வங்கிகளில் கடன் மோசடி செய்த நிறுவனங்கள் பட்டியல் நீள்கிறது! Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வங்கி,கடன் மோசடி, நிறுவனங்கள், பட்டியல்,நீள்கிறது, நாதெள்ளா

போலி கணக்குகள் கொடுத்து, வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த, பிரபல நிறுவனங்களின் பட்டியல் நீள்கிறது. சென்னை யில், 'கனிஷ்க்' நகைக் கடையை தொடர்ந்து, நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனமும், 250 கோடி ரூபாயை, 'ஸ்வாகா' செய்த விவகாரம், தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் துணை நிறுவனத்தின், நகை சேமிப்பு திட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீடு செய்து, 21 ஆயிரம் பேர் ஏமாந்துள்ளனர். இது தொடர் பாக, பாரத ஸ்டேட் வங்கி புகார் செய்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

வங்கி,கடன் மோசடி, நிறுவனங்கள், பட்டியல்,நீள்கிறது, நாதெள்ளா


மும்பையைச் சேர்ந்த, நிரவ் மோடியும், அவரது உறவினர், மெஹுல் சோக்சியும், பல்வேறு நாடுகளில், தங்கம், வைரம், பிளாட்டினம் என, விதவிதமான நகைகள் விற்பனை செய்யும் கடைகளை, 'கீதாஞ்சலி ஜெம்ஸ்' என்ற, பெயரில் நடத்தி வந்தனர்.இவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடன் வாங்கி, ஏப்பம் விட்டு உள்ளனர்.


வங்கி அதிகாரிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, வெளிநாட்டிற்கு தப்பிய, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியை தேடி வருகின்றனர்.இதையடுத்து, 'ரோட்டோ மெக்' பேனா நிறுவன அதிபர், விக்ரம் கோத்தாரி, பொதுத்துறை வங்கிகளில், 3,695 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்துள்ள விவகாரம், வெளிச்சத்துக்கு வந்தது. அவரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


அதேபோல, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டோடம் இன்பிராஸ்ட்ரக்சர்' என்ற, நிறுவனத்தின்

அதிபர், சலாலித், அவரது மனைவி, கவிதா ஆகியோர், 1,394 கோடி ரூபாய், வங்கி மோசடி வழக்கில் கைதாகி உள்ளனர்.இப்படி அடுத்தடுத்து, தொழில் அதிபர்கள் செய்த, வங்கி மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.


அந்த வரிசையில், சென்னை உட்பட, பல நகரங் களில், 'கனிஷ்க்' நகைக்கடை நடத்தி வந்த, பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி நீடா ஜெயின் மற்றும் கூட்டாளிகள் உட்பட,ஐந்து பேர், 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்த தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அம்பலம்



இந்நிலையில், சென்னை உட்பட, பல நகரங் களில் செயல்பட்டு வந்த, பிரபல நகைக்கடை நிறுவனமான, என்.எஸ்.ஜெ., எனப்படும், 'நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி' நிறுவனமும், மோசடி வழக்கில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம், ஆண்டு வருமானத்தை அதிகம் காட்டி, போலி கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்து, பாரத ஸ்டேட் வங்கியில், 250 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

வங்கி அதிகாரிகள் புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், அந்த நகைக்கடை நிறுவன அதிபர்களை கைது செய்ய, தீவிரம் காட்டி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மோசடி செய்த பணத்தில், அவர்கள், சென்னை, காஞ்சிபுரம் என, பல மாவட்டங்களில், ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், சட்ட விரோதமாக, வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.


21 ஆயிரம் பேர்



இதுமட்டுமின்றி, 'நாதெள்ளா சம்பத் செட்டி' என்ற பெயரில், நாதெள்ளா ஜுவல்லரியின்

Advertisement

துணை நிறுவனமும் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், சென்னையில், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி என, எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில், நகைக்கடைகளை நடத்தியது.


ரங்கநாத குப்தா, அவரது மகன்கள், பிரபன்னகுமார், பிரசன்னகுமார், உறவினர், கோடா சுரேஷ் ஆகியோர், இவற்றை நடத்தி வந்தனர்.இவர்கள், தங்க நகை சேமிப்பு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள், 21 ஆயிரம் பேரிடம், 75 கோடி ரூபாய் வசூலித்த னர். ஆனால், 2017 அக்டோபரில், திடீரென இந்த கடைகள் மூடப்பட்டன. அதனால், இவற்றில் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


இந்த மோசடி தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்
பிரிவில், 3,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து உள்ளனர். சம்பந்தப்பட்ட நகைக்கடை அதிபர்கள், விரைவில் கைது செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


சுருட்டியது எப்படி?



நாதெள்ளா சம்பத் செட்டி நகைக்கடை அதிபர்கள், வாடிக்கையாளர்களிடம், தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, தவணையாக வசூலித்து உள்ளனர். 10 முதல், 15 மாதத்திற் குள், தங்க நகைகளாக தருவதாக கூறியுள்ளனர்; அதன் மூலமாக, 75 கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.


ஆனால், சொன்னபடி நகைகள் தராமல் இழுத்தடித்ததால், பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர்கள், கடை வாசலில் குவிந்தனர். அவர்களுக்கு காசோலைகள் கொடுத்து, நம்பிக்கை ஏற்படுத்துவது போல் நடித்து, பின், கடைகளை மூடிவிட்டு ஓடி விட்டனர். பணம் இல்லாமல், திரும்பி வந்த காசோலைகளுடன், வாடிக்கையாளர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal - COIMBATORE,இந்தியா
25-மார்-201810:36:33 IST Report Abuse

venugopalசா விஷயம் எல்லாமே பேங்க் அதிகாரிகளால் செய்யப்பட மோசடி.. கடன் கொடுக்கும்போதே இவர்களுக்கு எல்லா விளக்கமும் தெரியும் . அரசியல் தொடர்பு இல்லாமலே கூட கடன்கள் தரப்படுகின்றன .......அளவுக்கு அதிகமாக கடன் ...கொடுத்த பேங்க் அதிகாரிகள் அனைவரைம் அர்ரெஸ்ட் ...செய்தால்தான் உண்மை வெளிவரும் ......யார் யார் இதில் சம்பந்த பட்டுள்ளார்கள் என்று....எல்லாமே கமிஷன் செயல் ......இப்பயாச்சும் கொஞ்ச விஷயம் வெளியே வருதே......தலை சுத்துது

Rate this:
25-மார்-201810:01:44 IST Report Abuse

a.thirumalaiஎன்னடா இது மூன்று வேளைக்கு போராட்டமா இருக்கு. ஒரே ஒரு வாய்ப்பு. ....ம்ம்ம். ..

Rate this:
rajan - kerala,இந்தியா
25-மார்-201808:40:50 IST Report Abuse

rajanஆக மொத்தத்தில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டு கடை திறந்தால் போதும் அதை வைத்து வங்கிகளில் தேவையான ஆவணங்களை பல வழிகளில் உருவாக்கி அது சார்ந்த அதிகாரிகள் அதை சட்டப்பூர்வ தஸ்தாவேஜாக எடுத்து கோடிகளில் கடன் தொகையை வங்கி சார்ந்த எல்லா மட்ட அதிகாரிகளும் சுமுக லஞ்ச பங்கீடு செய்து மக்கள் பணம் அரசுப்பணம் நூதனமாக முந்தைய ஆட்சியாளர்களால் சூறையாட பட்டுள்ளது. இதில் நிதியமைச்சகம் முதல் RBI வரை அரசியல்வாதிகள் பங்கீடு தலையீடுகளால் சீரழிக்க பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வர துவங்கி உள்ளது. இது தான் குறுக்கு வழி சிந்தனையாளர்களின் குறுக்கு புத்தி செயல்பாடுகள். இப்படியாக நீதி துறை, வங்கி துறை,நிதி துறை, சட்டத்துறை என எல்லா இடங்களிலும் அரங்கேறியுள்ள முறைகேடுகளை களைய மத்திய அரசு முன் வரவேண்டிய நிர்பந்தம் தான் இன்றைய எதிர்கட்சிகளுக்கு அரசு கொடுக்கும் நெருக்கடியை தட்டி கழிக்க பார்லிமென்டை அரசை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இங்கு மத்திய அரசு நிதானமாக தான் சாட்டையை சுழற்ற முடியும். காரணம் ஒவ்வொரு ஊழலை வெளி கொண்டுவரும் போதும் சட்டம் தண்டனை சார்ந்த ஆதாரங்களை தடயங்களை சேகரிப்பதும் பாதுகாப்பதுமே துறை ரீதியாக புரையோடி உள்ள கைக்கூலிகளின் பெரிய வளையத்தை உடைப்பது என்பது அத்தனை கடினம். ஏனென்றால் பெரும்பான்மையோர் இங்கு லஞ்ச ஊழல் பங்காளிகள் தங்கள் பாதிப்பை தவிர்க்க பெரிய ஊழல்வாதிகளுக்காக மும்முரமாக உழைப்பார்கள் என்பதே கண்ணக்கூடு. அப்போ அந்த பெரிய ஊழல் நாயகன் சுதந்திரமாக எந்த கவலையும் இல்லாமல் உலா வருவான். அவனுக்கு நல்ல தெரியும் ஒரு ஊழல் கூட்டமே அவனுக்காக ராப்பகலாய் உழைக்குது என்ற உண்மை. இப்படியாக மறைமுகமாய் ஊழல் தேசியமயமாக்க பட்டு இந்த ஜனநாயகத்தில் வேரூன்றி உள்ளது. எத்தனை ஹிட்லர் முசோலினிகள் தேவை படும் இவர்களை சீரமைக்க என்பது தான் கேள்வியே. தீவிரமாக சிந்தியுங்கள் மக்களே நம்மை கடந்த கால ஆட்சியாளர்கள் எத்தனை பெரிய படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பதை. வாழ்க வளமுடன்.

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-மார்-201808:28:40 IST Report Abuse

Loganathan Kuttuvaநகைக்கடைகள் மூடுவிழாவால் குடும்ப தலைவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-மார்-201808:16:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇது இந்தியாவில் தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் இளச்சிவாயன்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது...

Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
25-மார்-201807:10:03 IST Report Abuse

Indhiyanரொம்ப சிம்பிள், இந்தியாவின் அமைப்பு சுலபமாக தவறு செய்வதற்கு வகையாக இருக்கிறது. தவறு செய்தால் கண்டுபிடிக்கவே பல பல வருடங்கள் ஆகும். கண்டுபிடித்தாலும் நீதிமன்றத்தில் தண்டனை பெற 20 வருடங்கள் ஆகும். எனவே நானும், நீங்களும், தைரியம் உள்ள எவரும் தாராளமாக தவறு செய்யலாம். இது அமைப்பின் குறை. எங்கே நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்றால் நம்ம்மில் எத்தனை பேர் வேண்டாம் என்று சொல்லுவோம்?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-மார்-201806:58:37 IST Report Abuse

ஆரூர் ரங்கோடிக்கணக்கான வங்கிக்கணக்குக்கள் வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கான கடனாளிகள் அவர்கள் அளித்துள்ள ஆலா கோடி ஜாமீன் ஆவணங்கள் இவற்றில் எது உண்மை ஆவணங்கள் எவை போலி என்பதைக் கண்டறிய மோதி தானே ஒவ்வொரு வங்கியாகப்போய் ஒவ்வொன்றாக ஆய்வது நல்லது .( மற்ற வேலைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்) ஏனெனில் வங்கியதிகாரிகள் பெரும்பாலும் காங்கிரஸ் சிபாரிசு நியமனங்கள். வங்கி ஆடிட்டர்களும் சட்ட ஆலோசகர்களும் அப்படியே ஆவணங்களை அளிக்கவும் வழக்குகளை தாமதப்படுத்தி திசை திருப்பவும் முயல்வார்கள்..ஆனால் யாராவது நீரவ் மாட்டிக்கொண்டால் நாலு வருடமாக என்ன செய்தீர்கள். நீங்கள்தான் குற்றவாளி என்பார்கள் . எனவே இனி ஒவ்வொரு மோதி அவர்களே வங்கிக்கிளையாகப் போய் குற்றவாளிகளை நேரடியாகக் கண்டுபிடியுங்கள் .ஆனால் ஒன்று விசாரிக்கப் போவதும் காங்கிரஸ் கால நியமன நீதிபதிகள்தான் என்பது நினைவிலிருக்கட்டும்

Rate this:
Anandan - chennai,இந்தியா
25-மார்-201808:40:53 IST Report Abuse

Anandanநிர்வாக கோளாறு இருந்தால் அதை சரி செய்யவேண்டிய கடமை அரசில் உள்ள கட்சிக்கு உள்ளதா இல்லையா...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-மார்-201806:33:14 IST Report Abuse

Kasimani Baskaranதமிழகத்தில் பல நகைக்கடைகள் சின்னம்மாவுக்கு கடன் கொடுத்து திவாலானவை... அவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டார்களா?

Rate this:
Anandan - chennai,இந்தியா
25-மார்-201808:37:39 IST Report Abuse

Anandanகாசிமணி, உங்களின் இந்த கருத்திற்கும் பொங்கி வர சில அடிமைகள் உண்டு. ஏன்னா உண்மை சுடத்தானே செய்யும்....

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
25-மார்-201806:21:25 IST Report Abuse

VOICEஉண்மையா உழைத்தால் பல கோடி தொழில் அதிபர் ஆகமுடியாது. பணம் வாங்கி கடன் கொடுத்த வங்கி அதிகாரி கைது பற்றி அல்லது அவர்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் இல்லை ஏன் ? தமிழ்நாட்டிலே மட்டும் தான் ரெய்டு தினமும் குஜராத் தொழிலதிபர் யாவரும் சோதனை இட்டதாக தகவல் யில்லை? நாட்டில் வங்கி ஏமாற்றும் நபர்கள் பலர் குஜராத் சேர்ந்த வியாபாரிகள் தான் .

Rate this:
Anandan - chennai,இந்தியா
25-மார்-201808:41:30 IST Report Abuse

Anandanஇந்த நிறுவனம் குற்றத்தை சேர்ந்தது இல்லை தெலுங்கர்....

Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
25-மார்-201803:57:29 IST Report Abuse

Muruganஇது எப்படி வங்கி அதிகாரிகளுக்கும் ,அரசுக்கும் தெரியாமலா இப்படி கொள்ளை அடிக்கப்படும்.......பெரிய பதவியில் உள்ள யாவருமே கை சுத்தம் இல்லையோயென என்னதான் தோன்றுகிறது . மக்களின் பணத்திற்கு என்ன பாதுகாப்பு

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement