காவிரி பிரச்னையில் அரசுக்கு களங்கம் வரும்: கமல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி பிரச்னையில்
அரசுக்கு களங்கம் வரும்: கமல்

சென்னை: ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகத்தில், யார் பெயரில் ஆட்சி நடத்துகின்றனரோ, அவருக்கு களங்கம் ஏற்படும்,'' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல் கூறினார்.

காவிரி, பிரச்னை,அரசு,களங்கம்,கமல்


சென்னையில் நேற்று, கமல் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கடினமான காரியம் அல்ல. மத்திய அரசு நினைத்தால், வலுவான எண்ணம் இருந்தால்,உடனே செய்யலாம்.

உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பில் தெளிவாக கூறி விட்டது. இப்போது போய், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்பது, தாமதப்படுத்தும் செயல்.


வாரியம் அமைக்காவிட்டால், தமிழகத்தில் யார் பெயரில் ஆட்சி நடத்துகின்றனரோ, அவருக்கே களங்கமாக அமையும்.வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்துவது, ஓட்டுக்கான அரசியல். இது குறித்து, முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இவ்விஷயத்தில், 'தற்கொலை செய்து கொள்வோம்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கூறுவது, அரசியல் பித்தலாட்டம். வாரியத்திற்காக, எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால் வரவேற்பேன்.

தேவைப்பட்டால், டில்லிக்கு சென்றும் போராடு வேன். படிப்படியாய் இறங்கி வந்து, நீரின் அளவை குறைத்த பிறகும், வாரியம் அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். காவிரி மேலாண்மை

Advertisement

வாரியம் குறித்த, ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன்.

துாத்துக்குடி மக்கள் நடத்தி வரும் போராட்ட களத்தில், நானும் பங்கேற்கி றேன். இதற்காக, ஏப்., 1ல், துாத்துக்குடி செல்கிறேன். 'ஸ்டெர்லைட்' ஆலையால், போபால் போன்ற பேரழிவு, துாத்துக்குடியில் ஏற்படும். 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட வேண்டும்; இல்லையென்றால், விரிவாக்கப் பணிகள் நடத்தக் கூடாது, என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (3+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
30-மார்-201802:38:04 IST Report Abuse

BoochiMarunthuஇப்போ தான் அரசியல் வாதி மாதிரி தெளிவா பேசுறார் . முக்கிய மக்கள் பிரச்சனை எது என்று புரிந்துகொண்டு உள்ளார் . பேசி புரியவைத்தல் கன்னடர்கள் ரத்தம் கூட கொடுப்பார்கள் நாம் எல்லாம் இந்தியர்கள் என்று முன்பு உளறியவர் .

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
30-மார்-201800:44:28 IST Report Abuse

அன்புஒட்டுமொத்த தமிழகத்திற்கு காலம் காலமாக சோறு போட்ட காவேரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுத்து, அதை குட்டிச்சுவர் அடிப்பதற்காகவே, மோடி அரசு காவேரி வாரியம் அமைக்க மறுக்கிறது. உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும், ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு திரிகிறது. காலம் காலமாக தனது வயிற்றை நிரப்பிய மண்ணை கார்பரேட்கள் கபளீகரம் செய்வதற்கு துணை போகும் பிஜேபி நண்பர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஸ்கீம் என்று தான் சொன்னார்கள் காவேரி வாரியம் என்று சொல்லவில்லை என்று கர்நாடகாவிற்கு ஆதரவாக தமிழ்நாட்டு பிஜேபி காரர்களும் சொல்வது, ஊட்டி வளர்த்த தாயை எட்டி உதைப்பதற்கு சமம். பழனியை குற்றம் சொல்வதற்கு ஏதும் இல்லை. அவர் வெறும் பொம்மை தான். இப்போது கூட நம்பிக்கை இல்லா தீர்மானம் காங்கிரஸ் கொண்டுவர கூடாது என்பதற்காக பிஜேபியால் கீ கொடுக்கப்பட்டுள்ளார். மோடி கேட்டால், ராமேஸ்வரம், கன்னியாகுமரியை கூட இலங்கைக்கு தாரை வார்த்துவிடும் தியாகி அவர். அதிமுகவை அடிமையாக்கிய குருமூர்த்தி, காவேரியை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. பழனி பொம்மை தான். ரிமோட் கண்ட்ரோல் குருமூர்த்தியிடம் தான் உள்ளது. குருமூர்த்தி தான் தமிழகத்தின் உண்மையான முதல்வர்.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
30-மார்-201800:40:47 IST Report Abuse

ramasamy naickenஅம்மாவும், அடிமைகளும் களங்கத்தை பற்றி கவலை பட்டதே இல்லை.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement