ஊழல் நாடுகள் பட்டியல்: 81 வது இடத்தில் இந்தியா Dinamalar
பதிவு செய்த நாள் :
ஊழல் நாடுகள் பட்டியல்: 81 வது இடத்தில் இந்தியா

புதுடில்லி:சர்வதேச அளவில், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா, 81வது
இடத்தில் உள்ளது.


கடந்தாண்டில், ஊழல் அதிகம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியலை, ஐரோப்பிய நாடான, ஜெர்மனியைச் சேர்ந்த, 'டிரான்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது.


இந்த பட்டியலில், பொதுத் துறையில், ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப் படுத்தபட்டு உள்ளன. 2016ல், ஊழல் அதிகம் நிறைந்த, 176 நாடுகளின் பட்டியலில், இந்தியா, 79வது இடத் தில் இருந்தது. கடந்தாண்டில், 180 நாடுகளின் பட்டியலில், இந்தியா, 81வது இடம்

பெற்றுள்ளது . ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், நியூசிலாந்து, டென்மார்க் நாடுகள் முதலிடத்தில் உள்ளன. சிரியா, தெற்கு சூடான், சோமாலியா போன்ற நாடுகள், ஊழல் அதிகம் நிறைந்த நாடு களாக உள்ளன. இந்த பட்டியலில் சீனா, 77வது இடத்திலும், பிரேசில், 96வது இடத்திலும், ரஷ்யா, 135வது இடத்திலும் உள்ளன.


இந்தியாவின், அண்டை நாடுகளான, பாகிஸ்தான், 117வது இடத்திலும், இலங்கை, 91வது இடத்திலும், வங்கதேசம், 143வதுஇடத்திலும் உள்ளன. ஊழல் குறைவாக உள்ள நாடு, முதலிடத்திலும், மிக அதிகமாக உள்ள நாடு, கடைசி இடத்திலும் இருக்கும் வகையில்,இந்த பட்டியல் தயாரிக்கப் பட்டு உள்ளது.


டிரான்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பினர்

Advertisement

 ஊழல் நாடுகள், பட்டியல், 81 வது, இடத்தில், இந்தியா

கூறியதாவது: ஆசிய - பசிபிக் நாடுகளில், பத்திரிகையாளர்கள், சமூக அமைப்புகள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள், ஆட்சியாளர்களால் மிரட்டப் படுவதும், கொலை செய்யப்படுவதும், ஊழல் அதிகம் பரவ காரணமாக உள்ளது.


பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள், ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (12+ 44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
23-பிப்-201809:02:13 IST Report Abuse

balakrishnanஇந்தியாவை உயர்த்தாமல் விடமாட்டார் என்று தோன்றுகிறது நமது பிரதமர், அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் இல்லை என்று மறுக்க முடியாது, அதையும் மீறி இந்திய முன்னேறுகிறது என்றால் அவருடைய வேகம் போதாது,

Rate this:
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
23-பிப்-201807:17:03 IST Report Abuse

Jey Kay - jeykay@email.comகைப்புள்ள அவர்களே. ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து தான் உதயமாகிறது, தேர்தல்களில் கட்சிகள் போட்டியிட பணம் அவசியம் என்பது ஒரு முக்கிய காரணம். அவற்றை கட்சியும் போட்டியிடும் வேட்பாளராமே திரட்ட வேண்டியிருப்பதால் லஞ்சம் பெறுகின்றனர், ஆட்சியில் இருக்கும் கட்சிகளும் கண்டுகொள்வதில்லை. இந்திய அரசு இந்தியாவில் உள்ள கட்சிகளின் எணிக்கையை குறைத்து, தேர்தலில் போட்டியிட இந்திய அரசே காட்சிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி நமது அரசியல் சட்டத்தையும் ஓரளவிற்கு கடுமைப்படுத்தி, நீதிமன்ற வழக்குகளை துரிதப்படுத்தினால் துரிதம் லஞ்சம் ஓரளவிற்கு கட்டுக்குள் வரும்.

Rate this:
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
23-பிப்-201805:52:03 IST Report Abuse

Chandrasekaran Narayananஇதில் கூட நாம் முதலிடத்தில் இல்லையா?

Rate this:
23-பிப்-201804:06:41 IST Report Abuse

 அகஸ்திய தொல்காப்பியர் ஐயர்இப்பெல்லாம் லஞ்சம் னாலே குறைஞ்சது 2000 ரூபாய் .

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-பிப்-201809:07:53 IST Report Abuse

balakrishnanஅப்படியானால் நாடு வளமாக இருக்கிறது என்று அர்த்தம், மக்க்களின் வாங்கும் திறன், கொடுக்கும் திறன் வளர்ந்திருக்கிறது...

Rate this:
23-பிப்-201803:36:02 IST Report Abuse

 அகஸ்திய தொல்காப்பியர் ஐயர்அப்படியாவது அந்தந்த மாநிலங்களில் நடக்கும் ஊழல் மூலமான பணங்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்தால் நல்லது. இந்த ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதுதான் வேதனை.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
23-பிப்-201803:34:13 IST Report Abuse

ramasamy naickenஇது வைர மோசடிக்கு முன்பா? பின்பா? மாநிலம்களில் தமிழ்நாட்டுக்கு தானே முதல் இடம்? அதெற்காகத்தானே அம்மையார் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்தார்?

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
23-பிப்-201803:04:46 IST Report Abuse

Appavi Tamilanஅய்யா. அதுக்குள்ளே ஏன் அவசர படுறிங்க. இப்போதான் லலித் மோடி, மல்லய்யா, நீரவ் போன்ற தியாகிகளை வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் எத்தனை நல்லவர்கள் உள்ளனர்? அவர்களையும் செட்டில் செய்ய வேண்டுமல்லவா? இன்னும் ஒரு ஆண்டு இருக்கு. அதுக்குள்ளே நம்ம நாட்டை சோமாலியா நாட்டை தோற்கடித்து 180 வைத்து இடத்திற்கு கொண்டு சென்றுவிடுவார் கருப்பு பணத்தை ஒழித்த மாவீரர். அதற்கு பிறகு நாமெல்லாம் சேர்ந்து விழாவே எடுக்கலாம். போட்டோ நிறைய்ய எடுக்கிறோம் என்று சொல்லி அழைத்தால் உறுதியாக விழாவிற்கு வருவார். அதுவரை பொறுத்திருப்போம்.

Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
23-பிப்-201802:10:01 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)காசு வாங்கிட்டு வோட்டு போடுறதுல தமிழ்நாடு முதலிடம். தினமும் 50000 லாரி மணல் கடத்துவது, முப்பதாயிரம் கோடி டாஸ்மார்க் விற்பனை என்று யாரும் நெருங்க முடியாத மாநிலம் தமிழ்நாடு.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
23-பிப்-201801:19:08 IST Report Abuse

அன்புஅச்சா தின் வந்துட்டு

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
23-பிப்-201801:06:03 IST Report Abuse

கைப்புள்ளஊழலுக்கு ஒரு முடிவுரை எழுதுவதை எங்கிருந்தாவது எழுதியே ஆக வேண்டும். எங்கிருந்து எழுதுவது என்று தெரியவில்லை என்று சாக்கு போக்கு சொல்லுவதை விட்டு, அதிகாரிகள் மட்டத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதத்துக்கும் ஊழல் செய்த அதிகாரிகள் இவ்வளவு பேர் தண்டிக்க படுவார்கள் என்று டார்கெட் வைத்து களை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தரும் தண்டனைகள் ஊழலை களை எடுக்கும் அளவுக்கு புது சிந்தனைகளோடு இருக்க வேண்டும். இதற்க்கு கண்டிப்பாக மாநில அரசுகளும், மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். முதலில் ஊழலை ஒழிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டு மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல் பட வேண்டும்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
23-பிப்-201802:06:42 IST Report Abuse

Manianஎன்னங்க, அரசியல் வியாதிங்களுக்கு லஞ்ச் கொடுத்தே அரசாங்க வியாதியானவவங்க இதுக்கெல்லாம் ஒத்துழைப்பாங்களா? இட ஒதுகீடு இல்லாத, ஜாதி-மதம் மூலம் வேலை வாங்குன தனியார் நிருவனங்களிலும் திறமையானவர்களை களை எடுத்தா, இ்த பிரச்சினையே வராதே...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement