கருணை கொலைக்கு அனுமதி : சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
கருணை கொலைக்கு அனுமதி
சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பு

புதுடில்லி : தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளி கள் கண்ணியமாக இறக்கும் வகையில், அவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதித்து, உச்ச நீதிமன்றம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்,கருணை கொலை


கடந்த, 2011ல், அருணா ஷன்பக் என்பவர் தொடர்பான வழக்கில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, சுய நினைவிழந்து, உயிர் காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியால் வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை, அந்த கருவிகளை நீக்கி, அவர்களை உயிரிழக்கச் செய்வது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இதையடுத்து, 'காமன் காஸ்' எனப்படும், அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், 'உயிர் காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியால் வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகளை, அந்த கருவிகளை நீக்கி, உயிர் பிரியச் செய்யும் வகையில், மருத்துவக் குழு முடிவெடுக்கும் முன், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து, 2016, ஜனவரியில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கருணைக் கொலை செய்யும்போது, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்' என, சட்டக்கமிஷனின், 241வது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கருணைக் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. முக்கியத்துவம் வாய்ந்த, அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளிகளை, அவர் களுக்கு பொருத்தப் பட்டுள்ள, உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம், அவர்கள் கண்ணியமாக இறப்பதற்கு அனுமதிக்கலாம்.

வாழ்வதற்கு விருப்பம் இல்லாத ஒரு மனிதர், செயலற்ற, முடங்கிய நிலையில் துன்புற வேண்டிய அவசியம் இல்லை. தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி, தான் இறக்க விரும்புவதை முன்கூட்டியே உயிலாக எழுதுவதும், அவர்களை கருணைக் கொலை செய்வதும், அனுமதிக்கப்படுகிறது.

அத்தகைய நோயாளி யை கருணைக் கொலை செய்யலாம் என்பதற்கான சம்மதத்தை, அவர்களின் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்கள் அளிக்கலாம்.

அதை, தகுதிவாய்ந்த மருத்துக் குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இதற்கான சட்டம் இயற்றப்படும் வரை, உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு வரையறைகள், அமலில் இருக்கும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

''மீள முடியாத நோயாளிகளை கருணை கொலை செய்யலாம் என்பதை ஏற்க முடியாது. மக்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும். கருணை கொலை செய்வதை கண்காணிக்க, அரசு, குழு அமைக்க வேண்டும் என்பது தீர்ப்பில் உள்ளதா என தெரியவில்லை. விதிமீறல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த உத்தரவு, பண்பட்ட சமுதாயத்திற்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர, நம் சமுதாயத்திற்கு ஏற்புடையதாக இருக்காது''
-டாக்டர் ராமலிங்கம்,பொது நல மருத்துவ நிபுணர்

''தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எந்த நிலையில் நோயாளி இருக்கும்போது, யாருடைய அனுமதி பெற்று, கருணை கொலை செய்ய வேண்டும் போன்றவை குறித்து, தீர்ப்பை முழுமையாக படித்து பார்த்த பின் தான் கூற முடியும்''
-டாக்டர் செந்தில்,தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர்.

அருணா ஷன்பக் யார்?

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள, கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில், நர்சாக பணியாற்றி வந்தவர் அருணா ஷன்பக். பாகிஸ்தானில், 1948ல், பிறந்த இவர், மருத்துவமனையில் சிறந்த நர்ஸ் என, பெயர் எடுத்திருந்தார். 1973ம் ஆண்டு, நவ., 27ம் தேதியன்று இரவு, பணி முடிந்து, மருத்துவமனையின் கீழ் தளத்தில் உள்ள அறையில், அருணா, தன் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மருத்துவமனையின் துப்புரவு ஊழியர், அருணாவை பலாத்காரம் செய்ய முயற்சித்தான். அதிர்ச்சியடைந்த அருணா, அவனை எதிர்த்து போராடினார். நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை இறுக்கி, அவரை பலாத்காரம் செய்தான். இதில், அருணாவின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. கோமா நிலைக்குச் சென்ற அருணாவை, மருத்துவமனை ஊழியர்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர். கோமாவிலேயே, 42 ஆண்டுகள் போராடி வந்த அருணாவின் நிலையை கூறி, அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும்படி, பத்திரிகையாளர், பிங்கி விரானி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அருணாவை பரிசோதித்து அறிக்கை அளிக்கும்படி, மூன்று பேர் அடங்கிய டாக்டர் குழுவை நியமித்தது. அருணாவை பரிசோதித்த குழுவினர், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறி, 'அவரை கருணை கொலை செய்ய தேவையில்லை' என, கூறிவிட்டனர். ஆனால், அதன்பின், சில மாதங்களில், 2015ல், அருணா இறந்து விட்டார்.

Advertisement


எந்ந நாடுகளில் கருணை கொலை:

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சில வகையான கருணைக் கொலைகளை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்தது. பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் ஓரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 2002-ல், உலகின் முதல் நாடாக நெதர்லாந்து கருணைக் கொலையை சட்ட பூர்வமாக்கியது. இதே ஆண்டில் பெல்ஜியம் கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தது. அமெரிக்காவில் மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலை செய்யப்படுவது சட்ட பூர்வமானது. இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் கருணைக் கொலை செய்வது சட்ட விரோதம்.



கடந்து வந்த பாதை...


மே 11, 2005 : தன்னார்வ தொண்டு அமைப்பான 'காமன் காஸ்' சார்பில் கருணைக் கொலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மனிதர்கள் கண்ணியமான முறையில் மரணம் அடைவது, அடிப்படை உரிமையின் கீழ் வருமா என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டது.
ஜன. 16, 2006: இந்த வழக்கில் தலையிட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க, டில்லி மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
ஏப். 28, 2006: கருணைக்கொலை தொடர்பாக மசோதா தாக்கல் செய்ய சட்ட கமிஷன் பரிந்துரை. இத்தகைய வழக்குகளை முதலில் ஐகோர்ட்களில் முறையிடலாம். நிபுணர்கள் ஒப்புதலை பெற்று ஐகோர்ட் முடிவு எடுக்கலாம் என சட்ட கமிஷன் கருத்து.
மே 7, 2011: மும்பை மருத்துவமனையில், 37 ஆண்டுகளாக 'கோமா' நிலையில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக்கை கருணைக் கொலை செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி.
ஜன. 23, 2014: இறுதி விசாரணைக்காக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.
பிப். 11, 2014: கருணைக் கொலை தொடர்பாக விரிவான கொள்கை அறிக்கையை டில்லி மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்தது.
பிப். 25, 2014: ஷான் பாக் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் குறைபாடு இருப்பதால், கருணைக் கொலை தொடர்பான பொது நல வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
அக். 11, 2017: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வாதங்களை கேட்டது. தீர்ப்பை ஒத்திவைத்தது.
மார்ச் 9, 2018: மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் கருணைக் கொலைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
10-மார்-201802:38:03 IST Report Abuse

கைப்புள்ளஹ்ம்ம் எந்த ஒரு மனுஷனுக்கும் இந்த ஒரு நெலமை வந்திட கூடாதுடா சாமின்னு வேண்டிக்கலாமே தவிர இந்த விஷயத்தில செய்யிறதுக்கு ஒன்னும் இல்ல. இந்த காலத்துல எல்லாம் நல்லா வாழுவதை விட நல்லா சாவுறவன்தான் ரொம்ப புண்ணியம் பண்ணினவனு சொல்லி இருக்காங்க. யாருக்கும் எந்த தொல்லையும் தராம சரக்குன்னு போய் சேர்றான் பாருங்க அவன்தான் புண்ணியவான். நல்லா சாப்புட்டு நைட்டு போய் படுத்தமா, காலைல எந்திரிச்சு பாத்தா ஆள் இருக்க கூடாது. போய் சேர்ந்திடனும். அவ்ளோதான். முடிஞ்சுது. தூக்கி கொண்டு போயி போட்டுட்டு வந்து ஒரு மூணு நாள் அழுதாங்களா, பத்தாம் நாள் கறியும் சோறும் ஆக்கி போட்டு கொண்டாடினாங்களா, வருசத்துக்கு ஒருக்கா பிண்டம் வெச்சு தெவசம் பண்ணினாங்களா, காக்கையை கூட்டு சோறு போட்டார்களா, அவங்களுக்கும் தொல்லை இல்லை, நமக்கும் தொல்லை இல்ல. வந்தோம், பொறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம்ன்னு இருக்கணும். அதை விட்டுட்டு போகவும் முடியாம இருக்கவும் முடியாம இழுத்துகிட்டே திரியிறான் பாருங்க, அவன் எல்லாம் வாழ்க்கையில் ரொம்ப பாவம் பண்ணினவனாதான் இருப்பான். அதனாலதான் ஆண்டவன் அவங்களை எல்லாம் இழுத்து வெச்சுகிட்டு இப்புடி கொடுமை படுத்துறான். இதெல்லாம் கேக்கிறதுக்கு கொடுமையா இருந்தாலும், பேசாம ஒரு ஜீவனை துன்பப்படாமல் அனுப்பி வைக்கும் இந்த சட்டம் எல்லாம் எனக்கு ஓகே தான். மற்றபடிக்கு எனக்கு இதுல எல்லாம் ஒன்னும் வருத்தம் இல்ல. என்ன நான் சொல்றது?

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
10-மார்-201802:26:17 IST Report Abuse

அன்புகருணை கொலை வரவேற்கத்தக்கது. ஒருவர் கடும் அவதிப்படுவதை விட, இறைவனடி சேர்வது மேலானது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement