1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி | கிக்-2 வில் ஜாக்குலின் நடிக்கிறார் | அப்பாவுடன் நடிப்பு : சோனம் கபூர் பயத்துடன் எதிர்பார்ப்பு | நமஸ்தே இங்கிலாந்து பர்ஸ்ட் லுக் வெளியீடு | லவ்ராத்திரி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்றான ராமாயணம் இதுவரை பல்வேறு திரைப்படங்களாக வெளிவந்துள்ளது. சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்க பலரும் முயற்சித்து வந்தனர். தற்போது அது கைகூடி வந்திருக்கிறது.
பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், நமித் மல்கோத்ரா, மது மந்தீனா ஆகியோர் இணைந்து 500 கோடி ரூபாய் செலவில் ராமாயணத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். ராமாயண கதை பெரும்பாலும் உத்தர பிரதேசத்தில் நடப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருவதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் அவினாஷ் குமாரும், தயாரிப்பாளர்களில் ஒருவரான மது மந்தீனாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
"ராமாயணம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகும். நவீன 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது. இது 3 பாகங்களாக வெளிவரும். நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இந்தியாவின் முக்கிய இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார்" என்றார் தயாரிப்பாளர் மது மந்தீனா.
"உத்தரபிரதேச மாநிலத்தில் ராமாயணம் படப்பிடிப்பு நடத்த எல்லா விதமான உதவிகளையும் அரசு செய்யும்" என்றார் தலைமைச் செயலாளர் அவினாஷ்குமார்.