விடிவு! மார்ச், 15க்குள் காவிரி மேலாண்மை வாரியம் Dinamalar
பதிவு செய்த நாள் :
விடிவு!
மார்ச், 15க்குள் காவிரி மேலாண்மை வாரியம்
மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு தகவல்

காவிரி மேலாண்மை வாரியத்தை, அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நீண்ட நாட்களாக உள்ள இந்த பிரச்னைக்கு, விடிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

Cauvery verdict,Supreme Court ,Cauvery Management Board,காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு , காவிரி நடுவர்மன்றம் , காவிரி பிரச்னை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, பிரதமர் மோடி, காவிரி தொழில்நுட்ப பிரிவு, காவிரி தீர்ப்பு, Central Government, Cauvery Court, Cauvery dispute, Supreme Court verdict, Prime Minister Modi, Cauvery Technical Division, Cauvery judgment,


காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., நீரை,கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், காவிரி பிரச்னை தொடர்பான வழக்கில், சமீபத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழகத்திற்கான, தண்ணீரின் அளவு, 177.25 டி.எம்.சி.,யாக குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


'உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட, 14.75 டி.எம்.சி., நீரை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் கடத்தாமல், மத்திய அரசு அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் கூறி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தலைமை யில் நடந்த, அனைத்து கட்சி கூட்டத்திலும், இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, முதல்வர் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமரின் அனுமதியை பெற, அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது.


இதுகுறித்த நம்பகமான தகவல், மத்திய அரசு அதிகாரிகளிடம் இருந்து, காவிரி தொழில்நுட்ப பிரிவினருக்கு கிடைத்து உள்ளது. காவிரி வழக்கில், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட முடியாமல் ஏமாற்றம் அடைந்த, காவிரி

தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், இதனால், ஆறுதல் அடைந்து உள்ளனர்.


தங்கமணி சந்திப்பு



இதற்கிடையே, கவர்னர் மாளிகையில் தங்கிய, பிரதமர் மோடியை, தமிழக அமைச்சர், தங்கமணி, நேற்று முன்தினம் இரவு, தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர், காவிரி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து,அ.தி.மு.க., வட்டாரங்கள்
கூறியதாவது:பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர் பழனிசாமிக்கு மட்டும் அனுமதி தரப்பட்ட தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் சந்திக்கவில்லை

.
கடைசி நேரத்தில், மின் துறை அமைச்சர், தங்கமணி, பிரதமரை சந்தித்தார். ஏற்கனவே, டில்லியில், பிரதமர் மோடியை, மூன்று முறை சந்தித்து பேசியவர் என்பதாலும், தனக்கு நம்பிக்கையானவர் என்பதாலும், தங்க மணியை, முதல்வர் அனுப்பியுள்ளார். பிரதமருடனான, தங்கமணியின் சந்திப்பு, 10 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அனைத்து கட்சியினரும், பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுப்பது என, அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, பிரதமரிடம் விவரித்தார்.


கலெக்டர்கள் மாநாடு முடிந்த பின், முதல்வர் தலைமையில், கட்சி தலைவர்கள் தங்களை சந்திக்க, மார்ச், 8, 9 ஆகிய தேதிகளில், நேரம் ஒதுக்க வேண்டும் என, அனுமதி கேட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும், 'பிரதமர் கூறியதால், மீண்டும் இணைந்தேன்' என, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியது குறித்தும் பேச்சு நடந்துள்ளது.


அப்போது, தமிழக அமைச்சரவையில், சில முக்கிய முடிவுகளைஎடுக்கும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அது, எந்த மாதிரியான முடிவு என்பது, ரகசியமாக
வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


என்ன பலன்?



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதன் மூலம், பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.

Advertisement

குறிப்பாக, நதி நீரில் உரிய பங்கு மாநிலங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வது, பருவமழை பொய்க்கும்போது, எந்த அளவுக்கு பங்கீட்டை மாற்றிக் கொள்வது போன்றவற்றை மேலாண்மை வாரியம் முடிவு செய்யும்.


கனிமொழிக்கு முக்கியத்துவம்



காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க, அனைத்து கட்சி தலைவர்களையும் டில்லி அழைத்து செல்வதாக, முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தபோது, ஒவ்வொரு கட்சி தரப்பிலும், இரண்டு பேர் அழைக்கப் பட்டு இருந்தனர்.


டில்லி பயணத்தின்போது, ஒரு கட்சிக்கு ஒருவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, டில்லி செல்வதை தவிர்த்துவிட்டு, தி.மு.க., தரப்பில் கனிமொழியை அனுப்ப, ஸ்டாலின் திட்ட மிட்டுள்ளார். தமிழக காங்., தலைவர்கள், இந்த பயணத்தில் இடம்பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.


காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை காரணம் காட்டி, கர்நாடக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தற்போது, ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். டில்லியில் பிரதமரை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு, விவசாயிகளையும் அழைத்து செல்லவேண்டும்.


விஸ்வநாதன், தலைவர், ஏரி மற்றும்
ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-201817:06:19 IST Report Abuse

Endrum Indianநான் கூடத்தான் சொல்லுவேன், சோராதிலே ஒன்னும் நம்ம அரசு கொறைஞ்சதில்லே? காரியத்தில் தான் பின் வாங்குதல் ??? இந்த ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?? அவர்கள் சொன்ன நீரின் அளவு கொடுக்காவிடில் அதற்கு பெனால்டி என்ன???

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-பிப்-201814:35:12 IST Report Abuse

Cheran Perumalநம்ம கோவணாண்டி ஆடி கார் அய்யாக்கண்ணு இந்த குழுவுடன் பிரதமரை சந்திக்க செல்வாரா?

Rate this:
adalarasan - chennai,இந்தியா
26-பிப்-201811:51:21 IST Report Abuse

adalarasanகனிமொழி [குடும்ப தலைவரால்தான்]ஆங்கிலத்தில் பேச முடியும்staalin அவர்கள் முடிவு,அவரை மோடிமீட்டிங்க்கு அனுப்புவது சரியே சரியே

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
26-பிப்-201811:41:45 IST Report Abuse

Sathish இதற்க்கு ஒத்துவரவில்லை என்றால் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை அந்த மாநிலத்தின் மீது எடுக்கவேண்டும். காவிரி நீர் நமது உரிமை.

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
26-பிப்-201811:21:51 IST Report Abuse

C.Elumalaiமத்தியரசு, மேலாண்மைவாரியம் அமைக்கவேண்டும். கர்நாடக முதல்வர், முரண்டுபட்டால், காவேரி, அதன்அணைகளயும், ராணுவத்திடம் ஒப்படைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவுகளை, நிறைவேற்ற உத்திரவு தரவேண்டும். இவ்விஷயத்தில், மத்தியரசு உறுதியான நடவடிக்கைகள் தேவை. தமிழக டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் கிடைக்கும்.

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
26-பிப்-201811:17:57 IST Report Abuse

Sampath Kumarஇத அமைத்தால் தண்ணீர் கிடைக்குமா ??/ அவனுகளுக்கே தண்ணீர் இல்லை பின் உங்களுக்கு எப்படி கொடுப்பான் ?? ஒழுங்கா இங்க இருக்கின்ற கண்மாய் குளம் ஏறி போன்றவரை தூர்வாரி பராமரிப்பு செய்தலே போதுமானது தமிழ் நாட்டில் ஓடும் நதிகளை இணைப்பது , வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிப்பது போன்ற நீர் மேலாண்மை நிலை பாட்டை படுத்தினால் போதுமானது ஏறி கண்மாய்க்குள் வீடு கட்டுவது போன்ற விதைகளை நிறுத்துவது நல்லது

Rate this:
Samuel Prince - Tuticorin,இந்தியா
26-பிப்-201810:22:30 IST Report Abuse

Samuel Princeஉடனே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணுமாம்.ம்ம்ம்... மே.வா அமைச்சா மட்டும் உடனே... கோமணத்த இழுத்துகட்டி நாத்துநட்டு வெவசாயம் பாத்து அறுத்து தள்ளிடு வீங்களாக்கும் ? அப்பவும் ஓசி நெட்ல, 'மோடி ஒழிக' மீம்ஸ் தாண்டா போடப் போறீங்க. 91 TMC கொள்ளவுள்ள மேட்டூர் அணையில, 40 TMC தண்ணி தான் தேக்க முடியுது. 51 TMC கொள்ளவுக்கு சேரு நிறைஞ்சு நிக்குது. அத தூர்வாரச் சொல்லி, மாநில அரசுகிட்ட கேட்க துப்பில்ல. வருஷா வருஷம் மழை பேஞ்சா... கிட்டத்தட்ட 600TMC அளவு தண்ணி தேக்கி வெக்க வழியில்லாம, வீணா கடல்ல போய் கலக்குது. இதுல கர்நாடககாரன் கிட்ட யாசகம் கேட்டு கையேந்துறது, 200TMC க்கு. ...உங்க அரசியல் அரிப்புக்கு, கர்நாடக மாநில தேர்தல் வர்ற இந்த நேரத்துல, பிஜேபி வாயிலிருந்து, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்' குற வார்த்தைய வாங்கி, கர்நாடக சட்டசபை தேர்தல்ல பிஜேபிய சரிய வெக்கணும். அத சொல்லி சொல்லியே 2019 பாராளுமன்ற தேர்தல்ல, பிஜேபிய தோற்கடிக்கணும். இதுதான உங்க திட்டம்..

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
26-பிப்-201809:21:29 IST Report Abuse

mindum vasanthamCongress arasai thimuka ,seeman pondror kandipparkalaa

Rate this:
Prabhakaran - Delhi,இந்தியா
26-பிப்-201809:01:19 IST Report Abuse

Prabhakaranஎல்லோரும் குறித்து வைத்து கொள்ளுங்கள் இந்த சந்தர்ப்பவாத மத்திய அரசு தன் ஆட்சி காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போவதில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் இவர்களிடம் மனிதாபிமானம், நமது உரிமையை எதிர்பார்ப்பது தவறு.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
26-பிப்-201808:34:24 IST Report Abuse

balakrishnanவரவேற்போம், மத்திய அரசுக்கு வேறு வழியில்லை, மத்திய அரசு அமைக்கும் மேலாண்மை வாரியம் எப்படி இயங்குகிறது என்பதையும் பார்க்கவேண்டும், முதலில் அறிவிப்பு வரட்டும் வந்தால் தான் அதில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றது என்பதை பார்க்க முடியும்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement