Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்டிரைக் அல்ல, சினிமாவை புதுப்பிக்க எடுத்த முடிவு : விஷால்

18 மார், 2018 - 08:34 IST
எழுத்தின் அளவு:
Vishal-about-theatre-strike

டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதனால் தமிழ் சினிமா முடங்கி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது...

இப்போது நடந்து கொண்டிருப்பதை ஸ்டிரைக் என்று என்னால் சொல்ல முடியாது. இது தமிழ் சினிமா துறையை புதுபிக்க, திருத்தங்கள் செய்ய, புத்துணர்ச்சியடைய செய்ய நாங்கள் எடுத்துள்ள முடிவு என்று சொல்லலாம்.


ஜிஎஸ்டிக்கு பின் தமிழ் சினிமாவில் இந்த திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதில், முதலாவது கியூப் பிரச்னை, இதை கியூப் பிரச்னை என்று சொல்லுவதே முதலில் தவறு. DSP (Digital Service Provider) பிரச்னை என்று தான் சொல்ல வேண்டும்.


ஹாலிவுட் படங்களுக்கு DSP குறைந்த கட்டணத்தை தான் வாங்குகிறார்கள். ஆனால், நம்முடைய படங்களுக்கு அதிகமாக வாங்குகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக அதிக கட்டணம் செலுத்தி வருகிறோம். திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்த படிவத்தில் இருந்தவற்றை படிக்காமல் கையெழுத்திட்டுள்ளனர்.


என்னுடைய படம் வெளியாகும் போது என்னுடைய நண்பர் நடித்த படத்தின் டிரைலரை போடவேண்டும் என்றால் முடியவில்லை. ஆனால், அவர்கள் ஜவுளி கடை, நகை கடையின் விளம்பரத்தை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


கியூப் தாண்டி பல பிரச்சனைகள் இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட் விற்பனை கம்யூட்டர் மூலம் வர வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே படத்தின் வசூல் எவ்வளவு, நடிகர்களின் மார்கெட் நிலவரம் என்ன என்று அறிய முடியும். அதை செய்யாமல் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொன்னால் எப்படி முடியும்.


ரூ.150 டிக்கெட் கட்டணம், பார்க்கிங், திண்பண்டங்கள், ஆன்லைன் கட்டணம் என ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் ரூ.800 ஆகிறது. இப்படியிருந்தால் எப்படி படம் பார்க்க வருவார்கள். மினிமம் கேரண்டியில் இனி படம் வேண்டாம்... டிக்கெட் விலை ரூ.80, 50, 30 என்று வையுங்கள்.. பெரிய படங்கள், சின்ன படங்களுக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள் மக்கள் பலரும் தியேட்டர் வருவார்கள்.


தாணு, அம்மா சிவா, எஸ்ஏ.சந்திரசேகர், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவாதிக்க உள்ளோம். இனி தயாரிப்பாளர் சங்கத்தில் படங்களின் ரிலீஸ் தேதி, படங்களின் ஷூட்டிங் நிலவரம் பற்றி அறிவிப்பு ஒட்டப்படும்.


அரசாங்கத்தின் உதவி இல்லாமல் எங்களுக்கு எதுவும் சாத்தியம் இல்லை. அதிக டிக்கெட் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் டிக்கெட்டுகளை கணினிமயமாக்கும் வரை திரைப்படத்தை வெளியிட மாட்டோம்.


இவ்வாறு விஷால் கூறினார்.


Advertisement
சினிமா ஸ்டிரைக் விவகாரம் : கமலுடன் விஷால் சந்திப்புசினிமா ஸ்டிரைக் விவகாரம் : கமலுடன் ... கமல்ஹாசன் கொடுத்த வாக்குறுதி கமல்ஹாசன் கொடுத்த வாக்குறுதி


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
Tamil New Film Pariyerum perumal
Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in