மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இனி கிடைக்காது! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கிடைக்காது!
 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இனி...  
14வது நிதி கமிஷன் கைவிரிப்பால் கலக்கம்

புதுடில்லி : எந்த மாநிலத்துக்கும் இனி, சிறப்பு அந்தஸ்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை; ஏனெனில், 14வது நிதி கமிஷன், சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி எதுவும் பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதிலாக, மத்திய அரசின் நிகர வருவாயில், மாநில அரசின் பங்கை, 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இனி கிடைக்காது!


பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் மத்திய அமைச்சரவையிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது, தேசிய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்திஉள்ளது. தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை காரணமாக கூறித் தான், இந்த அதிரடி முடிவை, தெலுங்கு தேசம் எடுத்தது.

வாய்ப்பில்லை


மத்திய அரசிடமிருந்து, அதிக நிதி ஆதாயம் பெறுவது தான், சிறப்பு அந்தஸ்து. இதுவரை, பல மாநிலங்கள், மத்தியில் ஆளும் கட்சிகளிடம், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இந்த சிறப்பு அந்தஸ்தை பெற்று வந்தன.

ஆனால், தற்போது ஆந்திர மாநிலத்துக்கு, இந்த அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில், இனி எந்த மாநிலத்துக்கும், சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை.

இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: கூட்டாட்சியை அடிப்படையாக வைத்து செயல்படும் ஜனநாயகத்தில், நிதி வளங்களை பங்கிட்டு கொள்வதில் தான், வெற்றி அடங்கியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் உள்ள நாட்டில், கூட்டாட்சி கொள்கை அவசியமாகிறது.

'நிதி நிலையில், மாநிலங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கக் கூடாது' என, அரசியல் சட்டத்தின், 280 மற்றும், 281வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி தான், நிதி கமிஷன் துவங்கப்பட்டது. மாநிலங்களுக்கு வருவாயை பகிர்ந்தளிப்பது பற்றி, நிதி கமிஷன் பரிந்துரைக்கும்.

பிராந்திய தேவைகள்


வரி வசூல் மற்றும் வருவாயை, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலும், வளர்ச்சி, வளம் மற்றும் பிராந்திய தேவைகளை கருத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு இடையிலும் பிரிப்பது பற்றி, நிதி கமிஷன் பரிந்துரைக்கும். இந்நிலையில், 14 வது நிதி கமிஷன், சிறப்பு மாநில அந்தஸ்து என அறிவிக்காமல், சிறப்பு நிதி ஒதுக்கலாம் என தெரிவித்துள்ளது.

இது பற்றி, நிதி கமிஷன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தான், மாநிலங்களுக்கு நிதி வழங்குவதற்கான முக்கியமான வழி; மேலும், வரியை பிரிப்பதற்கு முன், அரசுகளின் அனைத்து வருவாயையும், மொத்தமாக சேர்க்க வேண்டும். அதன்பின் தான், மாநிலங்களுக்கு பிரிக்கவேண்டும்.

இந்த நிகர வருவாயில் இருந்து, மாநில அரசுகளுக்கான பங்கை, 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம், ஒரு மாநிலத்துக்கு கூடுதல் சலுகை காட்டப்படுவது நிறுத்தப்படும். இதில் அரசியல் தலையீடும் இருக்காது.

Advertisement

சில மாநிலங்களின் தேவையை கருதி, அதற்கு சிறப்பு நிதி ஒதுக்கலாம்.இவ்வாறு நிதி கமிஷன் தெரிவித்துள்ளது.

நிதி கமிஷன் இப்படி தெரிவித்துள்ளதால் தான், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கவில்லை. எனவே இனி, எந்த மாநிலமும், சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில், மத்திய அரசின் நிதியில் குளிர் காய முடியாது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறப்பு மாநில அந்தஸ்து?

ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய திட்டக்குழு, நிதி ஒதுக்குகிறது; அதில், 70 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மாநிலத்துக்கு, 90 சதவீதம் மானியமாகவும், 10 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும். சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான வழிமுறைகள், 1960களில் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்கள், மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினரின் எண்ணிக்கை, நிலப்பரப்பின் தன்மை உள்ளிட்டவற்றின் அடிப் படையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படலாம். மேலும், மத்திய வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், மத்திய நிதிக் குழு முன்னுரிமை அளிக்கும்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
11-மார்-201812:56:04 IST Report Abuse

SALEEM BASHAசிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மட்டும் உங்க ஊர்ல இருக்கிற திருடர்களெல்லாம் திருந்திடுவீங்களோ

Rate this:
Nathan - bangalore,இந்தியா
11-மார்-201812:07:42 IST Report Abuse

Nathanபல சமயங்களில், கசப்பு மருந்துகள்தான் கொடிய நோயை போக்கும் திறன் வாய்ந்தது... பாரபட்சமின்றி சுதந்திர நிதி கமிஷன் செயல்பாட்டுக்கு அனுமதித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மார்-201809:37:52 IST Report Abuse

Srinivasan Kannaiyaகுடும்பமாக இருந்தால் குழந்தை பிறக்கும்... விவாகரத்துக்கு பின்....

Rate this:
Samuel Prince - Tuticorin,இந்தியா
11-மார்-201809:15:50 IST Report Abuse

Samuel Princeஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தால் அதனால் பாதிக்கப்பட போகும் முதல் மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான் ஏற்கனவே இங்குள்ள ஆட்சியாளர்கள் கேட்கும் கமிஷனால் ஆந்திராவை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வெளிநாட்டு கம்பெனிகள் ஆந்திராவுக்கு சிறப்பு வகை மாநில அந்தஸ்து கிடைத்து விட்டால் சுத்தமாக தமிழ்நாட்டு பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள்.

Rate this:
vns - Delhi,இந்தியா
11-மார்-201808:23:41 IST Report Abuse

vnsசில மதவெறியர்களுக்கு பொய் கூறுவது கை வந்த கலை. 2014 -15 இன் GDP . India ₹12,541,000 crore (US$1.9 trillion) 1 Maharashtra ₹1,680,000 crore (US$250 billion) 2 Tamil Nadu ₹976,000 crore (US$150 billion) 3 Uttar Pradesh ₹976,000 crore (US$150 billion) 4 Gujarat ₹876,000 crore (US$130 billion) 5 West Bengal ₹800,000 crore (US$120 billion) 6 Karnataka ₹702,000 crore (US$100 billion)

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
11-மார்-201810:26:32 IST Report Abuse

Mohamed Ilyasநீங்க என்ன வெறியர் ஜீ நீங்க குறிப்பிட்ட gdp எங்கிருந்து பெறப்பட்டது உங்க வீடு excel ஸீட்டுலயா ?...

Rate this:
Vittal Anand - Chennai,இந்தியா
11-மார்-201808:22:39 IST Report Abuse

Vittal Anandகாங்கிரசை நம்பி TRS பிறந்தது போங்கடா போங்க. அதையு நம்பி தெலுகு தேசம் மோசம் போனது வாங்கடா வாங்க.

Rate this:
rajan - kerala,இந்தியா
11-மார்-201807:51:18 IST Report Abuse

rajanஆந்திராவுக்கு காங்கிரஸின் உபயம் தெலுங்கானா. நாட்டை பிரித்தாளும் ஒரு யுக்தி இன்னிக்கு மாறி மாறி அடிச்சுக்கிறாங்க.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
11-மார்-201807:28:06 IST Report Abuse

தங்கை ராஜாஇப்போதும் இந்த ஆள் கூட்டணியை கெட்டியாக பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார். பரிவார் கைவிட்டால் அரசியல் அனாதை.

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
11-மார்-201807:26:10 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanஇது எதுவும் தெரியாமல் எப்படி மோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். எப்படி பிஹார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிகருக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்று சொன்னார். இதுதான் வாயால் வடை சுடுவதா மோடி.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-மார்-201806:59:46 IST Report Abuse

ஆரூர் ரங்சிறப்பு அந்தஸ்த்துக்கொடுக்கும் விதிகள் சந்திரபாபுவுக்கு நன்கு தெரியும் போக்குவரத்து கடினமாயுள்ள மலைப்பகுதி மாநிலங்கள் போர் அபாயமுள்ள எல்லை மாநிலங்கள் காடுகள் நிறைந்த சுற்றுசூழல் பாதிக்கவே கூடாத மாநிலங்கள் ஆகியவை பதினொன்று அவற்றுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து அளிக்கமுடியும் நாடு சுதந்திரம் பெற்றபிறகு ஆந்திர போல பதினைந்து மாநிலங்கள் உருவாகியுள்ளன அவை எதுவுமே சிறப்பு அந்தஸ்து கேட்டதாக நினைவில்லை நாற்பது எம்பி சீட்டுகள் முக்கியமென்பதை வைத்து அரசியல் செய்கிறார்கள் தோல்வி நிச்சயம்

Rate this:
Krishna Chandra - NewYork,யூ.எஸ்.ஏ
11-மார்-201808:45:23 IST Report Abuse

Krishna Chandraநாயுடு மற்ற மாநில பணத்தை எடுக்க பார்க்கிறார். தன்னுடைய மாநிலம் சிறப்பாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களை பற்றி கவலை இல்லை அவருக்கு. இது ஏமாற்று வேலை...

Rate this:
Krishna Chandra - NewYork,யூ.எஸ்.ஏ
11-மார்-201808:55:52 IST Report Abuse

Krishna Chandraநாயுடு மற்ற மாநில பணத்தை வாங்கி ஆந்திராவை முன்னேற்ற பார்க்கிறார். தவறு. Greed...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement