'மாஜி' கவர்னர் எழுதிய புத்தகம் விசாரணை கமிஷனில் தாக்கல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மாஜி' கவர்னர் எழுதிய புத்தகம்
விசாரணை கமிஷனில் தாக்கல்

சென்னை:தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யசாகர் ராவ் எழுதிய புத்தகம், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

'மாஜி' கவர்னர்,எழுதிய,புத்தகம்,விசாரணை,கமிஷனில்,தாக்கல்


ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை, டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த, சசிகலாவின் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்றுள்ளனர்.


இந்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யாசாகர் ராவ், 'தோஸ் ஈவன்ட்புல் டேஸ்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த புத்தகத்தில், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில், ஜெ., இருந்தபோது நடந்த

சம்பவங் கள் பற்றியும் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அந்த புத்தகத்தை கேட்டு, கவர்னர் அலுவலகத்திற்கு, விசாரணை 'கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதற்கு பதில் வராததால், 'புத்தகத்துடன் அதிகாரி ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும்' என, 'சம்மன் அனுப்பப் பட்டது.


அதன்படி, கவர்னர் அலுவலக பிரிவு உதவியாளர், ஸ்ரீனிவாசன், நேற்று ஆணையத்தில் ஆஜராகி, புத்தகத்தை, நீதிபதி ஆறுமுகசாமியிடம் சமர்ப்பித் தார். புத்தகத்தை, நீதிபதி ஆறுமுகசாமி படித்தார்; பின், ஸ்ரீனிவாசனிடம் ஒப்படைத்தார். 'மீண்டும் கேட்கும்போது, புத்தகத்தை எடுத்து வர வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.


சசி தரப்பில் குறுக்கு விசாரணை!



விசாரணை கமிஷனில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களிடம், நேற்று குறுக்கு விசாரணை துவங்கியது. நேற்றைய விசாரணை யில், முன்னாள் மருத்துவ கல்விஇயக்குனர், விமலா மற்றும் சென்னை, ஓமாந்துாரார் மருத்துவ கல்லுாரி டீன், நாராயண பாபு ஆகிய இருவரிடமும், தனித்தனியாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், அரவிந்தன், சுப்ரமணியன் ஆகியோர், குறுக்கு விசாரணை நடத்தினர்.பின், வழக்கறிஞர் அரவிந்தன் கூறியதாவது:டாக்டர்களிடம் குறுக்கு

Advertisement

விசாரணை செய்தோம். சில கேள்விகளுக்கு மட்டும், 'தெரியும்' என்றனர்.


அதேபோல், 'சுகாதாரத் துறை செயலர், ராதா கிருஷ்ணனுக்கு தான் அனைத்தும் தெரியும்' எனக் கூறினர்.ஜெயலலிதா சிகிச்சை குறித்து, மேற்பார்வையிட அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவை, டாக்டர் நாராயணபாபு, மருத்துவ மனையில் ஒருமுறை சந்தித்தாக கூறி
உள்ளார்.


அதேபோல், கவர்னர் அலுவலக பிரிவு உதவி யாளர், ஸ்ரீனிவாசன் ஆஜராகி, வித்யாசாகர் எழுதிய புத்தகத்தை அளித்தார். அதில், ஜெ., குறித்து இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகம் விற்பனைக்கு இல்லை என்பதால், நாங்கள் படிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
29-மார்-201806:33:17 IST Report Abuse

சந்தோசு கோபுதத்தி தத்தி நடந்து வந்த A1 குற்றவாளி மயங்கி விழுந்து ஆஸ்ப்பிட்டல்ல சேர்க்கப்பட்டு பின் எல்லாவித உலகத்தரமான சிகிச்சைகளும் பலனின்றி இறந்து போய்ட்டாங்க... அதைப்போட்டு இந்த குடை குடையுறீங்க.... 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது, வெயில்ல வாடி வதங்கி தண்ணி குடிக்க இல்லாம செத்துப் போன அப்பாவி தொண்டர்கள் 7 பேரு.... சென்னை பேரு வெள்ளத்தின் போது, A1 அவர்களின் அலட்சியத்தால் முன்னறிவிப்பு இன்றி நைட்டோடு நைட்டா ஏரியை திறந்துவிட்டு, தூக்கிகிட்டு இருந்த போது, அடிச்சுகிட்டு போய் செத்தாங்களே 400 பேரு... அந்த அப்பாவிகள் உயிரெல்லாம் உங்களுக்கு உயிரில்லை.. உங்கம்மா உயிரு மட்டும் தான் உயிரா? போங்கய்யா போக்கத்தவனுங்களா...

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
29-மார்-201806:32:29 IST Report Abuse

சந்தோசு கோபுஅடப்பாவிகளா எழுதுனவனை விட்டுட்டு புக்கை புடிச்சி விசாரிச்சிகிட்டு இருக்கீங்களேய்யா.. என்ன விசாரணையோ என்ன கமிஷனோ... அடிங்க அடிங்க நல்லா கூத்தடிங்க......?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-மார்-201804:35:57 IST Report Abuse

Kasimani Baskaranபுத்தகத்தில் எழுதிவிட்டால் அது முழுவதும் உண்மையாகி விடும் என்று நம்புவது மடமை..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement