My party's name is 'Makkal Neethi Maiyyam': Kamal Haasan | புதிய அரசியல் கட்சி துவக்கினார் நடிகர் கமல்: Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புதிய அரசியல் கட்சி துவக்கினார்  நடிகர் கமல்:

மதுரை: இனி நட்சத்திரமாக இல்லாமல் உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன்.ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். என புதிய கட்சியை துவக்கி வைத்து நடிகர் கமல் பேசினார்.

புதிய அரசியல் கட்சி துவக்கினார்  நடிகர் கமல்:

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை, நடிகர் கமல் இன்று துவக்கினார். . மதுரையில், இன்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் , கட்சி கொடி ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். இதில் டில்லி முதல்வர்

கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

வண்டாளம் வெளியே வரும்



இந்நிலையில், மதுரை ஒத்தகடையில் இன்று மாலை நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் ‛‛மக்கள் நீதி மய்யம்'' என அறிவித்து கட்சியின் கொடியையைம் கமல் அறிமுகப்படுத்தினார். முன்னதாககாலை, 7:45 மணிக்கு, அரசியல் பயணத்தை, ராமேஸ்வரத் தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வீட்டில் இருந்து, கமல் துவக்கினார்.
கட்சி பெயர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தி நடிகர் கமல் பேசியது, சினிமா நட்சத்திரமாக இல்லாமல் ,உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன். 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணியை செய்து கொண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதிான் இது. கடந்தவை கடந்தவைகளாக இருக்கும்; ஆனால் மறந்தவையாக

Advertisement

இருக்காது.

இங்கு எங்கள்தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும் நாள். இந்த அநீதிகளை பார்த்துக்கொண்டு நாம் எத்தனை காலம் அமைதி காப்போம். மக்கள் நலனே எனக்கு பிரதானம். இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை. இங்கு நல்ல மனத்திற்கு தான் பஞ்சம். நாம் துவங்கியிருக்கும் நியாயப்போரின் தமிழர்படை தான் இது.

நல்ல முதல்வர்களுக்கு இருக்கும் கொள்கை தான் எனக்கு உண்டு.நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்.எனக்குப் பிறகும், நாலைந்து தலைமுறைக்கு இந்த கட்சி இருக்க வேண்டும்.பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி தண்ணீர் நமக்கு கிடைக்கும். சிலர் தான் பிரச்னையை துாண்டி விடுகின்றனர்.பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போட்டால், அவர்களை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. இவ்வாறு
பேசினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,இந்தியா
22-பிப்-201800:10:02 IST Report Abuse

அன்புவாழ்த்துக்கள். இதுவரை கொள்கையை தெரிவிக்க வில்லை. கட்சி பெயர் சுருக்கமாக மக்கள் நீதி என்று இருந்தால் பரவா இல்லை. மய்யம் நொய்யம் என்று எதற்கு? இப்போதாவது முழுநேர அரசியல்வாதியாக மாற போகிறாரா? அல்லது ரெண்டு மாதத்திற்கு பிறகுதான் அடுத்த அறிக்கையா? மக்களை சந்திக்க மனம் இருக்கிறதா? என்று பல கேள்விகளுக்கு விடை இல்லை. மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு துணிவு இருக்கிறதா? வெறும் மாநிலத்தை மட்டும் எதிர்த்து கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது. ஏனனில் இந்தியாவில் மாநிலம் என்பது உப்புக்கு சப்பாணி. அதிலும் மோடி வந்தபிறகு, வரி போடும் உரிமையை கூட மத்திய அரசு எடுத்து கொண்டது. அதனால் மாநிலத்தை மட்டும் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதை கமல் உணரவேண்டும். பெரும்பாலான தமிழகத்தின் பிரச்சனைகள் மத்திய அரசின் கையில் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதனால் மத்திய மற்றும் மாநில எதிர்ப்பு அரசியலை கமல் கையில் எடுக்க வேண்டும். மத்தியில் உள்ள பிஜேபி தான் கமலை களத்தில் இறக்கி உள்ளதால், பிஜேபியை கமல் எதிர்க்க மாட்டார் என்பது நிச்சயம். ரஜினி அதிமுக கட்சியின் ஓட்டுக்களை பிரிக்க, கமல் திமுகவின் ஓட்டுக்களை பிரிக்க, பிஜேபி யால் இறக்கிவிடப்பட்டுள்ளனர். கமலை எதிர்ப்பது போன்று பிஜேபி நாடகம் ஆடுகிறது. எல்லாம் திமுகவின் ஓட்டை பிரிக்க தான்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-201821:53:59 IST Report Abuse

Mani . Vவாழ்த்துக்கள் சகோதரா தங்களின் மக்கள் நலப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement