சொத்து வரி வசூல் இலக்கு ரூ.800 கோடி வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சொத்து வரி வசூல் இலக்கு ரூ.800 கோடி
வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கை

சென்னை:சென்னை மாநகராட்சி, 2017 - 2018 நடப்பாண்டின் சொத்து வரி வசூல், 593 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதனால், இந்த நிதியாண்டில், 800 கோடி ரூபாய் இலக்கை எட்டுவதற்கானநடவடிக்கையில், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள், தீவிரம் காட்டி வருகின்றனர்.

Property Tax,Revenue Department, Chennai Corporation, சொத்து வரி வசூல்,  வருவாய் துறை ,சென்னை மாநகராட்சி, மாநகராட்சி கமிஷனர், வருவாய் துறை ஊழியர்கள், 
Property tax collection,  corporation commissioner, revenue department employees,


சென்னை மாநகராட்சிக்கான வரி வருவாயில், பிரதானமானது, சொத்து வரி. நடப்பாண்டில், 800 கோடி ரூபாய் வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்குநிர்ணயித்துள்ளது.


நடவடிக்கை




இதில், நேற்று முன்தினம் வரை, 593 கோடி ரூபாய் சொத்து வரிவசூலிக்கப்பட்டுள்ளது. விரைவில், 800 கோடி ரூபாய் இலக்கை எட்ட, மாநகராட்சி வியூகம் வகுத்து, அதிரடி நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக,

அனைத்து மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில், வருவாய் துறை ஊழியர்கள், வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊழியர் பற்றாக்குறையால், மற்ற துறைசார்ந்த ஊழியர்களும், வரி வசூலில் ஈடுபட்டுவருகின்றனர்.


நடப்பாண்டின்இரண்டாவது அரையாண்டு முடிய, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தற்போதே, மாநகராட்சியின் சொத்துவரி வசூல், 593 கோடி ரூபாயை எட்டி உள்ளது.நாள் ஒன்றுக்கு, 2 - 3 கோடி ரூபாய் வரை வசூலாவதால், 800 கோடி ரூபாய் வரி வசூலிக்க முடியும் என, வருவாய் துறை ஊழியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


நோட்டீஸ்





சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது, 'நோட்டீஸ், சீல்' போன்ற நடவடிக்கையில், வருவாய் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதனால், சொத்துவரி செலுத்தாமல் உள்ளோர், உடனடியாக பணம் செலுத்தி வருகின்றனர்.மாநகராட்சி வருவாய் துறைஅதிகாரிகள்கூறியதாவது:


சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே, தற்போது, மாநகராட்சி வாங்கியுள்ள கடன் களை அடைக்க வும், முழுமையான கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் முடியும். கடந்த, 18 ஆண்டுகளாக

Advertisement

உயர்த்தப்படாத சொத்து வரியை சீராய்வு செய்து, வருவாய் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், ஆண்டிற்கு, 1,000 -- 1,200 கோடி ரூபாய் வரை, சொத்து வரி வசூலிக்க முடியும். இவ்வாறு அவர்கள்கூறினர்.


சொத்து வரி வசூல் குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு, தினமும் மண்டல வாரியாக பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது. அது மட்டு மின்றி ஒவ்வொரு வாரமும், சொத்துவரி வசூல் குறித்து, கமிஷனர்,மண்டல உதவி வரு வாய் அலுவலர்களிடம், தனித்தனியே வசூல் குறித்து கேட்டறிந்து வருகிறார். இதனால் அனைத்து மண்டல உதவி வருவாய் அலுவலர்களும், வசூலில் தீவிரமாக களம் இறங்கி வருகின்றனர். சொத்து வரி செலுத் தாதவர்கள் மீது, ஜப்தி நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201813:55:18 IST Report Abuse

Niranjanமக்களிடம் கொள்ளை அடிப்பதற்கு எல்லாம் இலக்கு. இலவசங்களையும் குற்றவாளிகளுக்கு சிலை வைப்பதையும் தவிர்த்தால் அரசாங்கம் வரிகளை குறைக்கலாம்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement