அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது எதிர்க்கட்சிகள் அதிருப்தி: அமளி செய்து மத்திய அரசை காப்பாற்றுவதாக புகார் Dinamalar
பதிவு செய்த நாள் :
அதிருப்தி!
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது எதிர்க்கட்சிகள்...
அமளி செய்து மத்திய அரசை காப்பாற்றுவதாக புகார்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரச்னையில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோபமும், அதிருப்தியும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது திரும்பியுள்ளது. தேவையில்லாமல் அமளியில் ஈடுபட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிரான விவாதத்தை நடத்த விடாமல், அ.தி.மு.க.,வினர், மத்திய அரசை காப்பாற்றுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது எதிர்க்கட்சிகள் அதிருப்தி: அமளி செய்து மத்திய அரசை காப்பாற்றுவதாக புகார்


மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட, ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட வேண்டுமெனில், சபையில், 50 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. அமளியோ, கூச்சல், குழப்பமோ இல்லாமல், சபை அமைதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு இல்லையெனில், சபாநாயகர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கலாம். இந்நிலையில், 16ம் தேதி நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை, எதிர்க்கட்சிகள், நேற்று மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்தன.


முற்றுகை



இத்தனை நாட்களாக, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்த எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் அனைவருமே அவரவர் இருக்கைகளில் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆனால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மட்டுமே, சபையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கோஷம் எழுப்பினர்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, எம்.பி.,க்கள் சிலர் நின்றிருந்தாலும், அ.தி.மு.க.,வின் குரலே பலமாக ஒலித்தது. அமளி அதிகமாகி, 12:00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் சபை கூடியபோது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீண்டும் அமளியில் இறங்கினர்.அப்போது, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், ''நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தவே அரசு விரும்புகிறது,'' என்றார். ஆனாலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் அமளி தொடர்ந்தது.


இதை, மற்ற கட்சி, எம்.பி.,க்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''தீர்மானத்தை ஆதரிக்கும், எம்.பி.க்கள் யார் என, எனக்கு தெரிய வேண்டும்; அவர்களின் தலைகளை எண்ண வேண்டும்; ஆனால், சபையில் அமைதி இல்லையே,'' என்றார்.
உடனடியாக, ஒட்டு மொத்த எதிர்க்கட்சி, எம்.பி.,க்களும் எழுந்து, இரு கைகளையும் உயர்த்தி, 'தீர்மானத்தை ஆதரிக்கிறோம்; விவாதத்தை அனுமதியுங்கள்' என, வலியுறுத்தினர். ஆனாலும், அ.தி.மு.க.,வினரின் கோஷங்கள் ஓங்கி ஒலிக்க, அதையே காரணமாக வைத்து,''சபையில் அமைதி இல்லை; எனவே, தீர்மானத்தை எடுத்துக் கொள்ள இயலாது,'' என கூறிய, சபாநாயகர், சுமித்ரா மகாஜன், எழுந்து சென்றார்.இதனால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் கோபமும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது திரும்பிஉள்ளது.இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்த தீர்மானத்தை, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமளியில் ஈடுபட்டு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், சீர்குலைத்து விட்டனர்.
தீர்மானத்தை, அ.தி.மு.க., ஆதரிப்பதாலோ, ஓட்டு போடுவதாலோ, மத்திய அரசு கவிழ்ந்து விடாது.தீர்மானத்தை, ஆந்திர, எம்.பி.,க்கள் தாக்கல் செய்திருந்தாலும், அதில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்றெல்லாம் குறிப்பிடவில்லை.

வலுவான வாதம்


அந்த நோட்டீசில், 'நம்பிக்கை இல்லா தீர்மானம்' என மட்டுமே, குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், விவாதத்தின்போது, ஒவ்வொரு கட்சியும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, முக்கிய பிரச்னைகளைப் பேசலாம்.உதாரணமாக, காஷ்மீர், எம்.பி.,க்கள் குண்டு வெடிப்புகளையும், பஞ்சாப், எம்.பி.,க்கள் விவசாயிகள் பிரச்னை குறித்தும் பேசுவர்.
அதுபோல, அ.தி.மு.க., நினைத்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை சரியாக பயன்படுத்தி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பேசியிருக்க முடியும்.இதன் மூலம், விவாதத்துக்கு வழி ஏற்படுத்தலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியத்தையும்,சிக்கல்களையும், பார்லி மென்டில், வலுவான வாதங்களால் எடுத்து வைத்திருக்க முடியும்.
பா.ஜ.,வையோ, மத்திய அரசையோ விமர்சித்துக் கூட பேச வேண்டிய அவசியமில்லை.

துயரம்



குறைந்தபட்சம், விவாதத்தின்போதுதமிழகத்தின் ஜீவதாரப் பிரச்னையின் முழு துயரத்தையும், தேசிய அரங்கில் வெளிச்சம் ,

Advertisement

போட்டு காட்டியிருக்கலாம்.இந்த வாய்ப்பை அ.தி.மு.க., தவற விட்டுள்ளது. பார்லிமென்டை பயன்படுத்தும் வழிமுறைகள், தம்பிதுரை, வேணுகோபால் போன்ற மூத்த, எம்.பி.,க்களுக்கு தெரியாமல் இருக்காது. ஆனாலும், விடாப்பிடியாக, அமளி செய்கின்றனர் எனில், அது, எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து, பா.ஜ.,வை காப்பாற்றும் நடவடிக்கையே அன்றி, வேறொன்றும் இல்லை.இதனால், தேசிய அளவில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் கோபமும், அதிருப்தியும், அ.தி.மு.க.,வின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், இன்று, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய, எதிர்க்கட்சிகள், 'நோட்டீஸ்' அளித்துள்ளதால், பரபரப்பு காணப்படுகிறது.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சமாஜ்வாதி பாய்ச்சல்



சமாஜ்வாதி கட்சியின் மூத்த, எம்.பி., ராம்கோபால் யாதவ், நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்க்கட்சிகளின் கோபாவேசத்தில் இருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அ.தி.மு.க., - எம்.பி.,க்களை, பா.ஜ., ஏவி விடுகிறது; அதன்படியே, அமளி செய்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய விடாமல், அ.தி.மு.க., தடுக்கிறது. இந்த கட்சி, எம்.பி.,க்களின் செயல்பாடுகள், முற்றிலும், பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

'நினைத்தால் முடியும்'


தெலுங்கு தேசம், எம்.பி., சீனிவாச ராவ், நிருபர்களிடம் கூறியதாவது:சபாநாயகர் நினைத்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, சபையில் விவாதம் செய்ய அனுமதி வழங்க முடியும். ஆனாலும், அ.தி.மு.க.,வினர் அமளி செய்வதாக பழிபோட்டு, அதன் மூலம், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்
படாமல் தடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thiru - Chennai,இந்தியா
20-மார்-201812:27:11 IST Report Abuse

thiruநாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்தால் நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டுவர முடியாது.. எல்லாம் பாஜகவின் உத்தரவு படி நடக்கிறது...

Rate this:
smoorthy - bangalore,இந்தியா
20-மார்-201812:22:10 IST Report Abuse

smoorthyஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது / அது சரி / தமிழகத்தில் மறைந்த முதல்வர் அவர்களுக்காக வோட்டு போட்ட அனைவரும் முட்டாள் என MP க்கள் நினைத்து விட்டார்கள் போலும் / தற்போது ஆளும் கட்சிக்கு எப்போதும் நாம் ஆதரவு கொடுத்ததில்லை / எதிர்த்து ஒட்டு போட பின் ஏன் தயக்கம் / வோட்டு போட்ட மக்கள் உங்களை கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்கள் / 2019 LS தேர்தல் வருகிறது மறந்து விடாதீர்கள்/ உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும் /

Rate this:
naankabali - kovai,இந்தியா
20-மார்-201810:28:10 IST Report Abuse

naankabaliஇது என்னையா உங்க கூட ஒரே ரோதனையா போச்சு? அவங்க போராடவில்லை என்றால் குற்றம். போட்டினாலும் குற்றம் என்றால் தமிழக பிரதிநிதிகள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது?

Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
20-மார்-201808:44:05 IST Report Abuse

Ganapathyபிஜேபி அரசு ஒன்றும் கவிழப்போவது இல்லை . அனாலும் பாராளுமன்றத்தில் தமிழக நிலைப்பாட்டை எடுத்துரைக்க நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது பேச கிடைக்கும் வாய்ப்பு இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். பிஜேபி மற்றும் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்ட நல்ல தருணம். ஒரு போராட்டம் தோற்போம் என்று தெரிந்து இருந்தாலும், எதிரான நிலைப்பாட்டை பதிவு செய்வது அவசியம். அதை விடுத்தது ஜால்ரா சப்தம் தான் அதிகம் கேட்கிறது .

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
20-மார்-201808:30:57 IST Report Abuse

balakrishnanஎன்றைக்குமே பி.ஜெ.பி க்கு அதுவும் குறிப்பாக நமது பிரதமர் மோடி அவர்களுக்கு விவாதத்தின் மீது நம்பிக்கை கிடையாது, மோடி அவர்கள் உள்துறை மந்திரி கூறியிருப்பது போல அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர், எந்த ஒரு விவாதத்துக்கு அவர் கட்டுப்பட்டவர் அல்ல இது தான் மோடியின் ஜனநாயகம், அவர் தன்னிடம் இருக்கும் அடிமை கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, மக்களின் பிரச்சனைக்காக அவர் எந்த பிரதிநிதியையும் சந்திக்க மாட்டார், அரசியல் பிரச்சனைகளுக்காக யாரை வேண்டுமானாலும் சந்திப்பார், கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் கண்கூட பார்த்து வருகிறோம், இது ஒரு ஆரோக்கியமான போக்கு அல்ல, இவர் இந்தியா என்கிற ஒரு கட்சியின் தலைவர் அல்ல, நாட்டின் பிரதமர், ஜனநாயக மாண்புகளுக்கு மதிப்பளித்தே தீரவேண்டும், இவரும் ஒரு மக்கள் பிரதிநிதி தான், மக்கள் தேர்ந்தெடுக்காமல் இவர் இந்த பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது, ஆனால் அவரை ஒரு அதிசயப்பொருளாக சித்தரிக்கும் ஒரு நாட்டில், அடுத்த பொது தேர்தல் தான் உரிய பதிலை கொடுக்கும், அதுவரை நாம் பொறுத்து தான் இருக்க வேண்டும்

Rate this:
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
20-மார்-201808:30:36 IST Report Abuse

sathis_kkகொடுத்த காசுக்கு நல்லா கூவராங்கயா... இவங்கள நோட் பண்ணி வச்சிக்கோங்க யூஸ் ஆகும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201808:23:44 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅ.தி.மு.க.,வினர், மத்திய அரசை காப்பாற்றுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ... வேஷம் போட்டாகிவிட்டது ..குலைத்துதானே ஆகவேண்டும்...

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
20-மார்-201807:57:19 IST Report Abuse

Pannadai Pandianஅப்படின்னா நல்லதுதான் செய்யுறாங்க.....அதன் நல்லா கன்டினியூ பண்ணுங்க. கான்க்ராஸ் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக மோடிக்கு ஆதரவா வாக்களிக்கணும்.....இல்லேனா உங்களையும் திருட்டு பயலுங்க கோஷ்டியில் சேத்துடுவாங்க....

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
20-மார்-201807:47:24 IST Report Abuse

VOICE13000 கோடி திருடியதை மறைக்க போடும் நாடகம். ஆந்திரா தமிழ்நாடு அரசியல்வாதி இருவரும் பிஜேபி கூட்டுகளவாணிதான். இன்னும் ஒருவருடம் வரை பதவி மூலம் கொள்ளையடிப்பதை விட்டுவிட்டு மஜோரிட்டி இருக்கும் பிஜேபிக்கு எதிராக எவனும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அந்த அந்த மாநில மக்களை ஏமாற்ற நாடகம். 13000 கோடி திருடி வெளிநாட்டுக்கு ஓடிய பார்லிமென்டில் விவாதத்தை தவிர்க்க பிஜேபி கட்சிக்கு உதவுகிறது இந்த இரு கட்சிகள்.

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
20-மார்-201807:33:06 IST Report Abuse

VOICEகாவிரி ப்ரிச்சனை பற்றி பேசுவது நீரவ் மோடி அடித்த 13000 கோடி பேசவிடாமல் தடுப்பதற்கு தான். பாராளுமன்ற அலும்பல் செய்வது தமிழக அதிமுக மற்றும் ஆந்திரா. இருவரும் பிஜேபி ஆதரவாளர்கள் தான் சும்மா நடித்து கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பலன் கொடுக்கப்படாவிட்டால் ஆதரவு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லாத இவர்கள் பார்லிமென்டில் எதற்கு கூச்சல் போடுகிறார்கள். . அது போல சசிகலா தரப்பு வாய்ச்சவடால் தவிர வேறு இல்லை. திராவிடம் நல்லதோ கெட்டதோ ஆனால் மத்தியில் இருப்போருக்கு பணிந்து தினகரன் சசிகலா திராவிடம் என்ற சொல் புதிய கட்சி பெயரில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர். இவர்கள் ஏதோ தைரியம் உள்ளவர்கள் என்று பார்த்தால் நரி ஒன்று சாயத்தில் விழுந்து புதிய வண்ணத்தில் வெளிவந்ததும் மற்ற மிருகங்கள் அதை பார்த்து அஞ்சி காட்டிற்கு ராஜா வாக தேர்ந்து எடுத்தது. ஒரு நாள் மழை வந்தது சாயம் வெளுத்தது. நீல சாயம் வெளுத்து போச்சு ராஜா வேஷம் கலைஞ்சு போன நரி மற்ற மிருங்கங்களால் விரட்டி அடிக்கப்பட்ட கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த கதை தினகரன் சசிகலாவிற்கு பொருந்தும். ஹிந்தி எதிர்த்து தமிழ் மொழி காக மாணவ பருவத்தில் போராடிய நடராஜனும் காலமானார் இவர்களை வழிநடத்த ஆளுமில்லை. நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் விலகியது 100 % சரி தான். ஊழல் செய்தாலும் கருணா எம்ஜியார் ஜெயலலிதா போன்று ஒரு தைரியம் சாமர்த்தியம் முடிவு எடுக்கும் தலைவர்கள் இல்லாதது குறை தான். தற்போழுது ஸ்டாலின் சிந்தித்து செயலாற்றும் தலைவர் ஆனால் அவரிடம் இன்னும் வேகம் வேண்டும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement