காஞ்சி ஜெயேந்திரர் முக்தியடைந்தார் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காஞ்சி ஜெயேந்திரர் முக்தியடைந்தார்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுகாஞ்சிபுரத்தில் நேற்று காலை முக்தியடைந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் ஜெயேந்திரர் அவதிப்பட்டு வந்தார்.இரு மாதங்களுக்கு முன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மடத்திற்கு திரும்பினார். அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. சங்கர மடத்தில் இருந்த அவருக்கு நேற்று காலை 7:30 மணிக்கு

திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உதவி யாளர்கள் அவரை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 8:50 மணிக்கு மருத்துவமனையிலேயே முக்தியடைந்தார். அவரது உடல்மருத்துவமனை யிலிருந்து சங்கர மடத்திற்கு எடுத்து வரப்பட்டது.


அதன் பின் மடத்தில் அவர் வழக்கமாக அமரும் அறையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்
அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் கைகளை துாக்கி ஆசிர்வதிப்பது போல,

Advertisement

அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓதிய படி இருந்தனர்.'மகா பெரியவர்' என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்'

 காஞ்சி ஜெயேந்திரர் ,முக்தியடைந்தார்

அருகிலேயே, ஜெயேந்திரரும், இன்று காலை, 9:00 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்பட்டார்.


அவர் மறைவு செய்தி அறிந்ததும் காஞ்சி மடத்தின் பக்தர்களும் உள்ளூர் மக்களும் மடத்தில் குவிந்தனர். ஏராளமான போலீசாருடன், மடத்தின் ஊழியர்களும், கூட்டத்தை கட்டுப்படுத்தி, இரங்கல் தெரிவிக்க வசதி ஏற்படுத்தினர்.மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் போன்றோர் இரங்கல் செய்தி அனுப்பினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11+ 109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
01-மார்-201814:48:48 IST Report Abuse

KUMAR. Sமஹா பெரியவரின் அருள் கிட்டட்டும் . குருவின் ஆன்ம சாந்தி அடையட்டும் . உலகில் அமைதி நிலவட்டும் ....ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர...

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
01-மார்-201812:12:01 IST Report Abuse

Bhaskaranநான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த நேரம் பணத்தைப்பற்றிய கவலை இல்லாவிட்டாலும் நேரம் போவதில் மிகவும் சிரமப்பட்டு எனக்கும் என் மனைவிக்கும் மனவேற்றுமை சிறு பூசல்களால் மனக்குழப்பம் அடைந்திருந்தேன் அப்போது என்மனைவி என்னை காஞ்சிபுரத்துக்கு அழைத்து சென்றார் நல்ல கூட்டம் இருப்பினும் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது இருவரும் நமஸ்காரம் செய்தோம் அனைவருக்கும் குங்குமப்ரசாதம் மட்டுமே அளித்தவர் எனக்கு ஒரு உருத்திராட்சமும் குங்குமப்ரஸாதமும் அளித்தார் அதைவிட குருவின் அருட்பார்வை கடாட்சம் கிடைத்தது அன்றிலிருந்து மனக்கிலேசம் இல்லை குருவின் தாள் சரணம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-மார்-201808:32:59 IST Report Abuse

Srinivasan Kannaiyaசினிமாக்கார்கள் செத்து இருந்தால் எல்லா ஆள்களும் இந்நேரம் அந்த வீட்டில் வாசலில் தவம் இருந்து இருப்பார்கள்...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-மார்-201807:58:47 IST Report Abuse

ஆரூர் ரங்ஜெயேந்திரர் பீடத்துக்கு வந்த காலத்தில் நாத்திகப் பிரச்சாரம் பிராமண எதிர்ப்பு இந்து மத எதிர்ப்பு உச்சத்திலிருந்து மக்களில் மூன்றிலொரு பங்கினர் நாத்திகத்தை ஏற்றவர்கள் அல்லது ஏற்கும் நிலையிலிருந்தவர்கள் அந்நேரத்தில் மடத்தின் நடவடிக்கைகளே பாதிக்குமளவுக்கு இருந்தது அந்த விஷப்பிரச்சாரங்களையும் வெறுப்புணர்வையும் எதிர்வாதம் மூலம் சந்திப்பதற்கு பதில் இந்துக்களிடையே இருந்த ஒற்றுமையின்மை சாதிவேறுபாடுகள் உயர்வு தாழ்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி பலப்படுத்த முனைந்து வெற்றிபெற்றார் ஜெயேந்திரர் .முதலில் எடுத்த ஆயுதம் மிஷனரிகள்போல கல்வி மருத்துவ சேவைகளை முனைந்து சிறப்புற செய்ததுதான் . பல மருத்துவமானிகளையும் ஒழுக்கம் நிறைந்த இலவச கல்விநிலையங்களையும் நிறுவினார் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களை அமைத்தார் .மற்றொரு புறம் பாமரர்களிடம் பக்தியை வளர்க்க பக்திப்பாடல்கள் பஜனைகள் கச்சேரிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தார் ஆச்சார அனுஷ்டானங்களைவிட மக்கள் சேவையே முக்கியம் மானிட சேவையே மகேசன் சேவையெனும் புரட்சி எண்ணம் கொண்டார் தாழ்த்தப்பட்டோர் வசிக்குமிடங்களில் கோவில்களை எழுப்பவும் பழைய கோவில்களுக்கு திருப்பணி செய்யவும் உதவியதோடல்லாமல் அங்கு கும்பாபிஷேகங்களிலும் கலந்துகொண்டார் .தீண்டாமையை எதிர்க்கும் விதமாக அந்த தலித் பூசாரிகளிடம் பிரசாதம் கூட வாங்கிக்கொண்டார் .இதனால் மடத்தின் பழைமைவாத சிஷ்யர்களின் கண்டனத்துக்கு (பெரியவரின் கோபத்துக்கும்கூட) ஆளானார் என்பர் .இதுபோன்ற எதிர்ப்புகள்தான் அவரது நிம்மதியைக்குலைந்து மடத்தைவிட்டே சில நாட்கள் வெளியேற காரணமானதாம் . மீனாட்சிபுர மதமாற்றம் மண்டைக்காடு மதமோதல் ஆகியவற்றின்போது இந்துக்களின் அரணாக இருந்தது மத ஒற்றுமைக்குப் பாடுபட்டு பல நாத்திகர்கள் மற்றும் மதமாற்ற அந்நிய அடிவருடிகளுக்கும் சிம்ம சொப்பனமானார்.அறக்கட்டளை மருத்துவமனையை மாபியாவுக்கு விலைக்கு கொடுக்க மருத்துமட்டுமல்ல இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்த்ததும்தான் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் சிறைவாழ்க்கைக்கும் காரணமானது .இன்னும் பல ஜெயேந்திரர்களை இறைவன் நமக்கு அளிப்பானாக

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-மார்-201807:39:59 IST Report Abuse

ஆரூர் ரங்ஆசாரமும் அனுஷ்டானமும் மட்டுமே மோட்சத்துக்கு உதவுமென பரமசாரிய சங்கராச்சாரியார் உபதேசிப்பார். தீண்டாமையை எதிர்த்து கருத்துசொல்லக் கேட்டபோது அவரவர் விதிப்படி தாழ்ந்த குலத்தில் பிறப்பர் அதனை மாற்ற தனக்கு தகுதியில்லை என சொன்னார் .தாழ்த்தப்பட்டவரான முன்னாள் மந்திரி கக்கன் அவர்களை நேரடியாகப் பார்த்தால் பிரச்னை என ஒரு பசுவை நடுவில் நிறுத்தி தோஷம் கழித்துப் பார்த்தார் அப்போதெல்லாம் சாதிப்பற்று உச்சத்திலிருந்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது அதனை மாற்றி ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கும் சங்கர மடம் வழிகாட்டியாக ஆகும் நிலையை ஏற்படுத்திய தொண்டு ஜெயேந்திரருடையது . அவர் சித்தியடைந்தது பெரும் இழப்பே

Rate this:
01-மார்-201805:27:47 IST Report Abuse

 அகஸ்திய தொல்காப்பியர் ஐயர்MGR மூலமாக கிராம கோயில் பூசாரிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். கிராம கோயில்களின் காவல் தெய்வமாக விளங்கியவர். கலைஞர் மற்றும் எம் ஜீ ஆர் மூலம் மூடி கிடந்த பல கிராம கோயில்களை திறந்து கும்பாபிஷேகம் பல கண்டவர்.

Rate this:
01-மார்-201805:08:14 IST Report Abuse

 அகஸ்திய தொல்காப்பியர் ஐயர்1980 மற்றும் முந்தைய நெல்லை(மீனாட்சிபுரம், மண்டைக்காடு) மத கலவரங்களின் போது நேரிடையாக சென்று மக்களை அரவணைத்து கலவரத்தை அணைத்தவர். தலித்துகளை கோயிலில் விடா விட்டால் , அவர்களை தேடி கோயில் வரும் என்று சொன்னதோடு நிற்காமல் அவர்களின் பல கும்பாபிஷேங்களை நடத்தி காட்டியவர். அவர்களிடையே ஆன்மிக பலத்தை கூட்டியவர். இன்றைக்கும் அவரை நம்ப கூடிய பல விளிம்பு நிலை மக்களின் ஆன்மீக குருவாகவும் விளங்கியவர். ஆன்மீக விஷயத்தில் அவர் எல்லோர்க்கும் பொதுவானவர். எல்லா மத நூல்களையும் கற்று தெளிந்த ஆன்மீக குரு.

Rate this:
01-மார்-201804:51:14 IST Report Abuse

 அகஸ்திய தொல்காப்பியர் ஐயர்அனைத்து மதங்களுக்கும் இணக்கமாக நடந்தவர். சமய நூல்கள்,தேவாரம், திருப்புகழ் , பாசுரம் இவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஜன கல்யாண் சமூக புரட்சி இயக்கத்தை தொடங்கியவர். சமய தமிழை போற்றியவர். கல்வி சேவை, இலவச மருத்துவ சேவை, கண் மருத்துவ சேவை, கல்லூரிகள் , பள்ளி கூடங்கள் என சமூக சேவையை விரிவாக்கியவர். எதிரிகளின் சூழ்ச்சி வலையை தகர்த்து எறிந்தவர். ஷத்ரிய தர்மத்தையும், வேத தர்மத்தையும் போற்றி பாதுகாத்தவர். சமய தொண்டில் கடைசி மூச்சு வரை தன்னை ஈடுபடுத்தியவர். தான் செய்வதை தீர்க்கமாக செய்பவர். வாழ்க அவர்தம் புகழ். அவர் அருள் என்றும் அவரை நம்பாதவர்கள், நம்புபவர்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-மார்-201804:39:15 IST Report Abuse

Kasimani Baskaranஇந்துக்களின் காவலர் மறைந்தார்...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
01-மார்-201801:51:49 IST Report Abuse

அன்புபல தமிழர்களின் மதிப்பிற்குரிய ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தது வருந்தத்தக்கது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement