வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய பா.ஜ., மோடி மீது ராகுல், சோனியா கடும் தாக்கு Dinamalar
பதிவு செய்த நாள் :
வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய பா.ஜ.,
மோடி மீது ராகுல், சோனியா கடும் தாக்கு

புதுடில்லி, :''மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற தவறிவிட்டது,'' என, காங்., தலைவர் ராகுல் பேசினார்.

  வாக்குறுதியை, நிறைவேற்ற, தவறிய, பா.ஜ., மோடி, மீது ராகுல், சோனியா, கடும் தாக்கு


காங்கிரஸ் கட்சியின், 84 வது தேசிய மாநாடு, டில்லியில் நடக்கிறது. காங்., தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு என்பதால், இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில், காங்., தலைவர், ராகுல், முன்னாள் தலைவர், சோனியா, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


மாநாட்டில், காங்., தலைவர், ராகுல் பேசிய தாவது:மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. இதன் மூலம், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டு மக்கள் மிகவும் களைப் படைந்து விட்டனர். அவர்களை புத்துணர்வு அடையச் செய்ய வேண்டும் எனில், 2019 லோக்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற வேண்டும்.


முடங்கி கிடக்கும் இந்தியாவை, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே எழுச்சி பெறச் செய்ய முடியும். பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அவர்கள், மக்கள் மத்தியில், கோபத்தையும், வெறுப்புணர்ச்சி யையும் விதைத்து வருகின்றனர்; நாங்களோ, அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்புகிறோம்.


இளைஞர்கள் தலைமையில், காங்., புதிய

உத்வேகம் பெற்றுள்ளது. எனினும், மூத்தவர்களின் அனுபவ வழிகாட்டுதல் இன்றி, கட்சி, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது. இளைஞர்களின் உத்வேகம், மூத்தவர் களின் வழிகாட்டுதலுடன், காங்., புதிய தெம்பு பெற்று, 2019 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முந்தைய நாட்களில், இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்த, பிரதமர் நரேந்திர மோடி, புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்க தவறிவிட்டார்.


இதனால், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். பா.ஜ., அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.இந்த நாடு, அனைத்து மதம், இனத்தைச் சேர்ந்தவர்களுக்கானது. குறிப் பிட்ட ஒரு சிலரின் வளர்ச்சிக்காக, வேறு சிலரை ஒதுக்கவோ, ஒடுக்கவோ கூடாது. ஒவ்வொரு தனி மனிதனின் முன்னேற்றத்திற்காகவும், கட்சி பாடுபடும்.


அனைவருக்கும் முன்னேற்றத்தை தருவோமே தவிர, யாரையும் பின்னுக்கு தள்ள மாட்டோம். நாட்டின் முன்னேற்றத்திற்காக,மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அந்த செயலை, காங்கிரசின், 'கை'யால் மட்டுமே சாதிக்க முடியும். காங்கிரஸ் கட்சியை, யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


ஆதாரத்துடன் நிரூபிப்போம்!



காங்., தேசிய மாநாட்டில், முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது:மக்கள் மத்தியில் ஏராளமான பொய்களை அவிழ்த்துவிட்டு, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய ஒற்றை வாக்குறுதியை கூட, மத்திய அரசு நிறைவேற்றவில்லை. அவர்களின் பொய், பித்தலாட்டங்களை ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் நிரூபிப்போம். காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களால், கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைந்தனர்.


மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. ஆனால், பா.ஜ., அரசின் செயல்பாடுகளால், நாட்டு மக்கள் பெரிதும் சிரமத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் அனைத்தும், வெறும் வாய் ஜாலங்களே. அவர் அளித்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.'அனைவருடனான

Advertisement

வளர்ச்சி' மற்றும் 'ஊழல் செய்ய விடமாட்டேன்' என, மோடி கூறிய அனைத்தும் பொய் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். பா.ஜ., போன்ற மக்கள் விரோத சக்திகளுக்கு, காங்கிரஸ் ஒருபோதும் பணியாது.


தற்போதைய சூழலில், கட்சியை பலப்படுத்து வது மட்டுமே நம் அனைவருக்குமான முக்கிய பணி.இவ்வாறு அவர் பேசினார்.


மீண்டும் ஓட்டு சீட்டு முறை!



'மீண்டும் ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்' என, காங்., தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் தேர்தல்களில், மக்கள் அளிக்கும் தீர்ப்பை முறைகேடான வகையில் மாற்றாமல் இருக்க, தற்போதைய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கு பதில், பழைய முறையில், ஓட்டுச் சீட்டுகளை பயன் படுத்த வேண்டும்.


தேர்தல் கமிஷன், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என, மத்திய, பா.ஜ., அரசு கருத்து தெரிவித்துள்ளது. இது, நடைமுறையில் சாத்தியமற்றது. இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று, தேர்தல் கமிஷனில் முறையிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (10+ 191)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
18-மார்-201808:05:39 IST Report Abuse

SanjayCan any one tell us when this lame duck (Ravul Vinci) transforms to mature human being?

Rate this:
Sanjay - Chennai,இந்தியா
18-மார்-201808:02:40 IST Report Abuse

SanjayNo one in India knows the word "Divisive" unless your family comes into the power. The word was coined by your great great grandfather and your family strongly hold the word and doing the blame game. It's very weird that your family talks about divisive politics. Raavul Vinci is still a lame duck.

Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-மார்-201807:10:51 IST Report Abuse

வெகுளிசோனியாவின் கோபம் நியாயமானது தான்......ஊழலை ஒழிப்பேன் ஊழல்வாதிகளை பிடிப்பேன் என்றெல்லாம் கூறித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள்.....அப்புறம் எப்படி சிதம்பரம் போன்றோர் ஹாயாக காங்கிரஸ் கட்சியின், 84 வது தேசிய மாநாடு கூட்டத்தில் பங்கேற்க முடிந்தது என்று தக்க ஆதாரத்துடன் கேட்கிறார் சோனியா..... பா.ஜ.க வினரால் இதற்க்கு பத்தி சொல்ல முடியுமா?

Rate this:
jagan - Chennai,இந்தியா
18-மார்-201807:05:20 IST Report Abuse

jaganஇந்தியா இருக்கும் நிலையில், தேர்தல் முறையை 10 ஆண்டுகள் சஸ்பெண்டு செய்து, மோடியிடம் நாட்டை விட வேண்டும் , சீனாவில் ஜீ மாதிரி ...அப்புறம் பார்க்கலாம். அமெரிக்க ஐரோப்பா மாதிரி ஜனநாயகம் ஆசிய நாடுகளுக்கு சரிப்பட்டு வராது...சிங்கப்பூர் லீ குவான் யூ மாதிரி மோடியும் நாட்டை கரெக்ட் பாதையில் செல்ல வைப்பார்...இந்த NGO களை தடை செய்த போதே தெரியும் ,தேர்தலுக்கு முன் பொய் பிரச்சாரம் செய்வார்கள் என்று...முக்கியமா FORD பாவுன்டேஷன்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-மார்-201807:03:41 IST Report Abuse

ஆரூர் ரங்நீங்க து தலைவரானதிலிருந்து காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது எப்படி இளவரசரே ?

Rate this:
18-மார்-201806:39:30 IST Report Abuse

sSrinivasanpongadaa..... neengalum unga congressum

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201806:17:34 IST Report Abuse

Kasimani Baskaranகாங்கிரஸ் பல பொருளாதார மேதைகளை வைத்திருந்தது... அவர்கள்தான் பொருளாதாரத்தில் வளர்ந்தார்கள்... மக்கள் வளரவில்லை... ஏழ்மை குறையவில்லை... 60 % மக்கள் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லாத நிலையை காங்கிரஸ் உறுதி செய்தது... ஏழைகள் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் அது...

Rate this:

குத்புதீன்.திருவாரூர்நண்பா வங்கியில் கணக்கு இருந்தால் மட்டும் போதாது...போடுவதற்கு பணமும் வேணும். நாமெல்லாம் ஓரளவு புண்ணியம் செய்தவர்கள்.வறுமை ஏழ்மை அறியாமல் இறைவன் கருணை காட்டியுள்ளான். சந்தோச படுங்கள். நான் அரசியலுக்குள் நுழைய வில்லை.சாதார்ன மக்களின் நிலை நம்நாட்டில் கேள்வி குறி. நாம் மமற்ற முன்னேறிய நாடுகள் போல ஆவோமா அதற்கான சூழ்நிலை இருக்கா.. அனைவரும் தன்னிறைவு பெறமுடியுமா...இந்த கேள்வி என் மனதில் உதித்தபடியே இருக்கு.அரசால் எதுவுமே செய்ய முடியாது எண்பதும் தெரியும். ஒருசில மிக சிரிய விசயமே அரசால் செய்யவும் முடியும். இதில் நல்ல ஒருவிசயம் ஏழையாக இருந்தாலும் ஒரு வேளை சாப்பாடு கிடைத்து விடுது.. அது மட்டும் இல்லை என்றால் நினைத்தே பார்க்க முடியாத விபரீதம் ஏற்பட்டு விடும்.பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகி கொண்டு இருக்கான் நாட்டில். என் அனுபவத்தில் என் பகுதியை வைத்துதான் சொல்ல முடியும். வாழ்கை தரத்தில் 40ஆண்டுகளாக அதே நிலையில் நான் சிறு வயதில் அதே காட்சிகள். சிறிய மாற்றம்..வீடுகளில் இப்ப மின்சார விளக்குககள் சிலவும் அரசு புண்ணியத்தில் டி வியும் சில நவின பொருட்கள் மட்டுமே. சிலர் பைக் வைத்து கொண்டு சீன் போடறதும் உண்டு..வீடுகள் அதே குடிசைகளும் ஓட்டு வீடுமே..சிலர் பொருளாதார ஏற்றம் கண்டுள்ளனர். என்னுடைய வாழ்வும் சில காலமே... இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏழைகளின் வாழ்வில் மலர்ச்சியை பார்க்க முடியல..இது யாருடைய தவறென்றும் புரியல.நம் நாடு பணக்கார நாடாக வளமுடன் இருக்க ஆசை.. வரும் சந்ததியாவது நலமா இருக்ககனும் என்பதே என் பிரார்த்தனை.....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201808:50:55 IST Report Abuse

Kasimani Baskaran"போடுவதற்கு பண மும் வேணும்" - ஜனநாயக நாட்டில் உழைக்கவேண்டும்.. படிக்கவேண்டும்...ஆள்பவர்கள் எல்லோரும் படிக்க, முன்னேற போதுமான வாய்ப்புக்களை வழங்கவேண்டும்.. அதற்க்கு தேவையான ஓட்டுரிமை உங்களிடம்தான் இன்னும் இருக்கிறது... பிற்பட்டவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ உயர் பதவியில் என்றும் இருந்ததில்லை... இன்று நிலைமை வேறு... மோடி பிற்படுத்தப்பவர், ஜனாதிபதி தலித்... இந்த அரசு தலித்துகள் தொழிலில், கல்வியில் முன்னேற ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறது......

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
18-மார்-201800:17:39 IST Report Abuse

Kuppuswamykesavanபழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement