பேச்சுவார்த்தையில் விஷால் வைத்த கோரிக்கை என்ன? | மம்முட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ; இயக்குனர் உறுதி | மஞ்சு வாரியர் மீது டிரைவர் குற்றச்சாட்டு | சித்தார்த்துக்கு மீண்டும் வில்லனான பாபி சிம்ஹா | மோகன்லாலின் கெட்டப்பை பார்த்து வியந்த கலா மாஸ்டர் | கமல்ஹாசனின் முடிவுக்கு காரணம் என்ன? | புட்பால் : சுசீந்திரனின் அடுத்தப்படம் | சீனு ராமசாமி தரும் அடுத்த பட்டம் | உருவத்தை மாற்றும் அதர்வா | விஜய்யை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
கார்த்திக் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஒரு இளம் விவசாயியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு கார்த்திக்கு விவசாயத்தின் மீது திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டை சேர்ந்த வேணுகோபால் என்பவர் என்ஜினீயரிங் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இளம் தலைமுறையினர் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்து கற்றுக் கொடுத்து வருகிறார். இதனை கேள்விப்பட்ட கார்த்தி தனது குடும்பத்தினருடன் செங்கற்பட்டு சென்று வேணுகோபாலின் வயலில் நடக்கும் விவசாய பணிகளை பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார். கலப்பை பிடித்து உழுதும், டிராக்டர் ஓட்டிப் பார்த்தும், நாற்று நட்டுப் பார்த்தும் மகிழ்ந்திருக்கிறார். இதுகுறித்து கார்த்தி கூறியதாவது:
இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். என்றார்.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விவசாய நிலங்கள் வாங்கி அதில் விவசாயம் செய்ய கார்த்தி முடிவு செய்திருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்காகவே அவர் வேணுகோபாலை சென்று சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.