ராஜ்யசபாவில் பெரும்பான்மை பா.ஜ., மேலிடம் எதிர்பார்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ராஜ்யசபாவில் பெரும்பான்மை
பா.ஜ., மேலிடம் எதிர்பார்ப்பு

புதுடில்லி:ராஜ்யசபாவில் காலியாகும், 58 இடங்களுக்கு அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தலின் மூலம், தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

NDA,Rajya Sabha, BJP, ராஜ்யசபா, பா.ஜ பெரும்பான்மை,  ராஜ்யசபா தேர்தல், முரளிதர் ராவ் , தேசிய ஜனநாயக கூட்டணி, 
 BJP Majority,Rajya Sabha election, Muralidhar Rao, National Democratic Alliance,


நட்பு



உ.பி., உள்ளிட்ட, 16 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 58 எம்.பி.,க்களின் பதவிக் காலம், விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து, அடுத்த மாதம், இந்த, 58 இடங்களுக் கும் தேர்தல் நடக்கஉள்ளது. உ.பி.,யில் இருந்து மட்டும், 10 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட

உள்ளனர். தற்போது, உ.பி., சட்டசபையில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருப்பதால், எட்டு எம்.பி.,க் களை, பா.ஜ.,வால் தேர்வு செய்ய முடியும்.


இதேபோல்,ராஜஸ்தானிலிருந்து, மூன்று எம்.பி.,க்களை, பா.ஜ.,வால் தேர்வு செய்ய முடியும். மேலும், பா.ஜ., வின் கூட்டணி கட்சிகள், நட்பு ரீதியிலான, கட்சி களும், கணிசமான, எம்.பி.,க்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது.


இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: விரைவில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலின் மூலம், தே,ஜ., கூட்டணிக்கு அதிக, எம்.பி.,க்கள் கிடைக்க உள்ளனர்.


வாய்ப்பு



இதன்மூலம், ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு தேவையான, 254 இடங்கள் கிடைத்து விடும்.
ஏற்கனவே, ராஜ்யசபாவில், 58, எம்.பி.,க்களை பெற்று, தனிபெரும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்து

Advertisement

உள்ளது.இனி, தே.ஜ., கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைத்து விடும். தற்போது பெரும்பான்மை இல்லாத தால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.


பெரும்பான்மை கிடைப்பதன் மூலம், நிலுவை யில் உள்ள அனைத்து மசோதாக் களையும் நிறைவேற்ற முடியும். முரளிதர் ராவ் உள்ளிட்ட, கட்சியின் பொதுச் செயலர்களாக பதவி வகிக்கும் பலருக்கு, ராஜ்யசபா தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-201816:48:34 IST Report Abuse

Endrum Indianஅய்யய்யோ அப்போ காங்கிரஸ் கதி? அதோ கதியா? நிர்கதியா???

Rate this:
sachin - madurai,இந்தியா
26-பிப்-201812:00:56 IST Report Abuse

sachinபாராளுமன்றத்தில் ஒன்னும் கிடைக்காதே 2019 இல் ....ராஜ்யசபாவில் இருக்கும் எண்ணிக்கை எதற்கு ??....எல்லா பட்ஜெட்டும் முடிந்து விட்டது ......இனி கூட்டத்தொடர் பாஜக வுக்கு மிக சவாலாக இருக்கும் ...மக்கள் மத்தில வெறும் ஸிரோ தான் பாஜக தற்போது .......

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
26-பிப்-201814:41:32 IST Report Abuse

Sridharபட்ஜெட்டுக்கு ராஜ்யசபா தேவையில்லை. மற்ற பல மசோதாக்கள் தங்கி நிற்கின்றனவே அவைகள் இந்த வருடத்தில் சட்டமாகும். இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையுடைய ஆளும் கட்சிக்கு பாராளுமன்றம் எப்படி சவாலாக இருக்கமுடியும்? மேலும் ராஜ்யசபா பெரும்பான்மை அடுத்த ஐந்தாண்டுகள் தொடரும். தப்பித்தவறி கொள்ளை கும்பல் மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், அவர்களுடைய அராஜகத்திற்கு அந்த பெரும்பான்மையால் கொட்டு வைக்கமுடியும். மக்கள் மனதில் பிஜேபி வெறும் ஸிரோ என்கிறீர்களே, எந்த மக்கள் மனதில்? பெருவாரியான இந்திய மக்கள் இன்றும் மோடி பின்னால் தான் நிற்கிறார்கள். அவருக்கு தான் எதிரிகளே இல்லையே? இருக்கும் பழைய அரசியல்வாதிகளில் பாதிபேர் சிறையில் இருக்கிறார்கள். மீதி பேர் அங்கு செல்லயிருக்கிறார்கள். ராவுல் கண்டி ஏற்கனவே பெயிலில் தான் வெளியிலே சுற்றிக்கொண்டு இருக்கிறார். லாலுவுக்கு பெயில் கிடைக்கவில்லை பாவம். மமதாவும் கெஜ்ரியும் இப்பவோ எப்பவோ னு நாளை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். வேறு யார்? பன்னீரா போய் பிரதமராக்கமுடியும்? நரி போல கனவு கண்டு கொண்டிருக்கும் ராவுல் பாவம். மோடி ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் செய்தால், ஓட்டுகள் மொத்தமாக பிஜேபிக்கு வந்து விழும். மோடி இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தியாவின் தேவை. நாதாரிகளின் கையில் நிறைய நாட்கள் நாடு நசுங்கி சிதைந்து விட்டது. இனிமேல் அவ்வாறு நடக்க முடியாது....

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-பிப்-201810:48:47 IST Report Abuse

Manianஇது நாள்வரை மோடிஜியின் கையை காட்டி போட்ட எதிர்கட்சிகளை மீறி, பல மசோதாக்கள், சட்டங்கள் நிறைவேறும். சரித்திரத்தில் தன் பெயர் நிலைக்க வேண்டும்- நரசிம்ம ராவ் -பொருளாதார விடுதலை வஜேபெயி - தங்க சக்ரா நாற்காலி, இந்திரா- வங்க தேச பிரிவு- இத்துடன் மோடி : இந்திய முன்னேற்றம் என்று சொல்லப்படுவார். அரேபியாவில் இந்துக்கோவில்கள் கிடையாதி- ஒரு கடவுள் போட்டொ கூட கிடையாது. எனவே, முஸ்லீம் வந்திரிகளின் ஜிகாதிகளை அடித்து நொறுக்கி விரட்டி இந்து நாடு- அமைதியாக இருந்தகள் எந்த மதமும் சம் மதம், இல்லாட்டி கல்தா என்பது வரவேற்கவேண்டியது.

Rate this:
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
26-பிப்-201810:29:53 IST Report Abuse

வெற்றி வேந்தன் பிஜேபி ராஜ்ய சபாவில் அறுதி பெரும்பான்மை பெற்று, இந்த மக்களுக்கான நல்ல சட்டடங்களை எதிர்ப்பின்றி இயற்றி, அனைத்து மக்களையும் சகோதரர்களாக சன்டையின்றி வாழ மோடி சிறப்பான ஆட்சி செய்ய வாழ்த்தும்....

Rate this:
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
26-பிப்-201809:05:13 IST Report Abuse

Vaideeswaran SubbarathinamIt is a welcome news.Stalling of the proceedings will take a backseat.

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
26-பிப்-201808:31:20 IST Report Abuse

ஜெயந்தன்அங்கே பெரும்பான்மை வரும்போது பாராளுமன்றதில் பிஜேபி காணாமல் போய் விடும்..2019 தேர்தல் முடிவுகள் அப்படித்தான் இருக்கும்..

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-பிப்-201808:16:27 IST Report Abuse

ஆரூர் ரங்நாம் ஒரே ஒரு தமிழரை லோக்சபாவுக்குக் கொடுத்திருந்தாலும் பாஜக திறமைக்குமதிப்புக்கொடுத்து மேலும் மூன்று தமிழர்களுக்கு வேற்று மாநில ராஜ்யசபா மற்றும் லோக்சபா சீட்டுகளை கொடுத்துள்ளது பல எம்பிக்களைக்கொடுத்துள்ள மாநிலங்களுக்குக்கூட இதுபோன்ற சீனியர் மந்திரி இலாக்காக்கள் கொடுக்கப்படவில்லை ஆனால் நமக்குத்தான் நல்லது செய்பவர்களைப்பிடிக்காதே

Rate this:
TamilReader - Dindigul,இந்தியா
26-பிப்-201807:42:06 IST Report Abuse

TamilReaderகொள்ளை அடிப்பதற்கு நல்ல வழி

Rate this:
vns - Delhi,இந்தியா
26-பிப்-201806:01:43 IST Report Abuse

vnsபிஜேபி இன்னும் நூறு வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும்

Rate this:
RENU - Chennai,இந்தியா
26-பிப்-201805:56:37 IST Report Abuse

RENUமேலிடம் கீழிடம் ஒண்ணுமே புரியல

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement