ராஞ்சி: கால்நடைத்தீவனம் வாங்கியதில் அரசு கருவூலத்தில் ரூ.3. 13 கோடி கையாடல் செய்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு குற்றவாளி எனவும் அவருக்கு ஆண்டு சிறைத்தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விதித்து சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே முன்னதாக பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலுவுக்கும் மேலும் ஒரு தண்டனையால் அவரது எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகியுள்ளது. இன்றைய வழக்கில் 19 பேர் குற்றவாளி எனவும், முன்னாள் முதல்வர் ஜெகன்னாத்மிஸ்ரா 12 பேரை விடுவிப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வர்கள், லாலு பிரசாத்
மற்றும் ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோர், தும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட, மாட்டுத் தீவன ஊழலின், நான்காவது வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட இந்த தீர்ப்பை, சி.பி.ஐ.,சிறப்பு நீதிபதி, ஷிவ் பால் சிங் இன்று வழங்குகிறார். லாலு பிரசாத் மற்றும் ஜெகன்னாத் மிஸ்ரா தவிர, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள் உட்பட, 29 பேருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநிலத்தில், 1990களில், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
போலி பில்கள் கொடுத்து, கருவூலங்களில் இருந்து, 950 கோடி ரூபாய் பணம் எடுத்து, முறைகேடு நடந்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது.இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.
முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத்துக்கு எதிராக, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதல் வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2013ல் தீர்ப்பு அளிக்கப் பட்டது.இரண்டாவதுவழக்கில், மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.மூன்றாவது வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும், ஐந்து ஆண்டு சிறை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 48 பேரும் குற்றவாளிகள் என, சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply