'ஆர்டலி'யாக எடுபிடி வேலை செய்யும் போலீசார்: பட்டியல் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஆர்டலி'யாக எடுபிடி வேலை செய்யும் போலீசார்
பட்டியல் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி

ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள, டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், 'ஆர்டர்லி'யாக, எடுபிடி வேலை செய்யும் போலீசார் குறித்த பட்டியல், சமூக வலைதளங்களில் வெளியாவது, அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 'ஆர்டலி'யாக, எடுபிடி ,வேலை செய்யும், போலீசார்,  பட்டியல் வெளியானதால், அதிகாரிகள், அதிர்ச்சி


சென்னை உயர்நீதிமன்றத்தில், போலீஸ்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிபதி, கிருபாகரன், 'அதிகாரிகளின் வீடுகளில், 'ஆர்டலி'யாக எத்தனை போலீசார் பணியாற்று கின்றனர்' என்பது உட்பட, பல கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து, நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்களின் வீடுகளில், எடுபிடி வேலை பார்க்கும், போலீசார் குறித்த பட்டியல், சமூக ,

வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

டி.ஜி.பி., அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு, டி.ஜி.பி., துவங்கி, ஏ.ஐ.ஜி., வரையிலான, 15 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, ஓட்டுனர்கள் மட்டும், 90 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

அதேபோல, அலுவலக உதவியாளர்களாக, 60 பேர்; முகாம் அலுவலகங்களில், 30 பேர் என435 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.அதிகாரிகளின் வீடுகளில், சமையல் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல், நாய் குளிப்பாட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆண் போலீசார், 10 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

அதிகாரிகளின் மனைவியர் ஷாப்பிங் செல்லும் போது, கூடை துாக்குதல், அழகு நிலையத்திற்கு அழைத்து செல்லுதல், குழந்தைகள் பராமரிப்புக்கு என, 5,000 பெண் போலீசார், ஆர்டலியாக உள்ளனர்.

இவர்கள், காவல் நிலையங்களில் பணிபுரிவதாக, உயர் போலீஸ் அதிகாரிகள் பொய் கணக்கு எழுதி, மக்கள் வரிப்பணத்தை, சம்பளமாக பெற்றுத் தரு கின்றனர். அவர்களின் உண்மை முகத்தை, 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலை தளங் களில் அம்பலப் படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

பட்டியல் தயாரிப்பு மும்முரம்


போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:
* ஆர்டர்லி முறை, 1979ல் அழிக்கப்பட்டதாக, அரசு ஆணை உள்ளது. தற்போதும், ஆர்டர்லி முறை உள்ளதா?

* தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை பேர், ஆர்டர்லியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை பட்டியலாக தரவும்

* காவல் துறையில், 10 ஆண்டுகளாக, பணியில் இருந்து விலகியோர்; பணி நீக்கம் செய்யப்பட்டோர்; தற்கொலை செய்து பலியானோர் விபரம் தேவை

* பணியின் போது உயிரிழிந்த போலீசாரின் எண்ணிக்கையை உடனடியாக, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சுற்றிக்கையில் கேட்கப்பட்ட தகவல் களை, நேற்று மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, தகவல்கள் திரட்டப்பட்டு, பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI S - CHENNAI,இந்தியா
21-மார்-201817:37:47 IST Report Abuse

MANI SNot only in Police, It is very bad when compare to this in Military

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201816:35:30 IST Report Abuse

Endrum Indianகாவல் துறையின் பெயர் தற்போதைய திராவிட ஆட்சியில் (தி.மு.க, அ.தி.மு.க) அரசியல்வாதிகள் ஏவல் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பது என்று தான் எல்லோருக்கும் தெரியுமே.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
21-மார்-201811:25:52 IST Report Abuse

நக்கீரன்ஏண்டா போலீஸ்களா உங்களுக்கு எடுபுடி வேலை செய்ய தனியா வேலையாள் வைக்க வேண்டியதுதானே. மக்கள் வரிப்பணத்தில் அப்படி சொகுசாக நீங்களும் உங்க குடும்பமும் வாழ வேண்டுமா?

Rate this:
Kalyanaraman S - Bangalore,இந்தியா
21-மார்-201810:48:40 IST Report Abuse

Kalyanaraman S\\போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை: "ஆர்டர்லி முறை, 1979ல் அழிக்கப்பட்டதாக, அரசு ஆணை உள்ளது. தற்போதும், ஆர்டர்லி முறை உள்ளதா?", என்னங்க, இப்பிடி சொல்றீங்க/பண்றீங்க? உங்க வீட்டிலே வேலை செய்யும் சமையல்காரர், வேலைக்காரர், மற்றைய எடுபிடிகள் போன்றோருக்கு தாங்கள்தான் சம்பளம் கொடுக்கிறீர்களா, அல்லது வேறு யாரேனும் கொடுக்கிறார்களா? வேறு யாரேனும் கொடுக்கிறார்கள் என்றால், அவர்களின் (கொடுப்பவரின்) விபரங்களை தயவுசெய்து தெரிவிக்கவும்

Rate this:
21-மார்-201810:39:48 IST Report Abuse

ushadevanமனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவிறகு போவதற்கு இதுவும் முக்கிய காரணம்.அவர்களின் விருப்பமில்லாமல் வேலை வாங்கினால் இதுவும் கொத்தடிமை போலதான்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201809:07:57 IST Report Abuse

balakrishnanசுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் கழித்தும் இதுபோன்ற அவலங்கள் இருந்துவருவது அவமானம், உடனே இதுபோன்ற பணிகளில் வேலை செய்பவர்களை வேறு பணிகளுக்கு மாற்றவேண்டும், வெளிநாடுகளில் அவனவன் அவனுடைய வேலைகளை தானே செய்து கொள்கிறான், இங்கே தான் ஒரு அதிகாரிக்கு ஆயிரம் எடுபிடி,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201808:28:51 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎடுபிடி வேலை என்றால் என்னென்ன என்று தெரியுமா...... சமையல் செய்வது.. துணி துவைப்பது..வீடுவாசல் பெருக்குவது கோலம் போடுவது... கடைக்கன்னிக்கு போய் வருவது... பிள்ளைகளை பள்ளியில் விட்டு திரும்ப அழைப்பது...சமயத்தில் உடம்பை பிடித்து விடுவது... போன்ற எளிய வேலைகள்தான்...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-மார்-201808:10:51 IST Report Abuse

ஆரூர் ரங்கருணாநிதிக்கு எடுபிடி வேலை செய்த போலீஸ் அதிகாரிக்கு பல கோடி மதிப்புள்ள அரசுநிலத்தை அடிமாட்டுவிலைக்குக் கொடுத்தார்கள். இதனைக் கண்டால் மற்றவர்களும் இதே வேலைக்கே ஆசைப்படுவார்கள்

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201809:08:47 IST Report Abuse

balakrishnanநீங்க ஹேமமாலினிக்கு எந்த விலையில் இடம் கொடுத்தீர்கள், அதுவும் மும்பையில், அதை முதலில் சொல்லுங்கள்...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
21-மார்-201815:57:35 IST Report Abuse

dandyஹி ஹி ஹி கட்டுமரம் எல்லாம் சட்ட படி செய்தார் ...ஊழல் கூட ........

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
21-மார்-201807:37:37 IST Report Abuse

சந்தோசு கோபுஎந்தளவுக்கு காவல்துறை உருக்குலைந்திருக்கு இந்த நாட்டுல என்பதற்கு அளவுகோலா இருக்கிறது இந்த ஆர்டர்லி முறை.. எவ்வளவு கேவலமான வக்கிரம் பிடிச்ச மக்கள் உயர்பதவிகளுக்கு வர்றாங்க என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.. சாமான்யனிடம் வலியுறுத்தப்படும் 'சட்டத்தின் ஆட்சி' என்பதை இதுங்க எப்படி கடிச்சி குதறி வச்சிருக்குதுங்கனு புரியுது..

Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
21-மார்-201806:31:05 IST Report Abuse

kalyanasundaramRajendran just creating an illusion. He must be aware of this and if refuses this news then he too cheating the people as well government. This services by orderly is also exists in army too.In police cans are utilised and in army soldiers are utilised for such personal works. For their activities government vehicles are used. Will high courts take notice of all these happenings. That's why India needs a dictators rule so that all these ruts are cleared

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement