பார்லி.,யில் அமளி: ஒத்திவைப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
 Parliament,PNB Fraud, BJP,பார்லிமென்ட் , பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, வைர வியாபாரி நிரவ் மோடி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், காங்கிரஸ், வங்கி மோசடி, பொருளாதார குற்றங்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பா.ஜ., Punjab National Bank Fraud, Diamond Dealer Nirav Modi, Parliamentary Budget Session, Congress, bank fraud, Economic crimes, UPA,
United Progressive Alliance

புதுடில்லி: பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்கட்சியினர் இன்று பார்லி.,யில் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக லோக்சபாவில் பஞ்சாப் நேஷனல் பாங்க் கடன் மோசடி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்., இடதுசாரி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் குரல் எழுப்பினர். இதனால் லோக்சபாவில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. காவிரி மேலாண்வாரியம் தொடர்பாக தமிழக எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர்.
கூட்டம் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடம் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். கூட்டம் துவங்கியதும் பல்வேறு எம்.பி.,க்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் லோக்சபாவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ராமகாஜன் தெரிவித்தார். இதுபோல், ராஜ்யசபாவிலும் காவிரி விவகாரம், ஆந்திரா, வங்கி மோசடி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதால் அவையை தலைவர் வெங்கையா நாயுடு மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
பார்லி., துவங்கும் முன்னதாக பாங்க் மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்., கட்சியின் எம்.பி.,க்கள் பார்லி.,வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி தெலுங்குதேச கட்சி எம்.பி.,க்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

 Parliament,PNB Fraud, BJP,பார்லிமென்ட் , பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, வைர வியாபாரி நிரவ் மோடி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், காங்கிரஸ், வங்கி மோசடி, பொருளாதார குற்றங்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பா.ஜ., Punjab National Bank Fraud, Diamond Dealer Nirav Modi, Parliamentary Budget Session, Congress, bank fraud, Economic crimes, UPA,
United Progressive Alliance




பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன., 29ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்கியது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின், பிப்., 9ல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, ஒரு மாத விடுமுறைக்கு பின், இன்று துவங்கி, ஏப்., 6 வரை நடக்க உள்ளது.இந்த இடைப்பட்ட காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, வைர வியாபாரி, நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த வங்கி மோசடி தொடர்பாக, மத்திய அரசை, காங்., கடுமையாக விமர்சிக்கிறது.

பா.ஜ., தயார்:


எதிர்க்கட்சிகள் இதை, பார்லி.,யில் முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர், விஜய் மல்லையாவைத் தொடர்ந்து, நிரவ் மோடியும் வெளிநாடு தப்பிச் சென்றது தொடர்பாக, அரசுக்கு எதிராக பிரச்னை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

கடந்த, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது தான், நிரவ் மோடிக்கு கடன் வழங்கப்பட்டதாக, பா.ஜ., கூறுகிறது. அதனால், எதிர்க்கட்சிகளின் வாதத்தை முறியடிக்க, பா.ஜ., தயாராக உள்ளது.

மேலும், வங்கி மோசடி போன்ற பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் செல்வோரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில், புதிய மசோதா, இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அடுத்ததாக, முஸ்லிம்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவதை குற்றமாக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

Advertisement

இந்த மசோதாவுக்கு, காங்., உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தொடரிலேயே, இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதனால், இந்த மசோதா குறித்த வாதத்திலும், அனல் பறக்கும் என, எதிர்பார்க்கலாம்.

திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால், பா.ஜ., தெம்புடன் உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகளை முழு வேகத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

சந்தேகம் :


நிரவ் மோடி விவகாரத்தை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க, பா.ஜ.,வும் வரிந்து கட்டுவதால், இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடக்குமா என, அரசியல் பார்வையாளர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு, அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் அளிக்கும் முக்கிய மசோதாவும், நிலுவையில் உள்ளது. இது தவிர, பட்ஜெட் மீதான விவாதமும், இந்த கூட்டத்தில் நடக்க உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
05-மார்-201811:52:17 IST Report Abuse

adalarasanவழக்கம்போல கூச்சல் குழப்பம் ஒருவேலையும் நடக்காது ஒவ்வொரு உறுப்பினர்களாக்கும் ஆண்டிற்க்கி 1 .5 கோடி ரூபாய், சம்பளம், படி,இதர சலுகைகள் கொடுக்கப்படுகின்றன வரிப்பணம் வேஸ்ட். ஏனென்றால், ஒருவருடத்தில், 100 மணிநேரம் கூட சபை நடப்பதில்லை

Rate this:
rajan - kerala,இந்தியா
05-மார்-201809:17:55 IST Report Abuse

rajanஆகா இன்னிக்கு நம்ம கல்லாப்பெட்டி அண்ணே உச்சத்தில் போயி எல்லாவனையும் பார்லிமெண்ட்ல விட்டு விளாசிடுவானோ. ஏன்னா இவனுக்கு தன் ஊழல்களை விட ஊரான் ஊழல்கள் அத்துபடி ஆச்சே.

Rate this:
JSS - Nassau,பெர்முடா
05-மார்-201808:36:10 IST Report Abuse

JSSமிக சரியாக பதிவு செய்து உள்ளீர்கள். ஜனநாயகம் தழைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மேலும் அரத பழசான அரசியல் சாசனம் கிரிமினல் சட்டம் ஒன்றுக்கும் உதவாதது. குற்றவாளிகளையே தோற்றுவிக்கும். அதை மாற்றிவிட்டு புதிய சாசனம் இயற்றவேண்டும் . லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளுக்கு கடும் தண்டனை, அவரது நெருங்கிய குடும்ப சொந்தங்கள் அரசியலில், அரசு வேலைகளுக்கு தடை என்று சட்டம் கொண்டு வரவேண்டும். அவர்கள் sothugal பறிமுதல் கோர்ட்டுக்கு போகாமலேயே parimudhal செய்து அரசின் கஜானாவுக்கு அனுப்பவேண்டும். எந்தவொரு முக்கிய சாசன திருத்தத்திற்கு referendum எடுக்கவேண்டும். மலை போன்ற அரசியல் வாதிகளின் அதிகாரத்தை குறைக்க வேண்டும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-மார்-201808:26:56 IST Report Abuse

Srinivasan Kannaiyaபாராளுமன்றம் வாய் இருந்தால் அழுதுவிடும்... மேசை இருக்கைகள் தட்டுவதால் தன் வாழ்நாளை இழந்து வருகிறது...

Rate this:
05-மார்-201806:42:39 IST Report Abuse

கேசவன் கிடாமங்கலம்..காவேரி மேலாண்மை வாரியம் பற்றி நம்ம ஊரு உறுப்பினர்கள் குரல் எழுப்பினால் நல்லாருக்கும்

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
05-மார்-201810:37:59 IST Report Abuse

Agni Shivaதமிழனுக்கு இயற்கை அன்னை ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான காவேரியை மழை வழியாக அள்ளி அள்ளி தருகிறாள். அதையெல்லாம் சிந்த விட்டு விட்டு - குடம் குடமாய் தண்ணீரை வீணாக்கி விட்டு ஒரு கப் தண்ணீருக்காக இந்த தமிழன் நூற்றாண்டுகளாக அலைந்து திரியும் கேனத்தனத்தை எதுவென்று சொல்லுவது? எப்போது இந்த தமிழனுக்கு வந்து இந்த அரசியல் சாக்கடைத்தனத்தை புரிந்து கொள்ள போகிறான்?...

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-மார்-201806:30:43 IST Report Abuse

GB.ரிஸ்வான் ஒட்டுமொத்த பிராடுகள்/திருடர்கள்/ சகுனிகள்/ மீண்டும் கூடுகிறார்கள் என சொல்லும்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-மார்-201804:27:17 IST Report Abuse

Kasimani Baskaranவின்சி விடுமுறையில் இருந்து பறந்து வந்துவிடுவார்... பாராளுமன்றத்தையே ஒரு கை பார்க்கப்போகிறார்..

Rate this:
Anandan - chennai,இந்தியா
05-மார்-201809:21:24 IST Report Abuse

Anandanஒருவர் பாராளுமன்றம் வருவதே இல்லை, வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில்லை, அப்படியே பேசினால் காங்கிரஸ் பற்றி மட்டுமே பேசுவார். கேவலம்....

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
05-மார்-201810:40:33 IST Report Abuse

Agni Shivaவின்சி சொந்த நாட்டில் வோட்டு போட போயிருக்கிறான். ஓட்டும் போட்டு விட்டு பாட்டியின் மடியில் உட்காந்து ஹிட்லர், முசோலினி போன்றவர்களின் வீர கதைகளை கேட்டு விட்டு இந்தியாவிற்கு கதறி அழும் தனது அடிமைகளை அரவணைக்க ஓடி வருவான்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-மார்-201814:09:47 IST Report Abuse

Kasimani Baskaran"ஒருவர் பாராளுமன்றம் வருவதே இல்லை" - முக சட்டசபைக்குத்தான் வருவதில்லை... பாராளுமன்றமா? கனவில் இருப்பவனை என்ன செய்யமுடியும்?...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement