புதுடில்லி: ''அண்டை நாடான பாகிஸ்தானுடன், நட்பு பாராட்டவே, இந்தியா விரும்புகிறது. ஆனால், அதை ஏற்க மறுக்கும், பாக்., தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளது; தற்போதும் இருக்கிறது; இனியும்இருக்கும். அதை யாரும் மாற்ற நினைத்தால், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவும், இந்தியராணுவம் தயங்காது,'' என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
தனியார், 'டிவி' நிறுவனத்தின் சார்பில், டில்லியில் நடந்த, 'ரைசிங் இந்தியா' நிகழ்ச்சி யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசியதாவது: காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு, தன் நிலைப் பாட்டில் உறுதியாக உள்ளது. அது, எப்போதும் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்துள்ளது.
காஷ்மீர், இப்போதும், எப்போதும் நம்முடைய தாகவே இருக்கும்.இதை மாற்ற நினைக்கும் எந்த சக்தியையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம். அண்டை நாடான பாகிஸ்தானை, நட்பு நாடாகவே பார்க்கிறோம். ஆனால், அவர்கள் நம்முடைய நட்பை ஏற்க மறுக்கின்ற னர்.
ஐ.நா., அமைப்பால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட, ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதுடன், அரசியல் கட்சியையும் துவங்கியுள்ளான். தேர்தலில்
போட்டியிட்டு, மக்கள் பிரதிநிதியாக மாற முயற்சிக்கிறான். அவனை போன்ற பயங்கர வாதி களை,பாக்., அரசு தொடர்ந்து ஆதரித்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களை மூளை சலவை செய்ய நினைக்கும் பயங்கரவாதிகள், தங்கள் எண்ணத்தை
மாற்றிக் கொள்வது நல்லது. காஷ்மீர் இளைஞர்கள், மாணவர்கள், தாங்கள் யார்
என்பதை சிந்திக்கத் துவங்கியுள்ளனர். புனிதப் போர் என்ற பெயரில், வன்முறையைதுாண்டும் பயங்கரவாதிகள், இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ள உண்மையான புனிதப் போர் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்களை, தீயசக்திக்கு ஆதரவாக திருப்பி விடும் செயல்களை கைவிடாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.காஷ்மீர் மாணவர்கள், நாட்டின் வேறெந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களை விடவும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களும், மற்றவர்களைப் போலவே நடத்தப்படு கின்றனர். காஷ்மீர் வளர்ச்சியை மனதில் வைத்து, இளைஞர்கள், மாணவர்கள் செயல்பட வேண்டும்.
இந்தியாவிடமிருந்து, காஷ்மீரைப் பிரிக்க நினைக்கும் சக்திகளை சாதாரணமாக விட்டுவிட முடியாது. காஷ்மீரை காப்பதற்காக, இந்திய எல்லைக்குள் இருந்து மட்டுமின்றி, எல்லை தாண்டியும் தாக்குதல் நடத்த நம் ராணுவம் தயங்காது.நாட்டின் பல பகுதிகளிலும் அச்சுறுத் தலை ஏற்படுத்தி வரும் நக்ச லைட்கள், படிப் படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளில், நக்சலைட்களின் ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் குறைந்து உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
ஒருமுறை மன்னிப்பு!
பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு எதிராக, முதல்
முறை கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டோரை
விடுவிப்பதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற, மாநில
அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, ராஜ்நாத் சிங் மேலும் பேசிய தாவது:பிரிவினைவாதிகள், பயங்கரவாதி களால் மூளை சலவைக்கு ஆளாகி, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிராக, காஷ்மீர் இளைஞர்கள் கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் முறையாக கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களை விடுதலை செய்யவும், மக்கள் ஜனநாயக கட்சியைசேர்ந்த, முதல்வர், மெஹபூபா முப்தியிடம் அறிவுறுத்தி யுள்ளேன். பயங்கர வாதிகளின் துாண்டுதலால், முதல் முறை தவறு செய்வோரை மன்னித்து, அவர்கள் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு அளிக்கப் படும்.காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவே, மத்திய அரசு விரும்புகிறது. இதற் காகவே, மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியாக, தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், அனைத்து தரப்பு மக்கள், பிரிவினை வாதிகள், அரசியல் கட்சியினரிடம் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பார். காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும்; இங்குள்ள மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதில், மத்திய, பா.ஜ., அரசு, என்றும் உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3+ 22)
Reply
Reply
Reply