'அரசியல்வாதிகள் கடவுள் அல்ல' மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி Dinamalar
பதிவு செய்த நாள் :
'அரசியல்வாதிகள் கடவுள் அல்ல'
மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை:'அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; கடவுளும் அல்ல' எனக் கூறிய, மும்பை உயர் நீதிமன்றம், சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த, இரு அரசியல் பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது.

Politicians,High Court,  swamp forest,அரசியல்வாதிகள், மும்பை உயர் நீதிமன்றம், மாங்குரோவ், சதுப்புநில காடு, பரசுராம் மஹாத்ரே, அனிதா பாட்டீல்,பா.ஜ.,சிவசேனா,  Bombay High Court, Mangrove, Parshuram Mahatre, Anita Patil, BJP, Shiv Sena, Slough,


பொதுநல மனு



மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா

கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2016ல், பாரத் மொகால் என்பவர், மும்பை ,உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:பா.ஜ.,வைச் சேர்ந்த, பரசுராம் மஹாத்ரே, சிவசேனாவை சேர்ந்த, அனிதா பாட்டீல் ஆகியோர், 'மாங்குரோவ்' எனப்படும் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமித்து, வீடு மற்றும் அலுவலகங்களை கட்டிஉள்ளனர்.


அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்குகின்றனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், உள்ளூர் தாசில்தார் விசாரணை நடத்தி, சதுப்புநில பகுதியை அழித்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து, அறிக்கை தாக்கல்செய்தார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று, இந்த வழக்கை நீதிபதிகள், எஸ்.சி.தர்மாதிகாரி, பாரதி டாங்கிரி ஆகியோர் விசாரித்தனர்.

Advertisement


உத்தரவு:

அப்போது, 'அரசியல்வாதிகள் சட்டத் திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; கடவுளும் அல்ல. எனவே, ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகள் மீது, போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'குற்றஞ்சாட்டப் பட்ட, பா.ஜ., -சிவசேனாவைச் சேர்ந்த, பரசுராம் மற்றும் அனிதா பாட்டீல் மீது, ஒரு வாரத்திற் குள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-201815:50:38 IST Report Abuse

Endrum Indianவழக்கு பதிவு செய்ய உத்தரவு? கேஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிகவும் தவறான செயல் என்று தெரியும் போது தண்டனை என்ன என்று தீர்ப்பு சொல்லாமல் வழக்கு பதிவு செய்யுங்கள், விசாரணைக்கு வரட்டும் அதை இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என்று சொல்லலாம் என்பதே இந்த அநீதிமன்றத்தின்/ அநீதிபதியின் பேச்சின் சாரம்.

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
23-பிப்-201815:04:52 IST Report Abuse

தாமரை அரசியல் வாதிகள் அதிலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் என்றால் கொம்பா முளைத்துள்ளது. உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rate this:
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
23-பிப்-201812:06:12 IST Report Abuse

Muthukrishnan,Ramதான் படுத்து உறங்க, அரசு புறம்போக்கு நிலத்தில் 2 சென்ட் இடம் மட்டுமே எடுத்து குடியிருப்போரை மனிதாபமான இல்லாத அரக்க குணம் கொண்டு அவர்களுக்கு இம்சை தரும் பேரூராட்ச்சிகளே, அரசு நிலங்களை ஏக்கர் கணக்கில் வளைத்து போட்டு வியாபாரம் செய்பரை ஏன் ஒரு வார்த்தை சொல்வதில்லை. பயமா???

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
23-பிப்-201811:17:38 IST Report Abuse

Kurshiyagandhiமுதலில் அரசியல்வாதிகள் மனிதர்களே அல்லர்..

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
23-பிப்-201810:58:15 IST Report Abuse

நக்கீரன்அரசியல்வாதிகள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உட்பட யாருமே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், உண்மை நிலை என்ன? வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சட்டங்களுக்கு தாங்கள் மட்டுமே சொந்தக்காரர்கள் என்றும், தாங்கள் நினைத்தால் அதை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற நினைப்பு. அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டுதான், சிவகங்கையில் ஒரு பேருந்து ஓட்டுநர் வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்ளும் ...தாக்கப்பட்ட சம்பவம். முதலில், நீதிமன்றங்கள் தங்கள் மேல் உள்ள குறைகளை சரி செய்துகொள்ளட்டும். அந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து ...களையும் தகுதி நீக்கம் செய்து இனி வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-பிப்-201810:24:26 IST Report Abuse

Lion Drsekarநீதியரசர்கள் பதவியையே இவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள் . கடவுளுக்கே இவர்கள் நினைத்தால் மட்டுமே வாழ்வு என்றாகிவிட்ட நிலையில் ஜனநாயகம் செத்து அழுகி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது, வந்தே மாதரம்

Rate this:
23-பிப்-201809:50:09 IST Report Abuse

ushadevanபல அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல.பணம் தான் இவர்களின்குறிககோள்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-பிப்-201808:56:45 IST Report Abuse

balakrishnanஅவ்வப்போது இந்த நீதிமன்றங்கள் ஏதாவது ஒரு சில நல்ல விஷயங்களை சொல்லி, கொஞ்சமாவது அழிவில் இருந்து காப்பாத்துது, இல்லாவிடில் அடுத்த தலைமுறைக்கு என்று இல்லை, இந்த தலைமுறை ஜனங்களே இந்தியாவின் இயற்கை வளங்களை இழந்துவிடுவார்கள் ,பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் மறைந்துவிடும்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-பிப்-201808:31:31 IST Report Abuse

ஆரூர் ரங்கட்டாயம் பா.ஜ., -சிவசேனாவைச் சேர்ந்த, பரசுராம் மற்றும் அனிதா பாட்டீல் மீது, உடனே , போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
23-பிப்-201807:53:53 IST Report Abuse

Varun Rameshஅரசு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதான நடவடிக்கையை கூட தாமதப்படுத்தலாம் ஆனால் அவர்களுக்கெதிராக புகார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கிய, தவறிய காவல் துறையின் மீது கட்டாயம் உடனடி நடவடிக்கை வேண்டும்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement