கடப்பாரையால் நெம்பினாலும் அரசை அசைக்க முடியாது பழனிசாமி பேச்சு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கடப்பாரையால் நெம்பினாலும் அரசை
அசைக்க முடியாது: பழனிசாமி பேச்சு

கோவை: ''கடப்பாரையால் நெம்பினாலும், அ.தி.மு.க., ஆட்சியை அசைக்க முடியாது,'' என, கோவையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.

 கடப்பாரையால் நெம்பினாலும் அரசை அசைக்க முடியாது   பழனிசாமி பேச்சு

ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், கோவையில் நேற்று, 86 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

வலுவிழப்பு



அதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மதச்சார்பற்ற அரசு என்பதற்கு, இத்திருமண நிகழ்ச்சியே சான்று. எங்களுக்கு மதங்களில் வேறுபாடு இல்லை; அனைவரும் சமம். எம்.ஜி.ஆர்., - ஜெ., என, இருவர் வழியில் செல்கிறோம்.'சொடக்கு போட்டால், அ.தி.மு.க., ஆட்சி இருக்காது' என, ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடப்பாரையால் நெம்பினாலும், ஆட்சியை அசைக்க முடியாது. ஏற்கனவே நீங்கள் எடுத்த


முயற்சி வலுவிழந்து விட்டது.வரலாறு காணாத அளவுக்கு சட்டசபையில் அமளி செய்தனர்; ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கூட, நாங்கள் தாக்குப்பிடித்து, அதையும் முறியடித்து,ஆட்சியை காப்பாற்றி, சிறப்பாக நடத்தி வருகிறோம்.அவர்களின் கனவு, பகல் கனவாகவே இருக்கும்; அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இனி, ஆட்சியை கலைக்கலாம் என, கனவிலும் நினைக்காதீர்; நினைத்தாலும் பலிக்காது.மத்திய ஆட்சியில், 14 ஆண்டுகள், தி.மு.க., அங்கம் வகித்திருக்கிறது. மத்திய, பா.ஜ., ஆட்சியிலும் அங்கம் வகித்தனர்; காங்கிரஸ் ஆட்சியிலும் அங்கம் வகித்தனர். மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தனர். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

சட்ட போராட்டம்


ஜெ., சட்டப்போராட்டம் நடத்தி, நடுவர் நீதிமன்ற தீர்ப்பை பெற்றார்.
மத்தியில், தி.மு.க., அங்கம் வகித்தபோதே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம்; காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்திருக்கலாம்;

Advertisement

செய்திருந்தால், இப்போது ஏற்பட்டு இருக்கும் பிரச்னைக்கு இடமில்லாமல் போயிருக்கும்.மத்தியில் அதிகாரம் பெற வேண்டும் என மட்டுமே, தி.மு.க.,வினர் சிந்தித்தனர். மக்களுக்கு தேவையானதை கேட்டுப் பெற, அவர்கள் நினைக்கவில்லை.காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவை, ஆறு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 29ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதற்குள் மத்திய அரசு அமைக்குமென எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், அடுத்த நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழக மக்கள் உரிமையை பெற, அ.தி.மு.க., அனைத்து முயற்சியும் எடுக்கும்.இவ்வாறு, முதல்வர் பழனிசாமி பேசினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201804:35:22 IST Report Abuse

Kasimani Baskaranஇவர் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கிறார்... ஸ்டாலின் வேஷ்டியை கிழித்து கூட ஒன்றும் ஆகவில்லை... தினகரன் குக்கர் வைத்து சமைத்தும் கூட ஒன்றும் ஆகவில்லை... ஆனால் பாவம் தமிழகம்... ஊழல் பன்றிகளின் கையில் மாட்டி சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிறது...

Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-மார்-201803:28:08 IST Report Abuse

வெகுளிஇவர்களை தொரத்த அப்பாடக்கர் தினகரனாலேயே முடியவில்லை......செயலு என்ன செய்ய முடியும்....

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
27-மார்-201803:26:16 IST Report Abuse

Makkal Enn pakamகடப்பாரையாள வாய்க்குள்ள விட்டு ஆட்டுனா எல்லாம் சரியாப்போயிடும் .....

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-மார்-201802:08:17 IST Report Abuse

தமிழ்வேல் \\\ 29ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. /// அதன் பிறகு என்ன செய்வோம் என்று கூறி இருந்தால் கொஞ்சம் பயம் வரலாம்.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
27-மார்-201801:22:43 IST Report Abuse

ramasamy naickenஜெயாவையே தூக்கி குப்பை தொட்டியில் போட்டவர்கள் தமிழ்நாடு மக்கள். இவர்கள் வரும் தேர்தலில் எச்சி இலைகளோடு இந்த இரண்டு இலைகளையும் போட போகிறார்கள். பாவம் வரப்போவது தெரியாமல் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
27-மார்-201801:11:09 IST Report Abuse

அன்புமோடி நினைத்தால், சொடக்கு போடும் நேரத்தில், பழனியை இறக்கிவிட்டு, ம பாண்டியராஜனை முதல்வர் ஆக்கிவிடுவார். காவேரியை பிஜேபி கர்நாடகாவில் ஜெயிப்பதற்காக பலிகொடுத்துவிட்டு, தமிழகத்தில் வீர பேச்சு பேசிக்கொண்டு திரியும் பொம்மை பழனியை நினைத்தால், சிரிப்பாக இருக்கிறது. கவர்னரிடம் இருந்து போன் என்று யாராவது சொன்னால் போதும், இஞ்சி தின்ன குரங்கை போன்று அலறி அடித்து கொண்டு கும்பிட்டு கொண்டே ஓடும் பழனி, வடிவேலுவின் அவதாரம்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
27-மார்-201801:02:49 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்எம்ஜியார் பிறந்த நாள், ஜெ பிறந்த நாள்.. வேற என்னடா செஞ்சிருக்கீங்க.?

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201800:23:54 IST Report Abuse

Mani . Vஒரே வேலையை பார்ப்பதற்கு, இருவருக்கு வெட்டியாய் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம். (எப்படித்தான் செரிக்குதோ போங்க?).

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement