புதுடில்லி:பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த, வைர வியாபாரி, நிரவ் மோடியிடமிருந்து கடனை வசூலிக்கும் நடவடிக்கையை, வங்கி நிர்வாகம் துவங்கியுள்ளது. 'வாங்கிய கடனை, தவணை முறையில் திருப்பி செலுத்தும் திட்டத்துடன் அணுகினால், அது பற்றி பரிசீலிக்கப்படும்' என, பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி, நிரவ் மோடி, அவரது உறவினர், மெஹல் சோக்சி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11,400 கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் தெரிய வந்தது.
தப்பி ஓட்டம்
வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நிரவ் மோடி, அவரது மனைவி மற்றும் உறவினர்
சோக்சி உள்ளிட்டோர், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.இதற்கிடையே, மும்பையில் உள்ள வங்கிக் கிளைக்கு, நிரவ் மோடி, சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், அவர் கூறியிருந்ததாவது:
என் நிறுவனங்கள், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை, 5,000 கோடி ரூபாய்க் கும் குறைவு தான். ஆனால், தவறான தகவல் களை பரப்பி, என் நிறுவனத்தின் பெயரை கெடுத்து விட்டீர்கள். இதனால், என் தொழிலும் அழிந்துவிட்டது.வங்கி சார்பில் அவசரம்
அவசரமாக புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையால், என்
வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன. பல ஆண்டுகளாக, கோடிக்கணக்கான பணத்தை
வங்கியில் செலுத்தி உள்ளேன்.
என் சொத்து மதிப்பு, 6,500 கோடி
ரூபாய்; அதை விற்பனை செய்தால் கூட, வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை,
என்னால் அடைத்து விட முடியும்; இப்போது அதற்கான காலம் கடந்து விட்டது. என்
மனைவி உள்ளிட்ட உறவினர் களுக்கு, தொழிலில் தொடர்பு கிடையாது. ஆனால், அவர்கள் மீதும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.
கடிதம்
இதையடுத்து, நிரவ் மோடிக்கு பதில் அளித்து, பஞ்சாப் நேஷனல் வங்கியின் சர்வதேச பிரிவின் பொது மேலாளர், அஸ்வினி வாட்ஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:வங்கி அதிகாரிகள் சிலரின் உதவியுடன், சட்ட விரோதமாக கடன் பொறுப்பு உத்தரவாத கடிதங்களை பெற்றுள்ளீர்கள். நீங்கள் பெற்ற கடனுக்கு உறுதியளிக்கும் வகையில், எந்த தொகையும் செலுத்தவில்லை. கடனை திருப்பி செலுத்தும் காலத்தையும் குறிப்பிடவில்லை.
எனினும், கடன் தொகையை திருப்பி செலுத்து வதற்கான உறுதியான திட்டங்கள் உங்களிடம் இருந்தால், குறிப்பாக, தவணை முறையில் செலுத்த விரும்பினால், அது பற்றி, எங்களுக்கு தெரிவியுங்கள்; நிச்சயம் பரிசீலிப்போம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நிரவ் மோடிக்கு வழங்கப் பட்டுள்ள கடனை சட்டப்படி மீட்க, வங்கி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் துவங்கியுள்ளது. இந்த முறைகேடு குறித்து, பிப்.,
14ல் தான், தெரிய வந்தது.புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும்
என்பதால், சி.பி.ஐ.,யிடம் புகார் செய்தோம்.
இதுபற்றி பகிரங்கமாக வெளியில் தெரிவித்தால்,
கடனை திரும்ப பெறும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்என்பதால், பங்கு சந்தை அமைப்பில், முதலில் தெரிவிக்கவில்லை. முதல் கட்ட விசாரணை அறிக்கை கிடைத்த பின், இந்த முறைகேடு பற்றி, வங்கி நிர்வாக குழு, மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை ஆகிய வற்றிடம் தெரிவித்தோம்.
இந்த முறைகேட்டால், வங்கி பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது; அதை சமாளிக்க, வங்கி யிடம் தேவையான சொத்துகள், முதலீடுகள் உள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சொகுசு கார்கள் பறிமுதல்
நிரவ் மோடியின் மோசடி பற்றி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு நடவடிக் கையாக, நிரவ் மோடிக்கு சொந்தமான இடங் கள், கடைகள், அலுவலகங்களில், அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, சொத்துகளை கைப்பற்றி வருகின்றனர்.
'மியூச்சுவல் பண்டு' மற்றும் நிறுவன பங்கு களில், நிரவ் மோடியும், சோக்சியும் முதலீடு செய்திருந்த, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. அத்துடன், நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான, ஒன்பது சொகுசு கார்களும், பறிமுதல் செய்யப்பட்டன. 'கீதாஞ்சலி' குழுமத்திற்கு சொந்தமான, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து