சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்... சிக்குகிறாா்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா,அண்ணன் மகன்,விவேக்,சிக்குகிறாா்

சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக், மோசடி புகாரில் சிக்கியுள்ளார். என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில், அவர் செய்த முறைகேடு அம்பலமாகி உள்ளது. சட்ட பல்கலையில், வழக்கறிஞர் படிப்பில், அவர் முறைகேடாக சேர்ந்தது தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சசிகலா,அண்ணன் மகன்,விவேக்,சிக்குகிறாா்


அண்ணா பல்கலையின், முன்னாள் துணை வேந்தர், ராஜாராம், சட்ட பல்கலையின், முன்னாள் துணை வேந்தர், வணங்காமுடி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங் களில், 2 நாட்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். இருவரது வீடுகளிலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.இது தொடர்பாக, சட்ட பல்கலையின் பொறுப்பு பதிவாளர் பாலாஜியிடம், முதல் கட்ட விசாரணை நடந்தது. அதில், பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகின.


விரைவில் கைது



இதையடுத்து, வணங்காமுடி, பதிவாளர், பாலாஜி, துணை பதிவாளர், அசோக்குமார், தொலைநிலை கல்வி இயக்குனர், ஜெய்சங்கர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ராஜேஷ் ஆகிய, ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதைதொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை யில், சசிகலாவின் அண்ணன் மகனும்,

ஜெயா, 'டிவி' முதன்மை செயல் அதிகாரியு மான, விவேக், தமிழ்நாடு அம்பேத்கர் அரசு சட்ட பல்கலையில், எல்.எல்.பி., படிக்க, விதிகளை மீறி, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் இடம்பெற்றது தெரிய வந்துள்ளது.


அதனால், அவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக, வணங்காமுடி உள்ளிட்ட, ஆறு பேர் மீதும், கிரிமினல் நடவடிக்கை பாயும் என, தெரிகிறது. இவர்கள் அனைவரும், விரைவில் கைது செய்யப்படலாம் என, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.துணை வேந்தராக இருந்த, வணங்காமுடியின் பதவிக் காலம், 2016 அக்.,31ல் முடிந்துள்ளது.அவருக்கு, 2017 ஜூன் வரை, பேராசிரியராக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பல்கலையின் பதிவாளர், பாலாஜி பிறப்பித்து உள்ளார். இது, முறைகேடான உத்தரவு என, போலீசார் கண்டறிந்துள்ளனர்.


விதிமீறல்



கடந்த, 2016 - 17ல், 93 பேர், என்.ஆர்.ஐ., ஒதுக் கீட்டில், எல்.எல்.பி., படிப்பில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 75 பேருக்கு, விதிகளை மீறி சேர்க்கை வழங்கப்பட்டு உள்ளது. அதில், ஒரு மாணவராக, இளவரசியின் மகன் விவேக், தேவையான சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல், படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கு, பல்கலை துணைவேந்தர் மற்றும் அதிகாரிகள், உடந்தையாக இருந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


சமர்ப்பிக்காத ஆவணங்கள்!



என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டில், சட்ட பல்கலை படிப்பில் சேர,11 வகை ஆவணங்கள், கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இவற்றில், 6 வகை ஆவணங்களை, விவேக் சமர்ப்பிக்கவில்லை.

Advertisement

மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், எந்த வெளிநாட்டில் வசிக்கிறாரோ, அந்த நாட்டின், இந்திய துாதரகத்தில் பெறப்பட்ட சான்றிதழ்; என்.ஆர். ஐ., வங்கி கணக்கு புத்தகம்; மாணவருக்கும், வெளிநாடு வாழ் இந்தியருக்குமான உறவு சான்றிதழ். தமிழக பல்கலைகளில், ஏதாவது ஒன்றில் பெறப்பட்ட கல்வித் தகுதி சான்றிதழ்; பெற்றோர் மற்றும் மாணவர் இணைந்து வழங்கும் கூட்டு உறுதி மொழி கடிதம், மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில், 20 ரூபாய் முத்திரை தாளில் கையெழுத்திடப்பட்ட உறுதிப் பத்திரம் ஆகிய வற்றை, விவேக் வழங்காமல், மோசடியாக, என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடு பெற்றுள்ளார்.


'விவேக் சிறை செல்வார்!'



''சட்டப் படிப்பில் சேர, விவேக், போலியான ஆவணங்கள் சமர்ப்பித்தது நிரூபணமானால், அவர் சிறை செல்வார்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். அவரது பேட்டி: 'நியூட்ரினோ திட்டம்' மட்டுமின்றி, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, எந்த ஒரு திட்டமும், தமிழகத்தில் நிறைவேற்றப்படாது. எந்த ஒரு திட்டத்திற்கும், மக்களின் கருத்து, மிகவும் அவசியம். இது, மக்களின் அரசு.


துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரத் தில், அம்மாவட்ட மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், அ.தி.மு.க., மாவட்ட செயலரே, அந்த ஆலைக்கு எதிராக, கலெக்ட ரிடம் மனு அளித்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், ஒப்புதல் அளிக்கப் பட்டாலும், அதற்கு திறப்பு விழா நடத்தப் பட்டது, தி.மு.க., ஆட்சியில் தான். சசிகலா குடும்பத்தினர் அனைவரும், மோசடி யில் ஈடுபடுபவர்கள். இளவரசி மகன் விவேக், சட்டப் படிப்புக்காக, என்.ஆர்.ஐ., ஒதுக் கீட்டில், போலி ஆவணங்களை சமர்ப்பித்தது நிரூபண மானால், அவர் சிறை செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Venkatesan - Bengaluru,இந்தியா
28-மார்-201811:12:05 IST Report Abuse

R Venkatesanஅட போங்கப்பா ரெண்டு நாள்ல பல்லை இளித்துகொண்டு வந்துடுவாங்க

Rate this:
Kailash - Chennai,இந்தியா
28-மார்-201810:30:01 IST Report Abuse

Kailashமக்கள் மறந்துவிட நினைத்தாலும் அடிக்கடி நினைவுபடுத்தப்படுகிறது

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
28-மார்-201809:37:33 IST Report Abuse

balakrishnanசிக்குகிறார், வலையில் மாட்டிக்கொண்டார், அதிரடி சோதனை, விடிய விடிய சோதனை, மேலும் பலருக்கு தொடர்பு இதுக்கெல்லாம் மதிப்பும் இல்லை, இதை படிப்பவர்களுக்கு அதிர்ச்சியும் இல்லை, இப்படி மாட்டிக்கொண்ட பெரும்பாலானவர்கள் வெளியில் தான் சௌகரியமாக இருந்துவருகிறார்கள்

Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
28-மார்-201809:24:47 IST Report Abuse

Appanகல்வியில் ஊழல் செய்த அதிமுக கும்பலை முழுசா அளிக்க வேண்டும்..ஏனென்றால் கல்வி தரம் குறைந்தால். ஒழுக்கம் இல்லாமல் போனால் அந்த இனமே அழிந்து விடும்..நினைத்து பாருங்கள் பெற்றோர்கள் வீட்டை வித்து, கடன் வாங்கி மகனை படிக்க வைத்தால் அந்த கல்வி உபயோகம் இல்லமல் போனால் என்ன ஆகும்..?..எல்லோரும் ஒட்டு மொத்தமாக சாக வேண்டியது தான்..இது தான் அதிமுக செய்துள்ளது..ஜெய மரணத்திற்கு பின் வேலைக்காரி தற்குறி சசிகலா காலில் எல்லா துணை வேந்தர்களும் விழுந்தார்கள்..சுயமரியாதை, ஒழுக்கம் போதிக்க வேண்டியவர்களே இப்படி நடக்கலாமா... மன்னர் குட்டி மாபியாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது..அதிமுக அரசியல்வாதிகள் எல்லோரும் இதற்க்கு உடந்தை... இதை பார்த்தால் முக குடும்ப ஆட்சி, கொள்ளை பரவாக இல்லை போல் தெரிகிறது..அதிமுக சமுதத்தை, தமிழ் இனத்தை அளிக்கிறார்கள்..அதிமுக அரசு தொடர்ந்தால் தமிழகம் இன்னும் மோசமான நிலைக்கு போய் விடும்..திமுக இந்த அரசை வீழ்த்த வேண்டும்..அப்போ தான் தமிழினம் இருக்கும்..இல்லை என்றால் இருக்கும் கொஞ்ச நாளில் அதிமுகஅரசியல் வாதிகளெல்லாவற்ரையும் சுருட்டி விடுவார்கள்..பிஜேபி நாட்டின் நலம் கருதி அதிமுகவை ஆதரிக்கக்கூடாது...

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
28-மார்-201809:04:53 IST Report Abuse

Ramaswamy Sundaramயாராவது சதிகளா குடும்பம் நல்லது அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தீங்கன்னா கண்டிப்பா இதை படிங்க...திருட்டு ரயில் குடும்பத்துக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை இந்த சதிகாரியின் குடும்பமும்...ஆனால் கொடுமை பாருங்க அந்த நாதரிக்கும்பலையும் இந்த நாசகார குடும்பத்தையும் ஆதரிச்சு கருத்து எழுதறவங்க இருக்கே? அய்யகோ?

Rate this:
28-மார்-201808:42:05 IST Report Abuse

ushadevanபரோல் முடிவதற்குள் விவேக்கின் நிலை மாற்றப் படலாம்.

Rate this:
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
28-மார்-201808:31:10 IST Report Abuse

Laxmanan MohandossAs per the statement of Krishna Priya Sasikala acted as if she was C.M.therefore mannagodi mafia spread their wings in all government branches

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
28-மார்-201808:27:37 IST Report Abuse

சந்தோசு கோபுA1 குற்றாவாளி வழக்கமா யார் மேலயும் பாசத்தை காட்ட மாட்டாங்க.. அப்படி காட்டினா, அது அந்த நபரை வச்சு, மக்கள் பணத்தை அடிக்க அடி போட்டுட்டாங்கன்னு அர்த்தம்.. அதிலும் தன் பிள்ளை மாதிரி பாசம் காமிச்சா பெரிய அளவில அடிக்க போறாங்கன்னு அர்த்தம்.. ஆனா இந்த விவேக் பயபுள்ள மேல அவங்க கொள்ளை பாசம் வச்சிருந்தாங்கன்னு சொல்லுவாங்க.. அதை நிரூபிக்கிற வகையில் போட்டோக்கள் கூட வந்திருந்தது.. ஆக இந்த விவேக்கை வச்சு மொத்த கஜானாவையும் தொடச்சி எடுத்திட்டிருக்க கூட வாய்ப்பிருக்கு.. இவனுக்கென்று ஒரு புது விசாரணை அமைப்பையே உருவாக்கி விசாரிக்கலாம்.. ஆயிரம் கோடி ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர் என்று ஊழலின் மொத்த உருவமா இந்த பையனை ஆக்கி வச்சிருக்காங்க நம்ம A1.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
28-மார்-201808:09:55 IST Report Abuse

Kuppuswamykesavanஇந்த விவேக் எப்படி என்ஆர்ஐ ஆனார்?. எப்போதிலிருந்து ஆனார்?. எல்லாம் தில்லாலங்கடி கோல்மால் தனங்களோ?.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
28-மார்-201808:09:06 IST Report Abuse

mindum vasanthamSumma kudaichal kodukkanumnu kodukkuraainga,aatchiyil kavanam seluththalaam

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement