணாக்கு பொய் ஜபம் பண்ணுறத விட்டுவிடு

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
31-மார்-201807:48:42 IST Report Abuse

Makkal Enn pakamமக்களை எந்தவிதத்தில் மொட்டை அடித்தீர்கள் என்று தெளிவா சொல்லுங்க. உங்களை நம்பி மண்ணாய் போன மக்கள் உங்களை மன்னிக்கமாட்டார்கள். தமிழகத்தை நீங்கள் எப்படி வஞ்சித்தீர்கள் என்று உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஒரு வெறும் ஓட்டுக்கு வேலை பார்கும் அரசியல்வாதி என்று இந்த நாட்டுக்கு தெரியும். பெட்ரோல் விலை எங்கோ போகிறது அதை பற்றி பேச தெம்பிருக்கா, மக்கள் விலை வாசி ஏற்றத்தால் முழி பிதுங்கி நிற்கிறார்கள் அது தெரியுமா, நீங்கள் அம்பானி, அடானிகள், நீரவ் மோடிகள், விஜ மால்யா வர்க்கங்களுக்கு ஆதரவு.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
31-மார்-201807:32:31 IST Report Abuse

ஆரூர் ரங்நன்றி கெட்ட மாநிலங்களுக்கு உதவுவதை நிறுத்தினால் மற்ற மாநிலங்களாவது வளரும் என்பதை மோடி நினைவில் கொள்ளட்டும் நதிநீர் இணைப்பு மத்திய பிரதேசம் குஜராத் ராஜஸ்தான் ஆந்திர மாநிலங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுகிறது .ஆனால் இங்கு நதிநீர் இணைப்பையே கடுமையாய்க் எதிர்க்கும் காங் திமுகவுக்குத்தான் டுமீளர் ஆதரவு காவிரி நீர்பிடிப்புப் பகுதியின் மேற்கில் அரபிக்கடலில் விழுந்து வீணாகும் நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு நானூற்றைமைப்பது டி எம் சி இது காவிரியில் இப்போது கிடைக்கும் மொத்த நீரைவிட அதிகம் ..தட்டுபாடான நீருக்கு அடித்துக் கொள்வதற்கு பதில் அந்த நீரை திருப்பிவிட ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறோமா? வேண்டுகோளாவது விடுத்தோமா?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
31-மார்-201807:27:45 IST Report Abuse

ஆரூர் ரங்எனக்குப்பிடித்த முதல் சாதனை மின் தட்டுப்பாடு நாட்டிலேயே எங்குமில்லை . அடுத்தது நிலக்கரி இறக்குமதியே வேண்டாமெனுமளவுக்கு தன்னிறைவு

Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
31-மார்-201805:55:39 IST Report Abuse

பலராமன்பாஸ்கர் என்ற ஒருவர் மட்டும் தமிழக மக்கள் அல்ல.....நல்லவர்களும் உள்ளனர்........

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement