குட்டித் தீவில் மோசடி மன்னன் நிரவ்? Dinamalar
பதிவு செய்த நாள் :
குட்டித் தீவில் மோசடி மன்னன் நிரவ்?

புதுடில்லி:வங்கி மோசடியில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பியுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான, செயின்ட் கிட்ஸ் தீவில் குடும்பத்துடன் பதுங்கிஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 Nirav Modi,Jathin Mehta,Little island, குட்டித் தீவு , மோசடி மன்னன், நிரவ் மோடி, வங்கி மோசடி, வைர வியாபாரி நிரவ் மோடி, செயின்ட் கிட்ஸ் தீவு, பஞ்சாப் நேஷனல் வங்கி, கீதாஞ்சலி, மெஹுல் சோக்சி, வின்சம் டயமன்ட் குரூப்ஸ், ஜதின் மேத்தா, 
 Fraudulent king, Bank fraud, Diamond Dealer Nirav Modi,
 St Kitts Island, Punjab National Bank, Gitanjali gems, Mehul Choksi, Vinsam Diamond Group,


பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் உதவியுடன், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான, 'கீதாஞ்சலி' என்ற பெயரில் நகை வியாபாரம் செய்யும், மெஹுல் சோக்சி உள்ளிட்டோர் மீது புகார்கள் எழுந்தன.


கடந்த மாத துவக்கத்தில், நிரவ் மோடி,

அவரது மனைவி ஆமி, சகோதரர் நீஷால் மோடி, மாமா சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றனர். பல அமைப்புகளின் விசாரணை நடக்கும் நிலையில், அவர்களது பாஸ்போர்ட்டை, மத்திய அரசு, நேற்று முன்தினம் இரவு முடக்கிவைத்தது. இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான செயின்ட் கிட்ஸில், நிரவ் மோடி உள்ளிட்டோர் பதுங்கிஇருப்பதாக தெரியவந்து உள்ளது.


அந்தத் தீவில், ஒரு சொகுசு பங்களாவை, நிரவ் மோடி ஏற்கனவே வாங்கி வைத்துள்ளார். குற்ற வாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் பல நாடு களுடன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயின்ட் கிட்ஸ் நாட்டுடன் அது போன்ற ஒப்பந்தம் செய்யப் படவில்லை.


மேலும், அந்த நாட்டின் குடியுரிமையை நிரவ் பெற்றுள்ளார். அதனால், அவர் அங்கிருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவரை நாடு கடத்துவது அவ்வளவு சுலபமில்லை என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், 15 வங்கிகளில் கடன் வங்கி, 6,800

Advertisement

கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, மற்றொரு வைர வியாபாரியான, 'வின்சம் டயமன்ட் குரூப்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளர், ஜதின் மேத்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அப்போது, அவரும், செயின்ட் கிட்ஸ் தீவில் அடைக்கலம் புகுந்தார்.


தற்போது அதே பாணியில் நிரவ் மோடியும் செயல்பட்டுள்ளார்.'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' உரிமையாளர் விஜய் மல்லையாவுக்குப் பின், மிகப் பெரிய வங்கி கடன் மோசடியில் ஜதின் மேத்தா இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது இந்தப் பட்டியலில், நிரவ் மோடி முதலிடத்தில்உள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
26-பிப்-201818:27:51 IST Report Abuse

Nagan Srinivasan11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடன் அதற்க்கு இந்தியா அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி அங்கீகாரம் தேவை இல்லையா? சோத்துக்கே வழி இல்லாது தவிக்கும் இந்தியா மக்கள் எத்தனை பேர்? இதில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கட்டாயம் தேவை

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-201816:46:40 IST Report Abuse

Endrum Indianஅரசு என்னவோ ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்கு, அரசு நினைத்தால் உடனே அவனை என்கவுன்ட்டர் பண்ணலாம். ஆனால் அதற்குள் நம்முடைய ஏவல்துறை கருங்காலிகள் உடனே செய்தியை நீரவ் மோடிக்கு சொல்லி தப்பிக்கவைத்து அதனால் பணம் பார்ப்பார்கள்.

Rate this:
26-பிப்-201816:33:45 IST Report Abuse

MuruganSolaimalaiExcept Mallaya all are Gujaratis....Starting from Harshath Mehtha of 1992 stock market scam. Need to be careful about them.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-பிப்-201816:02:40 IST Report Abuse

Pugazh V. ப. சிதம்பரத்தை பிடித்தால் போதுமாம். இதுக்கெல்லாம் வங்கி அதிகாரிகள் தான் காரணம் னு உங்களின் நிதி அமைச்சரே சொல்லிட்டார்..அப்புறமும் சிதம்பரத்தை புடி மீனாட்சியை புடி ன்னு எழுதுவதால் என்ன பிரயோஜனம்? 2014 க்கப்புறம் நிகழ்ந்த மோசடிகளுக்கு எந்த சிதம்பரத்தை புடிக்கறது? 2014 முதல் பிஜேபி ஆட்சி ஆச்சே?

Rate this:
Shan - kuwait,குவைத்
26-பிப்-201814:36:20 IST Report Abuse

Shanஇதற்கு உடந்தையா இருந்த வாங்கி அதிகாரிகளை தூக்கில் போடணும்.அதற்கு ஏற்ற மாதிரி சட்டங்களை மாற்றவேண்டும்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
26-பிப்-201814:23:43 IST Report Abuse

Kuppuswamykesavan///....மேலும், அந்த நாட்டின் குடியுரிமையை நிரவ் பெற்றுள்ளார்...///. ஆக திட்டமிட்டுத்தான், இங்கு வங்கியில் ஆட்டைய போட்டு, இப்போ அந்த தீவில் பதுங்கியுள்ளான் எனலாம்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
26-பிப்-201813:52:59 IST Report Abuse

Kuppuswamykesavanசரிப்பா, இந்த மோசடி பெருச்சாலி, அந்த தீவில் இருக்கு. அதை பின்னால் இருந்து, யாராவது இயக்கி இருப்பார்களே?. அந்த திமிங்கிலங்கள், இப்போ எங்க இருக்கு, என்ன பண்ணுது, அதை பார்த்து, அதுகளையும் பிடிங்கப்பா?.

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
26-பிப்-201813:23:03 IST Report Abuse

சிற்பி உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக... என்ஜாய்... யார யார் தண்டிக்க முடியும்.

Rate this:
razeshs - Connecticut,யூ.எஸ்.ஏ
26-பிப்-201812:42:47 IST Report Abuse

razeshsநம்ம சிங்கம் சூர்யா பார்ட் 4 இல் அவனை இழுத்து வருவார் , அதுவரை பொறுத்திருங்கள்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
26-பிப்-201811:57:38 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அந்தத் தீவில், ஒரு சொகுசு பங்களாவை, நிரவ் மோடி ஏற்கனவே வாங்கி வைத்துள்ளார். குற்ற வாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் பல நாடு களுடன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயின்ட் கிட்ஸ் நாட்டுடன் அது போன்ற ஒப்பந்தம் செய்யப் படவில்லை. மேலும், அந்த நாட்டின் குடியுரிமையை நிரவ் பெற்றுள்ளார்.. -

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement