திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி அமோகம்: 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூ., அரசை வீழ்த்தியது Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

அகர்தலா : வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. திரிபுராவில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 25 ஆண்டு கால, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. நாகாலாந்தில் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ



வட கிழக்கு மாநிலங்களான, திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில், சமீபத்தில் சட்டசபைதேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சி நடக்கும் திரிபுராவில், மொத்தமுள்ள, 60 சட்டசபை தொகுதிகளில், 59 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

இதில் பா.ஜ., 35 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன்கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி., எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.



திரிபுராவில், தனிப் பெரும்பான்மையுடன், பா.ஜ., ஆட்சி அமைப்பதால் மாநிலத்தில், 25 ஆண்டுகளாக, அசைக்க முடியாத சக்தியாக இருந்த, மார்க்சிஸ்ட் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

நாகாலாந்தில், என்.பி.எப்., எனப்படும், நாகாலாந்து மக்கள் முன்னணியை சேர்ந்த, ஜெலியாங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஆளுங்கட்சியான, என்.பி.எப்., தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், என்.டி.பி.பி., எனப்படும், தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி, பா.ஜ., இணைந்து, எதிர் அணியாகவும் தேர்தலில் போட்டியிட்டன.

மொத்தமுள்ள, 60 தொகுதிகளில், என்.பி.எப்., கூட்டணி, 29 இடங்களிலும், என்.டி.பி.பி., - பா.ஜ., கூட்டணி, 29 இடங்களிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள, இரு தொகுதிகளில், சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், என்.பி.எப்., 27 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

என்.டி.பி.பி., 15 இடங்களிலும், பா.ஜ., 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு, எந்த கட்சிக்கும், தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. சுயேட்சைகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகளில், பா.ஜ., தலைவர்கள் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, பா.ஜ.,வை, தங்கள் கூட்டணிக்கு வரும்படி, என்.பி.எப்., அணி தலைவரும், முதல்வருமான, ஜெலியாங் அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய சூழலில், பா.ஜ., எந்த அணிக்கு ஆதரவளிக்கிறதோ,


Advertisement

அந்த கூட்டணியே, மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. காங்கிரசை சேர்ந்த, முகுல் சங்மா முதல்வராக உள்ள மேகாலயாவில், 59 தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின.இதில், காங்., 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி எனப்படும், என்.பி.பி., 19 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி யான, பா.ஜ., இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற சிறிய கட்சிகள் 13 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள், மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.தேசியவாத காங்., ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எந்த கட்சிக்கும், தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், இங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

பொய் பிரசாரத்துக்கு மக்கள் பதிலடி: மோடி

மூன்று மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி 'டுவிட்டர்' சமூகதளத்தில் கூறியதாவது: மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களின் மக்கள் தேர்தலில், மனந்திறந்து பேசியுள்ளனர். பா.ஜ.,வின், சிறந்த ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் நம் நாட்டு மக்கள் தே.ஜ., கூட்டணியின் மீதும், அதன் வளர்ச்சிக் கொள்கை மீதும், அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளது தேர்தல் முடிவுகளில் வெளிப்படுகிறது.திரிபுராவை வளம் பெறச்செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ., மேற்கொள்ளும். இம்மாநிலத்தை சேர்ந்த சகோதரர், சகோதரிகளின் சிறப்பான செயல்பாடு, ஈடு, இணையற்றது.பா.ஜ.,வுக்கு, அவர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு, நன்றி கூற வார்த்தைகளே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அடுத்து, டில்லியில் நேற்று, பா.ஜ.,வினர் மத்தியில், கட்சி தலைமையகத்தில், மோடி பேசியதாவது: திரிபுரா மாநிலத் தேர்தலின் போது, மத்திய அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்களைஎதிர்க்கட்சியினர் கட்ட விழ்த்து விட்டனர்; தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பா.ஜ.,வை மக்கள் அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில், சிறுமைப்படுத்தப்பட்ட கட்சியாக, காங்., உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14+ 224)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
04-மார்-201808:59:26 IST Report Abuse

Rahimகாவி பண்டாரங்கள் ஏண்டா என்ன தேடுறீங்க நான் எப்பவும் போல இங்கு எனது கருத்தை எழுதி தான் இருக்கிறேன் ஆனால் பாஜக மண்ணை கவ்வும் செய்திகளுக்கு வராமல் ஓடி ஒழிவது பண்டாரங்கள் தான், டேய் ராஜி நீ என்ன லூசுன்னு சொன்னாலும் சொல்லமுடியும் அங்கு ரன்தீப் தொடங்கி அத்தனை காங்கிரஸ் தலைவர்களையும் உன் பண்டார கட்சி காசு கொடுத்து வாங்கினது உண்மைதான் , வைர வியாபாரிகள் கிட்ட வாங்கின காசு எல்லாம் இங்குதான் இறக்கப்பட்டது.

Rate this:
Suresh - Nagercoil,இந்தியா
04-மார்-201805:26:11 IST Report Abuse

Sureshமோடி ஒரு சிறந்த மனிதர் என்பதை மலைவாழ்வு மக்கள் கூட கண்டுள்ளார்கள்..ஒரு சிலருக்கு பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி எண்று சொல்லி சொல்லி அழுது புரண்டு அலுத்துப்போச்சி, ஏதுவாக இருந்தாலும் பிரதமர் மோடி அந்த மோடியை பிடித்து கொண்டு வரவேண்டும்...

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
04-மார்-201804:11:06 IST Report Abuse

Loganathan Kuttuvaதமிழ் மாநிலம் தவிர பிற மாநில தேர்தல்களில் பணப்பட்டுவாடா பிரச்னை எழவில்லை.

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
04-மார்-201802:42:26 IST Report Abuse

Baskarஎவ்வளவோ திருட்டு வேலைகள் செய்து இந்த வெற்றியை பெறுவதை விட மக்களிடம் உண்மையை சொல்லி ஓட்டுக்களை பெற்று வெற்றி அடைவதே வெற்றி ஆகும்.புதிய கட்டிடத்தால் வந்த வெற்றி என்றால் அது எடுபடாது.

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-201811:51:45 IST Report Abuse

Swaminathan Nathமக்கள் வாக்களித்து வெற்றி வந்துள்ளது, பொறாமை இப்படு பேச வைக்கிறது.,...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
04-மார்-201802:38:29 IST Report Abuse

அன்புயார் அதிகமாக பொய் சொல்கிறார்களோ, அவர்களுக்கு தான் ஒட்டு என்பது தான் வடஇந்தியர்களின் எண்ணம். யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தான் ஒட்டு என்பது தமிழர்களின் எண்ணம். எல்லோரது வங்கிக்கணக்கில் பதினைந்து லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று சொல்லி, மோடி ஆட்சியை பிடித்தார். ஆனால் நமது வங்கிக்கணக்கில் போட வேண்டிய பதினைந்து லட்ச ரூபாயை அப்படியே, ஒட்டுமொத்தமாக அவரது நண்பர்கள் நீரவ் மோடி, கோத்தாரி போன்றோர் வங்கி கணக்கில் போட்டு வருகிறார். உண்மையை சொல்லி ஒட்டு கேட்ட மாணிக் சர்க்காருக்கு மக்கள் அல்வா கொடுத்துள்ளனர். விரைவில், திரிபுரா மக்களுக்கு அமித் ஷா ஒரு பெரிய திருப்பதி லட்டுவை திகட்ட திகட்ட ஊட்டி விடுவார்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-மார்-201806:25:44 IST Report Abuse

Kasimani Baskaran"யார் அதிகமாக பொய் சொல்கிறார்களோ, அவர்களுக்கு தான் ஒட்டு என்பது தான் வடஇந்தியர்களின் எண்ணம்" - மீசையில் மண் ஒட்டிவிட்டது... துடைத்துக்கொண்டு அப்படியே ஓடிப்போ......

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-மார்-201806:34:20 IST Report Abuse

ஆரூர் ரங்நீங்க சொல்லாத பொய்யா? பதினைந்து லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று எப்போது எங்கு சொன்னார் என்பதை ஆதாரத்துடன் காட்டமுடியுமா? முடியவே முடுயாது ஏனெனில் அது உங்களைப்போன்றவர்கள் இட்டுக்கட்டிய பொய் .மோதி எப்போதுமே உண்மையை மட்டுமே பேசுகிறார் என்று நான் சொல்லவரவில்லை....

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-201811:52:37 IST Report Abuse

Swaminathan Nathசில குறுகிய நெஞ்சங்களுக்கு மோடி வெற்றி பொறுக்க முடிய வில்லை, மாரடைப்பு வராமல் இருந்தால் சரி,...

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
04-மார்-201802:12:44 IST Report Abuse

கைப்புள்ளமற்றபடிக்கு மற்ற மாநிலங்களில் தங்களை ப்ரூவ் செய்து மக்களிடம் நம்பிக்கையை பெற்று ஜெயித்து வந்த பா.ஜ.க வுக்கு வாழ்த்துக்கள். அந்த மாநில மக்களை கொஞ்சமாவது கரை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பா.ஜ.க ஜெயித்ததை பொறுக்க முடியாமல் அல்லோல கல்லோல பட்டு ஆற்ற பொறுக்காமல் அங்கும் இங்கு அலைந்து கொண்டு கதறி கதறி அழுது புரட்டி வயிறு எரியும் பா.ஜ.க எதிர்ப்பாளர்களுக்கு என் வருத்தங்கள். நீங்கள் சும்மா முட்டாள் தனமாய் காட்டு கூச்சல் போடுவதால் ஒன்றும் பெரிதாய் நடக்காது.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
04-மார்-201802:08:33 IST Report Abuse

கைப்புள்ளதமிழக மக்களும் திராவிட கழக ஆட்சிகளில் இருந்து மாற்று அரசியலை தேட வேண்டிய அவசியம் வந்து இருக்கிறது. அதற்காக பா.ஜ.க வை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன் என்றால் பா.ஜ.க மேல் எனக்கும் பயம் உண்டு. வடநாட்டுக்காரங்களை நம்பவே முடியாது. மனிதாபிமானம் என்பது அவர்களின் ரத்ததில் 1% கம்மிதான். அவனுகளோட குணத்துக்கும் நம்ம குணத்துக்கும் ஒத்து வரவே வராது. ஒரு மாற்று வேண்டும் என்பதற்க்காக வாழ்கையவே ரிஸ்க் தாஸ்தி ஆன பா.ஜ.க விடம் பந்தயம் வைக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம். பா.ஜ.க தமிழகத்துக்கு ஒத்து வரும் ஒரு மாறுதலான அரசியலை அறிமுகப்படுத்தலாம். மக்களின் நன் மதிப்பை பெற முயற்சிக்கலாம். நாமும் நம்பும்படி செயல் பட்டால் பா.ஜ.க வையும் ஒரு மாற்று அரசியலாக கருத ஆரம்பிக்கலாம். ஆனால் இப்போ இருக்கும் அதே நிலைமையில் நீ பா.ஜ.க வை தேர்தெடுப்பாயா என்று என்னிடம் கேட்டால் இல்லை என்றே நான் சொல்லுவேன். தமிழக மக்களுக்காக நம்பி ஓட்டு போடும் அளவுக்கெல்லாம் பா.ஜ.க ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை. ஆகவே தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க ஒரு மாற்றா என்றால், ஆம் அதற்க்கு வாய்ப்பு அதிகம், ஆனால் அதே சமயம் அவர்களை தேர்நதெடுப்பாயா என்றால் இல்லை என்றே நான் சொல்லுவேன். பார்ப்போம், பா.ஜ.க எப்படி பட்ட முறையில் தங்களை தமிழக மக்களுக்கு கொண்டு சேர்க்க போகிறார்கள் என்று.

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
04-மார்-201807:57:09 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)குளச்சல் துறைமுகம் , ராணுவ தளவாட தொழிற்சாலை , AIIMS மருத்துவமனை , மின்வாரிய கடன் மற்றும் சீர் திருத்தம் (சூரிய ஒளி ஆற்றல் கொடுத்தது நம்மஆளுங்க அதிக கமிஷன் கேக்குறாங்க ) மெட்ரோ விரிவாக்கம் 107 கி மீ இரண்டாவது தடைப்பணிகள் , நான்கு வழிசாலைகள் முழு விரிவாக்கம் . குறைகள் (இப்போ இருக்கும் கேவலமான அரசுக்கு மறைமுக ஆதரவு , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது , நதி நீர் இணைப்பிற்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்காமல் இருப்பது ,ஹிந்தி திணிப்பு இல்லை என்ற உறுதி இன்னும் கிடைக்காமல் இருப்பது ,...

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-மார்-201801:54:27 IST Report Abuse

விருமாண்டிஎங்கும் காவி மயம் மலரட்டும் வாழ்த்துக்கள்

Rate this:
ilicha vaayan (sundararajan) - chennai,இந்தியா
04-மார்-201807:57:28 IST Report Abuse

ilicha vaayan (sundararajan)நல்லது தானே ....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement