காவிரி விவகாரத்தில் நெருங்குது கெடு பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் Dinamalar
பதிவு செய்த நாள் :
காவிரி விவகாரத்தில் நெருங்குது கெடு
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மவுனம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் விதித்த, ஆறு வார கெடு முடிய, இன்னும் இரு நாட்களே உள்ளன. ஆனாலும், இந்த விஷயத்தில், மத்திய அரசு அசைந்து கொடுக்காமல் மவுனம் சாதிப்பதால், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் நெருங்குது கெடு  பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம்


காவிரி வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், பிப்., 16ல், அளித்த தீர்ப்பில், 'ஆறு வாரத்திற்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியாகி, வரும், 29ம் தேதியுடன், ஆறு வாரம் முடிகிறது.
அதற்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும் என, பார்லிமென்டில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபையை கூட்டி, சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இங்குள்ள எல்லா கட்சிகளும், இவ்விவகாரத்தில் குரல் கொடுத்து வருகின்றன.
ஆனாலும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. இடையில், மத்திய அரசு சார்பில், நான்கு மாநில தலைமை செயலர்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு, இப்பிரச்னை

குறித்து விவாதிக்கப்பட்டதோடு சரி. அதன்பின், எந்த நடவடிக்கையும், மத்திய அரசால் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்,சென்னையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மாநில அமைச்சர், ஜெயகுமார், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வைப்பதில், உறுதியாக உள்ளோம்,'' என்றார்.அவர் அளித்தபேட்டி:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது. அதை, அமைக்க வைப்போம்; அதில், உறுதியாக உள்ளோம். நம் கருத்தை ஆணித்தரமாக, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்.
தி.மு.க.,வை விட, தமிழக உரிமைக்காக, அ.தி.மு.க., போராடி உள்ளது. எந்த போராட்டமும், தி.மு.க., நடத்தவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றிருந்த காலத்தில், தமிழகத்திற்கு, தி.மு.க., எதுவும் செய்யவில்லை. அக்கட்சி, நேரத்திற்குநேரம் பச்சோந்தித்தனமாக, நிறம் மாறுகிற வல்லமை படைத்தது.நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் எதிர்க்கட்சியினர், தங்களை முன்னிலைப்படுத்த, அவர்களின் கொள்கைகளை, மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
அவர்களை ஏற்பது குறித்து, மக்கள் இறுதி முடிவு எடுப்பர். ஆனால், எங்களைப் பற்றி பேசினால் தான், அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது. அதனால்,எங்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.அரசின் குறைகளை சுட்டிக் காட்டலாம். அதை, ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக் கொள்வோம். ஆனால், காழ்ப்புணர்ச்சியோடு, சேற்றை வாரி இறைக்கும் செயலை ஏற்க மாட்டோம். அரசு குறித்து குறை கூறுவோருக்கு, நாங்களும்

Advertisement

பதிலடி கொடுப்போம். வீணாக வாயை கொடுத்து, வம்பில் மாட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

செயற்குழுவை கூட்டுது தி.மு.க.,

!
காவிரி விவகாரத்தில், போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்க, தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 30ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில் நடக்கிறது.
'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என, நேற்று முன்தினம், ஈரோட்டில் நடந்த, தி.மு.க., மண்டல மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, தி.மு.க., முன்னெடுக்கும் போராட்டத்தை, தனித்து நடத்தலாமா அல்லது கூட்டணி கட்சிகளையும் சேர்த்து நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்க, 30ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, நேற்று அக்கட்சியின் பொதுச்செயலர், அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-மார்-201805:07:05 IST Report Abuse

Sanny தமிழக பிரச்சனைகளான விவசாயிகள், காவிரி பிரச்சனைகளுக்கு தலைவர் வாய் திறக்க மாட்டார், தேர்தல் வரும்போது வாய் திறந்து ஓட்டு கேட்பார்.

Rate this:
Sandru - Chennai,இந்தியா
27-மார்-201804:41:17 IST Report Abuse

Sandruபொய் வாக்குறுதிகளை கொடுப்பது , கொலை செய்வது, உச்ச நீதி மன்ற தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது, விவசாயிகளை அவமதிப்பது , அழகிய நடிகைகளை அழைத்து பேட்டி கொடுப்பது, குஜராத் மோடிகளும், அடானிகளும் இந்தியா திரு நாட்டை கொள்ளை அடிக்க துணை நிற்பது . இதுதான் இப்போது நடக்கும் பி ஜெ பியின் ஆட்சி .

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201804:29:56 IST Report Abuse

Kasimani Baskaranகர்நாடகாவை பொறுத்தமட்டில் தண்ணீர் அவர்களுக்குத்தான் சொந்தம்... ஏதோ கருணையாக தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்... தேசத்தின் வழங்களைக்கொண்டு கட்டப்பட்ட அணையில் அவர்கள் மட்டுமே உரிமை கொண்டாடுவது தவறு... நீதிமன்றம் அதை மறந்துவிட்டு அவர்கள் தொடர்ந்து அடம் பிடிக்கும் பொழுது சுட்டிக்காட்ட மறந்து விடுகிறது... நீர் வளங்களை தேசியமயமாக்கினால் தவிர இதற்க்கு தீர்வு கிடையாது...

Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-மார்-201803:15:32 IST Report Abuse

வெகுளிகாவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை....... நம்ம ஆளுங்க வாயை மூட வில்லை..... வாய்ச்சொல் வீரர்கள்......மற்றபடி யாரும் எந்த ஆணியையும் அகற்ற மாட்டார்கள்..... தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலப்பதே இதற்க்கு ஒரே தீர்வு....

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
27-மார்-201802:39:27 IST Report Abuse

ramasamy naickenவாயை திறந்தால் வேஷம் கலைந்து விடுமே? அதனால்தான் தமிழ், ராஜா ஹரிஹர சர்மா போன்றோரை இங்கே குலைக்க வைக்கின்றார்கள்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மார்-201802:05:20 IST Report Abuse

தமிழ்வேல் \\\ ஆனாலும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை./// தமிழ் நாடு எக்கேடாவது கெட்டுப் போகட்டும் னுதான். இதை நமக்கு கொடுக்கும் மரியாதையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
27-மார்-201801:44:08 IST Report Abuse

Baskarஅவர் தான் ஒரு சாமியார் ஆயிற்றே எப்படி வாய் திறப்பார். மோடிக்கும் ரஜினிக்கும் வாய் திறந்தாள் முத்து உதிர்ந்து விடும். கல்லுளி மங்கள்.. பண்ணீரோ பஜனிசாமியோ டெல்லி போய் மோடிக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் வாய் திறப்பார்.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
27-மார்-201801:16:10 IST Report Abuse

அன்புகாவேரியெல்லாம் கிடையாது...ஓரமாய் போய் நில்லுங்க....என்ற தெனாவெட்டு பதில் தான் மோடியிடம் இருந்து கிடைக்கும். அதிமுக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குடுமியை சிபிஐ இடம் கொடுத்துவிட்டு, உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவிக்கும் அதிமுகவினர், மோடிக்கு ஒட்டு போட்டு காப்பாற்ற தான் முடியும்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement